Friday, 13 October 2023

                              தாயே ...!


சிறுகதை 042/2023                                                                                             14-10-2023


"ம்மா ....! "

"ம்‌ம் ...சொல்லு ...."

" அம்மா இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஓடி விட்டன .."

" ஆமாம் "

" ஆனால் இன்றும் வறுமையும் , வேலை இல்லா திண்டாட்டமும்

   இருக்கிறதே ...? "

" ஆமாம் "

" மக்களுக்கு விடிவே வராதா ...?"

" தாயே உங்களால் இதை செய்து முடிக்க முடியுமா ...?"

" எதை ...? "

"புரட்சியை ....! "

" மம் ...நான் மட்டும் அல்ல எந்த தெய்வம்-மும் செய்ய முடியாது .."

" ஏன் ...?"

" தெய்வங்கள் நாத்திகவாதிகள் ...மனித விஷ்யங்களில் தலை 

  இட மாட்டார்கள் ..."

" பின் யார் தான் செய்வார்கள் ...?"

" மக்கள் தான் செய்ய முடியும் ...! "

" தாயே ...இங்கு மக்களுக்காக வேலை செய்பவர்கள் ஒன்று பட்டு 

  இல்லையே ...?"

" தெரியும் "

" பின் எப்படி செய்ய முடியும் ...?"

" 1917-ல் ருஸ்சியாவிலும் , 1949-ல் சீனாவிலும் எப்படி நடந்த்தது ...?"

" அவை தோல்வியில் முடிந்து விட்டதே ...? யார் காரணம் ...?"

"நீ மார்க்ஸியம் படித்தவன் தானே ? நீயே கண்டுபிடி ..."

" தாயே ...நக்ஸல்பாரி இயக்கம் தவறுதலாக நாடு முழுக்க 

  இயங்கி ...பின்.....காரணம் இல்லாமல் 40/45 குழுக்களாக பிரிந்து 

  விட்டனரே ...?"

" ஆம். ஏன் பிரிந்தார்கள் ...?"

" இங்கு உள்ள முதலாளி தேசிய முதலாளியா ...? அல்லது தரகு முதலாளியா

  அல்லது பாராளுமன்றத்தை பயன் படுத்தி கொள்ளலாமா என சின்ன 

  கரணங்களுக்குகாகவே பிரிந்து விட்டனர் ..."

" ஒரு நிமிடம் ...தண்ணீர்..வாட்டர் ,பாணி எல்லாம் ஒன்று தானே ...?

  அதே போல் முதலாளி-யும் ஒன்று தான் . அவன் தான் பாட்டாளி 

 வர்க எதிரி ...."

" தாயே என்ன சொல்கிறீர்கள் ? பாராளுமன்றதில் பங்கு எடுத்தாலும் 

  அர்பணிப்பு இல்லமால் போகுமா ...?"

" என்ன சொல்கிறீர்கள் ...?"

" உங்களுக்கு தொழிலாளி -விவசாய ஆட்சி வேண்டுமா ...? அல்லது 

  உங்கள் கட்சி ஆட்சி வேண்டுமா ...?"

"புரியவில்லை "

" ஏன் ருஸ்சியாவிலும் , சீனாவிலும் என்ன நடந்ததது ...? ஏன் பொது 

  உடமை கட்சி உலகம் முழுக்க பரவ வில்லை ..."

" சொல்லுங்கள் தாயே ...!"

" கட்சியின் சர்வாதிகாரமே காரணம் ..."

" கட்சி இல்லமால் புரட்சி நடக்குமா ...?"

" நான் அப்படி சொல்ல வில்லை . கட்சி 100% ஜனநாயக தன்மை 

  கொண்டு இருக்க வேண்டும். எல்லா தரப்பு மக்களின் பிரச்சனைகளை 

 புரிந்து வைத்து இருக்க வேண்டும்.   "

" தாயே ...என்ன செய்ய சொல்கிறீர்கள் ...?"

" அவர்களை ஒன்று இணைக்க வேண்டும் ..."

" நீ என்ன எழுதினாய் ...?

                              1. ஏகாதிபத்திய எதிர்ப்பு 

                              2. முதலாளித்துவா எதிர்ப்பு 

                              3. நில உடமை எதிர்ப்பு 

                             4. பாட்டாளி வர்க நல்வாழ்வு 

                             5. உலக சகோதரத்துவம் 

இந்த 5 அம்சங்களை ஏற்று  கொள்பவர்கள் ஒன்று இணைய வேண்டும் "

" புரட்சியாளர்கள் தனி தனி குழுக்களாக உள்ளனர் . நான் தனிமனிதன் 

  நான் என்ன செய்ய முடியும் ...?"

"நில்லு ..நீ புரட்சிகாரனாக இருந்தவன் தானே ...?"

" ஆம் .தாயே ...! "

"பிறகு என்ன தயக்கம் ..? எல்லா குழுக்களுக்கும் இந்த 5-அம்ச 

 திட்டத்தை அனுப்பி வை ..."

" தாயே ...நான் சில குழுக்களுக்கு அனுப்பி வைத்தேன் . யாரும் 

  கண்டு கொள்ளவில்லை ...! "

" எனக்கு தெரியும் "

" தாயே ...!"

குறுங்க்குழுவாதமும் , வறட்டுவாதமும் அவர்களிடம் என்றுமே உள்ளது .

இதை எதிர்த்து போராடினால் மட்டுமே ஒன்று பட்ட கட்சி உருவாகும் "

" அம்மா ...! எனக்கு நம்பிக்கை போய்விட்டது..."

"உன்னால் முடிந்த வரை போராடு ...பயனை எதிர்பார்க்காதே ...!

 வீண் கவலை வேண்டாம் ..."

"செய் அல்லது செத்து மடி என்று காந்தி சொல்லவில்லையா ...? உன் 

இறுதி மூச்சு உள்ளவரை உண்மைக்காக போராடு ...! "

"தாயே நான்னா ...?"

" ஆம். உன்னால் முடியும் ...!"

"தாயே ...நான் என்ன செய்ய வேண்டும் ...?"

" லெனின் என்ன சொன்னார் ? உன் மனதிற்கு உண்மை என தோன்றும் 

  கருத்திற்காக  ....உன் மனம் சொல்லும் படி நட என்றார் அல்லவா ..?"

" தாயே ...! நான் உங்களுடன் பேச வேண்டும் என்றால் நான் என்ன 

செய்ய வேண்டும்...? "

"ம்‌ம் ....உனக்கு உள்ளே இருக்கும் உள்ளுணர்வு நான் தான் . 


                           " தாயே ...ஸரஸ்வதியே ....!

                             போற்றி போற்றி ...!!

                             மிக்க நன்றி ...!!!

      முடிந்தவரை போராடுவேன் ...!


பி‌. கு .     :   இதுவும் "சரியலிச " கதை /உரையாடல் 


R.சத்திய நாராயணன்     சத்யன்     ஸ்ரீ விவேக்     சின்ன சேவகன் 

                                                  14-10-2023




                            டேய் ....!

சிறுகதை 041/2023                                                                                    14-10-2023


" டேய் ..உன்னைதானே நம்பி இருக்கேன். ஏன் எனக்கு உதவி செய்ய 

  மறுக்கிறாய் ...? "

" என்ன உதவி வேணும் ...? "

" போச்சுட ...போச்சு ...உனக்கு என்னை பத்தி தெரியுமா ...? அல்லது 

  தெரியதா ...? "

"  நன்கு தெரியும் ...! "

"  அப்புறமா நீ ஏன் என் கூட பேச மாட்டிங்கறே ..? "

"  அதான் ....இப்போ உன் கூட பேசிக்கிட்டு தானே இருக்கேன் ? "

" டே ..டேய் ...உனக்கு என் பிரச்சனை தெரியதா ..? எனக்கு கல்யாணமும் 

   ஆக வில்லை. வருமானமும் இல்லை...! "

" சரி ..அதற்கு நான் என்ன செய்யட்டும் ...? "

" இப்படி விட்டேத்தியா பேசாதே ...!"

" சரி ...நான் என்ன பண்ணனும் ...? "

"  எனக்கு வழி காட்டு ..."

" ஓ ...! "

" டேய் உன்னை விட சிறந்த நண்பன் எனக்கு யாரும் கிடையாது ...
  
  இது உனக்கு தெரியாதா ...? "

" நான் உனக்கு நண்பனா ...? "

" ஆமாம் . நண்பன் , தத்துவ ஞானி , வழி காட்டி எல்லாமே நீ தான் .."

" கொஞ்சம் விவரமா சொல்லு ...! "

" டேய் ...எல்லாம் தெரிஞ்சிருந்தும் என்னையே கேள்வி கேட்கிறாயா ..? "

" ம்ம் ....சொல்லு ...! "

" டேய் எனக்கு ஒரு பிரச்சனை ..."

" உனக்கு என்னிக்குதான் பிரச்சனை இல்லாமால் இருந்ததது "

" டே ...டே ..நக்கல் வேண்டாம் ...! "

"  சரி ..பிரச்சனையை சொல்லு..."

" டே ....நாளை மறு நாள் அயல் நாட்டிலிருந்து என் அண்ணனின் மகன் 

  சபரிஷ் வருகிறான் . அவனுடன் பொழுதை கழிக்க ஆசை படுகிறேன் "

" மம் ...மேலே சொல்லு "

" நான் தோள் மீது போட்டு வளர்த்தவன் "

" இதிலே என்ன பிரச்சனை ...மேலே சொல்லு "

" எனக்கு முதுகலை சரித்திரம் பரீட்சை டிசம்பரில் உள்ளது . எனக்கு 

  படிக்க முழுதாக படிக்க குறைந்ததது 2 மாதம் வேண்டும் ..."

" சரி இதில் என்ன பிரச்சனை ...? "

" நான் படிப்பதை போன வாரமே நிறுத்தி விட்டேன்..."

"  ஏன் ..? "

" அவன் வருவதக்ற்கு 3 நாட்கள் உள்ளன . என்ன செய்யலாம் என 

  யோசனை கூட இல்லை ..."

"  மேலே சொல்லு "

" பிளாகில் கதை எழுதி வருகிறேன். இது வரை 40 கதைகள் எழுதி  விட்டேன் 

   இப்போது கதை எழுத கரு கிடைக்கவில்லை ..."

"  உனக்கு சிந்திக்க முடியவில்லையா ...? "

"ஆம் . அதனால் தான் உன்னிடம் ஐடியா கேட்கிறேன் ..."

" நான் என்ன ஐடியா குடுக்க முடியும் ..."

" டே ..அப்படி சொல்லாதே...."

" இல்லை . நீ ஆர அமர யோசித்து பார் . உனக்கு கதை கிடைத்து விடும் "

" என் மூளை வறண்டு போய் உள்ளது "

" சரி .....நான் யார் ...?"

" என் நண்பன் "

" உனக்கு என் மீது நம்பிக்கை உள்ளதா ...? "

" சத்யமாக 100% உள்ளது ..."

" அப்புறம் என்ன யோசனை ...? பேனா , பேப்பர் எடு எழுது ..."

" என்ன கரு என்றே யோசிக்க முடியவில்லை ...? "

" நீ எழுத எழுத வார்தைகள் தானே வெளிவரும் "

" உண்மையாகவா ...?"

" சத்யமாக "

"டே ...! உண்மையா ...? "

" ஆம் .100% உண்மை ..."

" சரி ...எழுத முயற்சிக்கிறேன் ..." 

" சரி. வாழ்துக்கள் .யாரை பற்றி எழுதுவது என முடிவு செய்து விட்டாயா ? "

" டேய் ..தெரியாது போல் கேள்வி கேட்கிறாய் ...நான் உன்னை பற்றி 

  தான் எழுத போகிறேன்.... "

" என்னை பற்றியா ...?"

" ஆம் . ஒரு சந்தேகம் என் அக்கா போன வாரம் குருவாயூர் சென்று 

   இருந்தார். நான் அவரிடம் உன் போட்டோவை வாங்கி வர சொன்னேன் .

  என்ன ஆச்சர்யம் ..? உன் அழகு உச்சம் . ஆனால் நான் ஒன்றை 

  கவனித்தேன் . உன் மார்பில் பூணூல் இல்லை ...."

" சரி ..இதில் என்ன ?  நீ பூணூல் போட்டு இருக்கிறாயா ...? "

" இல்லை "

"ஏன் ...? "

" எனக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை ..."

" அப்போ ..எனக்கு ஜாதிகள் உண்டா ...?"

" புரியவில்லை "

" உனக்கு என்ன வேண்டுமோ அது தான் கிடைத்து உள்ளது "

" அப்புறம் ஒரு சந்தேகம் ..."

"கேள் "

" நீ லெமூரியா கண்ட தாவுதல் (CONTINENTAL SHIFT ) நடைபெறும் 

 முன் தென்மதுரையில் இருந்த முதல் தமிழ் சங்கத்தில் பங்கு 

பெற்றதாக என் பாடத்தில் வருகிறது ...அது உண்மையா ..?"

" நீயே கண்டுபிடி ..."

"டேய் ..ஒரு நாள் கூட நான் உன்னை எண்ணாமல் இருந்தது இல்லை "

" தெரியும் "

" நீ எனக்குள் இருந்தாலும் உன்னை காண வேண்டும் என தீராத 

  ஆசை "

" அது தான் உனக்கு போட்டோ கிடைத்து விட்டதே ...?"

" ஆம் "

" நீ அதை பார்த்து பேசினால் நான் நிச்சயம் பேசுவேன் ...!"

"நான் தினமும் உன்னை தியானிக்கிறேன் "

" நான் சொல்வது உங்களுக்கு கேட்கிறதா ...?"

" ஆம் . அதை உன் தியான ஸ்லோகத்தை அப்டியே எழுது . அது 

 போய் சேர வேண்டிய இடம் சென்று விடும் ..."

                               முருகா போற்றி 

                              ஸ்கந்தா போற்றி 

                              ஞான கடவுளே போற்றி 

                              தமிழ் கடவுளே போற்றி போற்றி 

                                           என்றும் 

                                           எங்கும் 

                                           எப்போதும் 

                                           எனக்குள் குடி இருந்து 

                                          என்னை 

                                          சீராக சிரமம் இன்றி 

                                         சிறப்பாக 

                                         இயக்கி வைக்கும் படி 

                                         அன்புடன் 

                                         தியானிக்கிறேன் ... ! ! ! ! ! ! ! 

                    ஓம் சரவணபவ ...!!! !!!

பி‌.கு : இது ஒரு "சரியலிச கதை /உரையாடல் 

R.சத்திய நாராயணன்         சத்யன்    ஸ்ரீ விவேக்     சின்ன சேவகன் 

                                              14-10-2023

  

Friday, 6 October 2023

                                        

                          இஸ்மாயில் 

சிறுகதை 040/2023                                                                                   07-10-2023

டீ கடை .

இது நூலகம் போல .

நல்ல புத்தகங்களுக்கு ஈடாக நல்ல நண்பர்கள் கிடைக்கும் இடம். 

சுமார் 10 ஆண்டுக்குக்கு முன் மெயின் ரோடில் ஒரு டீ கடை இருந்ததது.

தினமும் காலை மாலை இரு நேரங்களிலும் செல்வேன். மாலையில் 

நண்பர்கள் வருவார்கள். சரவணன் , குமார். பூபதி , சுரேஷ், வினோத் என்று 

ஒரு நீண்ட பட்டியல் . டீ கடை முதலாளி, மற்றும் டீ மாஸ்டர் எல்லாருமே 

நண்பர்கள். நான் அவர்களிடம் அரசியலும் பேசுவேன் ...ஆன்மீகமும் 

பேசுவேன். டீ கடைக்கு பக்கத்தில் ஒரு 10 அல்லது 15 கடைகள் . மேல் 

தளத்தில் சில ஆபீசுகள் மற்றும் கடைகள். 

                       நவீனமயமாக்கம் இந்த பில்டிங்யை விடவில்லை . எல்லோர் 

வயற்றிலும் அடித்து பில்டிங்யை இடித்து என்பிஎல்ட் ( இரு சக்கர வாகனம் )

பெரிய ஷோ ரூமை கட்டிவிட்டார்கள் .எனக்கு அந்த டீ கடை ரொம்ப 

பிடிக்கும். அதிகாலை 3 மணிக்கே திறந்து விடுவார்கள் . ஒரு நாய் 

பட்டாளம் என்னை விடவே விடாது . நான் பிஸ்கட் வாங்கி போடுவேன்.

சரி அந்த டீ கடையை பற்றி ஏன் எழுதுகிறேன் என்ற விஷயத்திற்கு 

வருகிறேன். 

                      மாலை 5 மணி முதல் 7 மணி வரை பல டீ .+ தம் . மேல் தளத்தில் 

வேலை செய்பவர் தான் இஸ்மாயில் . அவர் 5 மணிக்கு சிகெரேட் குடிக்க

 வருவார். என்னிடம் தான் லைட்டர் வாங்குவார் . அதில் பழக பழக நாங்கள் 

நல்ல நண்பர்கள் ஆணோம் . பிறகு 6 மணிக்கு வருவார். அப்போது ஒரு 

தம். அவரிடம் நான் என்ன பேசினேன் என எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.

பொதுவாகவே பேசினோம் . 

                      அவர் பார்பதற்கு 30 அல்லது 35 வைது போல் தான் இருந்தார். 

நிறம் மிக வெள்ளை. ஒல்லியான உருவம். சற்று குட்டை . ஒரு நாள் கடையில் 

உள்ளே உட்கார்ந்து பேசும் போது அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ..?

 மேலும் எத்தனை குழந்தைகள் என கேட்டேன். அவர் மீண்டும் ஒரு சிகெரேட் 

பற்ற வைத்து விட்டு பேச ஆரம்பித்தார் .

                     " சார் ..எனக்கு இளம்வயதில் கல்யாணம் ஆகி விட்டது . எனக்கு 

இரண்டு குழந்தைகள் ....பார்க்க மிக அழகு .  நான் அப்போது தென்

 ஆப்ரிகாவில் குடி இருந்தோம் . ஒரு நாள் ஷாப்பிங் செல்ல என் மனைவியும் 

குழந்தைகளும் என் காரில் போனார்கள் . நான் அவர்களை உயிருடன் 

பார்த்தது அதுவே கடைசி ...! "

என் மனம் சற்று பதறியது . மேலே அவரே சொன்னார். 

" அவங்க போன கார் மீது லாரி மோதி கார் சுக்கு நூறாக உடைந்தது .

மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். "

" சார் ....உங்க கஷ்டம் புரிகிறது . இது எப்போது நடந்ததது ..?"

"  25 வருடங்கள் ஆகிவிட்டது . ஆனால் அவர்கள் என் மனசில் தான் 

   குடி இருக்கின்றன்ர். "

" சார்...தப்பா எடுக்காதீங்க ...நீங்க ஏன் மறுபடியும் கல்யாணம்

 செய்யவில்லை ...?  "

" சார்..... என் மனைவியை நான் இப்போதும் காதலித்து கொண்டு 

 தான்  இருக்கிறேன் . என் குழந்தைகள் என் நெஞ்சை விட்டு அகல வில்லை..."

இஸ்மாயில் பேசியது எனக்கு ஷாக் . அவர் எந்த பதட்டமும் இன்றி சர்வ 

சாதாரமாக பேசினார். 

" சார் ...நான் சந்தோஷமாக வாழ்ந்த காலத்தை நினைத்தே என் 

 காலத்தை ஒட்டுகிறேன் ..."

" சார்....நீங்க மறுபடி கல்யாணம் செய்தால் வாழ்க்கை சற்று மாறுமே ..?"

" இல்லை சார்.   என் மனைவியை என்னால் மறக்க முடியவில்லை . இது 

   இப்படி இருக்க நான் எப்படி மறுகல்யாணம் செய்ய முடியும்... ? "

" சார் ...."

" ஆம் . சார் .நான் என் மனைவியை இப்போதும் காதலித்து கொண்டே 

    இருக்கிறேன் . மறு கல்யாணம் என் வாழ்வில் நினைத்து பார்க்கவே 

   முடியாது ...! "

இஸ்மாயில் எந்த வித வேதனை , துக்கம் எதுவுமே இல்லாமல் மெதுவாக 

ஆனால் ஆணித்தரமாக பேசினார். அவர் பேச்சில் உண்மை இருந்ததது.

உறுதியும் இருந்ததது.

" சார் நீங்க ரொம்ப வித்யாசமானவர் ..."

" அப்படி எல்லாம் இல்லை. ...

                                    நான் என் மனைவியை மிகுந்து காதலிதத்தேன்  .
 
                                    என் குழந்தைகள் மீது கொள்ளை பாசம் .

                                   சார் ....நான் கிழம்புறேன் .....! "

அவர் சொல்லி விட்டு போய் விட்டார் . எனது லப் -டப் அதிகரித்தது .

                                  இஸ்மாயில் மாமனிதர் ...!

                                  அவரது காதல் அழிவு இல்லாதது ...!!

                                 அவரது பாசம் எல்லை அற்றது ,,,!!!

                                 அவருக்கு நிகர் அவர் மட்டுமே  ...!! !!

                                 இஸ்மாயில்  என் உள்ளத்தை 


                 உலுக்கியவர் ...!


R .சத்திய நாராயணன்        சின்ன சேவகன்           07-10-2023    
                              

 


                        மணி ஆச்சு ...!

சிறுகதை 039/2023                                                                      07-10-2023


17--06-1911 

" நாதா ...!  ! "

"ம்ம் "

" மணி ஆச்சு ..."

"ம்ம் "

"நாதா ..அதை எடுத்து கொண்டாயா ..?"

" எடுத்து கொண்டு விட்டேன் "

" பின் ஏன் புறப்பட தாமதம் ...?"

" இதோ புறப்பட்டு விட்டேன் . நான் காளி மற்றும் பாரத மாதவை 

  வணங்க வேண்டும் ..."

" சரி ...நாதா ...பயப்படாதே..."

"   ம்ம் "

நாதன் கண்களை மூடிக்கொண்டு காளி தேவியை வணங்கினான்.

பிறகு ' பாரத மாதா " வை தியானித்தான்  .தியானதிற்கு பிறகு 

பாரத மாதாவின் கால்களை தொட்டு தன் கண்களில் ஒற்றி கொண்டான் .

" தோழர்களே ...நான் தயார் .நான் உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன் "

அங்கு 4 பேர் இருந்தனர் . ஒவ்வொருவராக நாதனை கட்டி பிடித்து 

பிரியாவிடை கொடுத்தர்கள் . 

" பாரத மாதாவிற்கு ஜெய் " என்று சொல்லி கிளம்பினான் .


மணி ஆச்சு ...! 

திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் மணியாச்சி ஸ்டேஷன் வந்ததது .

நாதன் மிக நிதானமாக நடந்தான் .

ரயில் மணியச்சியில் 10 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் . நாதன் 

மிக மிக பொறுமையுடன் முதல் வகுப்பு பெட்டி நோக்கி நடந்தான் .

கடைசி கோச் முன்பாக முதல் வகுப்பு பெட்டி இருந்ததது .

நாதன் வந்து விட்டான் .

மணி ஆச்சு ...!

நாதன் முதல் வகுப்பு பெட்டி கதவை திறந்தான் . ஒரு ஆங்கில துரை,

மற்றும் அவன் மனைவி இருந்தனர்.

ஆம் .

ஆஷ் துரை தான் .

வ.உ .சி மற்றும் சிவாவை சிறையில் அடைத்து பெரும் சித்திரவதை-க்கு 

காரணமான அதே ஆஷ் துரை தான் .

நாதன் தன் பாக்கெட்-லிருந்து துப்பாக்கியை  எடுத்து ஆஷ் துரையை 

சுட்டான் . ஆஷ் துரை இறந்தான் .

உடனே ...நாதன் பொது கழிப்பிடம் சென்று துப்பாக்கியால் தன் 

தலையில் சுட்டான். அவனது மூளை சிதறியது .

ஆம் ...!

நாதன் வேறு யாரும் அல்ல .

வாஞ்சிநாதன் தான் .

பயங்கர வாதம் தீர்வு அல்ல. ஆனால் தான் கொண்ட தேச பற்றின் 

காரணமாக அந்த வழியை தேர்ந்து எடுத்தான் .

ஆனால் அவனிடம்      

                                       தேச பற்று 
 
                                       தியாகம் 

                                      அற்பணிப்பு 

இவற்றிக்கு வாஞ்சிநாதனிடம் குறைவே இல்லை. இந்திய சுதந்திர 

போராட்டதில் இது போல் எங்கும் இந்த மாதிரி நிகழ்வு நடக்கவில்லை .

வ. உ. சி. யை செக்கு இழுக்க வைத்த , சிவாவிற்கு தொழுநோய் வர 

காரணம் ஆஷ் துரை தான் என முடிவு செய்து ஆஷ் துரையை 

கொன்றான். 

                            ஒரு வேளை ....இந்த தியாகம் , தேச பற்று மற்றும் 

அற்பணிப்பு இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு 

வருமே ஆனால் ...ஒரு எரிமலை வெடிக்கும் . 

                          அது ஆயிரக்கணக்கான  துப்பாக்கிகளுக்கு சமம் ...!

                          அது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளுக்கு சமம் ...!!

                          அதுஆயிரக்கணக்கான  அணுகுண்டுகளுக்கு சமம் ...!!!

நமக்கு சம தர்ம நாட்டை உருவாக்க பயங்கரம் அற்ற கோடிக்கணக்கான 

இளைஞர்கள் அவசியம் .

                          இதுவே நமது இன்றைய தேவை.
           
                          பயங்கரவாதம் அல்ல ...!

                          வாஞ்சிநாதனின் தியாகம் , அற்பணிப்பு உள்ள 

                          மக்களே தேவை...!! 

                          வாஞ்சிநாதனின் தியாகம் பரவட்டும்.

                           வாஞ்சிநாதனுக்கு வீர வணக்கம் ...!

                           வாஞ்சிநாதனின் அற்பணிப்பு பரவட்டும் ...!!

  வாஞ்சிநாதனின் தியாகம் 

                       
பரவட்டும்...!


R. சத்திய நாராயணன்    சின்ன சேவகன்           30-09-2023