Friday, 25 August 2023



                   என் குப்பைகள் ...!                                    26-08-2023              சிறுகதை 028/2023


யாருக்கும் எதற்கும் பயன்படாதது குப்பை தானே ...? என் குப்பைகள் 

அசாதாரணம் ஆனவை . மிகுந்த அக்கறை-யுடன் , கற்பனை-யுடன் 

என்னை முழுமையாக ஈடுபடுத்தி எழுதபட்ட சினிமா திரைக்கதை-வசனம் 

கொண்ட சினிமா ஸ்க்ரீப்டுகள் தான் அவை .


சுமார் 20 வருடங்களுக்கு முன் ....

நான் ஊட்டியில் இருந்தேன் . எனக்கு நான் சினிமா எடுக்க வேண்டும் என்

ஆசை பிறந்தது. நான் யார் இடமும் ஸ்கிரிப்ட் எழுத கற்று கொள்ள வில்லை.

எல்லாம் என் சுய முயற்சி மட்டுமே. ஆம் . Self -Taught....! நான் ஸ்கிரிப்ட் எழுத 

7 நாட்களுக்கு மேல் எடுத்து கொண்டது இல்லை. ஆனால் நான் கடைசியாக 

எழுதிய " உஷ் ...!" மட்டும் 28 நாட்கள் ஆனது. எனது ஸ்க்ரீப்டுகளில் மிக 

கவனம் எடுத்து ஒரு சிறந்த ஸ்கிரிப்டை உண்டாக்கினேன் . எனவே நான் 

சினிமாவில் கால் பதிக்க " உஷ் "-ஐ தேர்வு செய்தேன் .எப்படியும் சினிமா 

டைரக்டர் ஆவது என சென்னை வந்தேன்.

அம்மம்மா ...!

அப்பப்பா ....! !

நான் எடுத்த முயற்சிகளுக்கு அளவே இல்லை. Bad LUCK .


குப்பை 01    :   லப் -டப்     :   நாயகன் ஹோமியோபதி மாணவன் . நாயகி 

                             அல்லோபதி மாணவி. நாயகன் நாயகியை காதலிக்கிறான் .

                             ஆனால் நாயகி அவன் காதலை மட்டும் அல்ல அவனையே 

                             தூக்கி எறிகிறாள் . மனம் நொந்த நாயகன் நாயகியின் 

                            ஆஸ்பத்ரியில் மாறு வேடம் போட்டு ஒரு நடிகையின்

                            குழந்தைக்கு( Blue Baby ) இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக 

                            செய்து முடிக்கிறான் . சட்ட விரோதமாக தான் செய்த தவறை 

                           நாயகி வீட்டில் பிரஸ் மீட் ஏற்பாடு செய்து காதலிக்கு மாரல் 

                          பனிஷ்மெண்ட் கொடுக்கிறான் . பின் சரண் அடைகிறான் .

                                                    

                                                  வழக்கு வரும்.....!

                                                  வாழ்க்கை தொடரும் ...!!


குப்பை 02 :   வித்யா விஜ்யம்

                           துர்கா , லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி      நாரதரின் 

                         கலகத்தால் பூமியில் சாதாரண பெண்ணாக பிறக்குகிறார்கள் .

                        அவர்களுக்கு அவர்கள் யார் என்று தெரியாது . வாழ்வில் பெரும் 

                         சோதனைகளை சந்தித்து பைத்தியம் பிடித்து மன நல மருத்துவ 

                        மனையில் சந்திக்கின்றன்ர். அவர்களுக்கு அமனுஷியசக்தி 

 கிடையாது .

                      . அவர்கள் ஒரு பத்திரிகை நிருபர் ( நாரதர் ) உதவி 

                       பெற்று ஒரு பெண் இயக்கத்தை துவங்குகீறார்கள் .

                                                     NO to 33....!

                                                    We நீட் 50 ....!! :  

                        என சென்னை வீதியில் இயக்கம் துவங்க படம் முடிவடைகிறது.


குப்பை 03 :   த்ரிஷா  :    ஒரு சாதரண நாயகன் மனநோய் பிடித்து சினிமா 

                          கவர்ச்சி நடிகையை காதல் செய்கிறான் . எவ்வளவோ முயற்சி 

                        எடுக்கிறான் . எல்லாம் படு தோல்வி. சென்னை வந்தும் த்ரிஷாவை 

                        பார்க்க முயற்சி செய்கிறான் . ஆனால் முடியவில்லை . இந்த 

                       நேரத்தில் ஒரு விபத்து நடக்கிறது . அவன் சுயஉணர்வு

                        இழக்கிறான். அவன் டைரி விபத்து நடந்த த்ரிஷாவின் கார் 

                        பக்கத்தில் கிடைக்கிறது . நாயகனுக்கு மனநோய் சரியாகி 

                       போகிறது . அவன் தன் சொந்த ஊருக்கு ஊட்டி செல்கிறான் .

                       த்ரிஷா அவன் டைரியை படிக்கிறாள் .

                      2 நாட்களுக்கு பின்...

                      நாயகன் வீட்டிற்கு த்ரிஷா வருகிறாள் .

                     இருவரும் சேருகின்றனர் .

                     நகைச்சுவை  உணர்வு உள்ள படம் .


குப்பை 04  :    சுமை :   இதுவும் நகைச்சுவை படம் . யாஷ்பால் கமிட்டி 

                           பல வருடங்களுக்கு முன் ஒரு அறிக்கை தந்தது . அதன் படி 

                           5-ம் வகுப்பு வரை மாணவர்கள் புத்தக சுமை சுமக்க வேண்டாம் .

                           வீட்டு பாடமும் கொடுக்க வேண்டாம் என பரிந்துரை செய்து 

                          உள்ளது . நாயகனின் மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது 

                         முதுகில் எழும்பு முறிவு ஏற்படுகிறது . அவனை சுமை இன்றி 

                         பள்ளிக்கு அனுப்ப நாயகன் எடுக்கும் முயற்சிகள் தான் 

                         சினிமாவின் கதை .

                        கடைசியில் ஒரு கழுதை வாங்கி பள்ளிக்கு தன் மகனை 

                       அனுப்புவது தான் முடிவு.

                      இதிலும் நகைச்சுவை உணர்வு அதிகம் .


குப்பை 05 :  "உஷ் ...!"   :  எனது மாஸ்டர் பீஸ் . 28 நாட்கள் எடுத்து கொண்டேன் .

                         நாயகன் ஒரு போலீஸ் ஆபிசர் . நாயகி ஒரு பத்திரிகை நிருபர்.

                        பட்ட பகலில் 2 கொலைகள் நடக்கின்றது . போலீஸ் நாயகியை 

                        சந்தேகம் கொள்கின்றனர். நாயகன் அவளுடன் பழகி

                        உண்மையை வெளி கொண்டு வர முயற்சிக்கிறான் .

                       நாயகிக்கு கொலைகாரன் யார் என்று தெரிகிறது . அவள் 

                      சாட்சியங்களை அழிக்கிறாள் . கொலைகரனே கொலையை 

                       துப்பு துலக்க வருவது ஸ்கிரிப்டின் உச்சம் .

                     ஆம் .

                     நாயகன் தான் கொலையாளி , அது அவனுக்கு தெரியாது .

                    நாயகி அவனை காதலிக்கிறாள் . அவனை வேறு துறைக்கு 

                   மாற்றி அவனை கல்யாணம் செய்கிறாள் .

                   அவள் ரசிகர்களுக்கு சொல்வது தான் " உஷ் ...!"


                                சரி .

                                5 குப்பைகள் பற்றி எழுதி விட்டேன் .

                                இத்தனைக்கும் எல்லாம் பதிவு செய்து உள்ளேன் ...!

                               என்ன பிரயோஜனம் ...?

                               20 ஆண்டுகளுக்கு மேலாக தூசி படிந்து என் ஆவண 

                              குப்பைகளில் தூங்குகின்றன ....

                              எனக்கு தூக்கம் வராதது தான் மிச்சம் .....! ! ! ! ! 


 பி. கு.   :             நான் 5 அல்லது 6 ஆண்டுகளாக சினிமா முயற்சி

 .                          விட்டு விட்டேன் .   

                          ச்சீ ...ச்சீ  ....இந்த பழம் புளிக்கும் ...! ! ! ! !


R. சத்ய நாராயணன்      ஸ்ரீ விவேக்     சத்யன்     சின்ன சேவகன்    

                                              26-08-2023


 

    சிறுகதை 027/2023   வீதி நாடகம்                                            26-08-2023


1980-களில் மக்கள் கலை இலக்கிய மன்றம் ...மக்கள் கலாசார கழகம் 

ஆனது. தமிழகம் முழுக்க முக்கிய நகரங்கள் மட்டும் இன்றி பல்வேறு 

கிராமங்களில்-லும் வீதி நாடகங்கள் அரங்கேற்ற பட்டன . அதற்கு நல்ல 

வரவேற்பு இருந்தது . மக்களின் கரவொலி விண்ணை தொடும்படி 

இருந்தது .சினிமா மற்றும் மேடை நாடகங்கள் பூஷ்வா கலை என்று 

கூறி புறக்கணித்தனர் . அது தவறு .

                                      மேடை இல்லை.

                                      மைக் இல்லை.

                                     மைக் அப் இல்லை .

                                     வசனம் கம்மி .

                                     மைமிங் அதிகம் .

பல சமூக பிரச்னைகளை வைத்து நாடகம் போட்டோம் . வெற்றியும் 

கண்டோம் .

                                    தண்ணீர் பிரச்சனை 

                                    வரதட்சணை பிரச்சனை 

                                   வெட்டி வேலை -விவசாய பிரச்சனை 

                                   முதலாளி- நில உடைமையாளர் கூட்டு 

                                   அவசர அவசியம் ( காசு வாங்கும் பொது கழிவு )

                                   மசாலா பத்திரிகை-கள் 

                                  அரசியல் கட்சிகளின் ரெட்டை வேடம் 

                                  ஊழல் 

                                  போலீஸ் அடக்குமுறை 

                                  தர்ம ஆஸ்பத்திரி அவலம் 

                                 வேலை இல்லா திண்டாட்டம் 

                                --------------------------------------

இப்படி பல கருக்களை கொண்டு வீதி நாடகங்கள் போட்டோம் . இதில் 

பணிவுடன் சொல்கிறேன் என் பங்கு அதிகம் . நான் இயக்குனராகவே 

பணியாற்றினேன் . மற்றும் தமிழகம் முழுவதும் வீதி நாடக பயற்சி 

முகாம்களை நடத்தி உள்ளோம் . புரட்சிகர பாடல்களுக்கு நடனம் கற்று 

கொடுக்க பட்டது . இதிலும் என் பங்கு அதிகம் என்பதை பணிவுடன் 

சொல்கிறேன். நடிகர்கள் அனைவரும் நன்கு ஆதரவு தந்தன்ர் . நாடங்களுக்கு 

முடிவில் நடிகர்கள் ஸ்டீல் ஆக நிற்க அப்போது 2 அல்லது 4 வரி பாடல் 

பாடப்படும். இதில் " தீ " என்ற மக்கள் கவிஞர் பங்கு அபராம் . மேலும் 

நான் சினிமா ரசிகன். அதனால் எங்கள் நாடகங்களில் "ஸ்லோ மோஷன் "

டெக்னிக் நானே முதலில் கொண்டு வந்தேன் . மக்கள் இடையே நல்ல 

வரவேற்பு இருந்தது.


1986-ல்  கோவையில் பாசிச எதிர்ப்பு மாநாடு பிரமாண்டமாக நடந்தது .

மிக பெரிய மாநாடு . ஆயிர கணக்கில் மக்கள் . 2 நாட்கள் நடைபெற்ற 

மாநாட்டில் இரவு கலை நிகழல்ச்சி தான் . நானே அதன் பொறுப்பை

 ஏற்றுக்கொண்டேன். சில தோழர்கள் என்னை முன்மொழிந்தன்ர் .

இந்த மாநாட்டிற்கு நான் எழுதிய நாடகங்கள் ....


                                                   வீதி நாடகங்கள் மேடையில் போடப்பட்டன .

                                                   நான் உருவாக்கிய நாடகங்கள் 


                                                  1. முன்பு ஒரு காலத்திலே 

                                                 2.  ஊர்வலம் 

                                                 3. "கை "ராசி ராஜூவ் ( ராஜிவ் பிரதமர்)...!

                                                4. மூவர்ண விலங்குடிப்போம் ...!!!


அம்மா ...!

அப்பா    !!

நான் என் மூளையை கசக்கி பிழிந்து 10 நாட்களில் முடித்து விட்டேன் .


                      1. முன்பு ஒரு காலத்திலே ....

                          இதில் சிறுவர்-சிறுமியர் நடித்தது . காட்டில் 

                         நடக்கும் கதை . எல்லோரும் மாஸ்க் போட்டு நடித்தார்கள்.

                        குட்டி முயலே புரட்சி தலைவன் . பிரமாதமாக நடித்தார்கள்,


                    2. ஊர்வலம் :   இது நாட்டிற்கு இப்போது தேவையான 

                        ஊர்வலம் எது என்று சொல்வது . சிறுவர்களே நடிதத்தார்கள் .

                       " புரட்சி ஓங்குக " ஊர்வலத்தையே  தேர்வு செய்வர் .

                    3. "கை " ராசி ராஜூவ் ...! இது வேலை இல்லா திண்டாட்டம் ,

                         வறுமை , ஊழல் , போன்ற பிரச்சனைகள் வைத்து கொண்டு 

                        மக்களை " 21-ம்  நூற்றாண்டுக்கு கொண்டு செல்வது "

                        நகைச்சுவை வடிவில் போட பட்டது .

                   4.  மூவர்ண விலங்கோடிப்போம் ...! ! !

                        இது மிகை இன்றி சொல்ல வேண்டும் என்றால் இது எனது 

                       " மாஸ்டர் பீஸ் ". சுமார் 3 மணி நேரம் நடக்கும் இந்த நாடகத்திற்கு 

                          கதை -வசனம்- மைமிங்- இயக்கம் எனது . ஆனால் ஒன்றை 

                      சொல்லியே தீர வேண்டும் . ஒவ்வொரு காட்சி முடியும் போதும் 

                      2 அல்லது 4 வரி பாடல் தேவை பட்டது . தீ தான் எல்லா பாடல்களும் 

                      எழுதினார் . இந்த நாடகத்தை வீடியோ எடுக்க வில்லையே என 

                      மிகவும் வருந்துகிறேன். இப்படி ஒரு இந்திய சுதந்திர நாடகம் 

                       நான் எழுதியது இல்லை . இனியும் அந்த வாய்பு கிடைக்குமா 

                       என தெரிய வில்லை. 


                                                 நடிகர்கள் சிறப்பாக நடித்தனர் .

                                                 காந்தி சைவ புலியாக நடித்தார்.

                                               சுதந்திர போராட்டம் துவங்கி அவசர நிலை 

                                               பிரகடனம் வரை கதை சொல்லபட்டது .

                                                நக்ஸல்பாரி இயக்கம் சிறப்பாக அமைந்தது .

                                               நான் இந்த கதையை எழுத பயன்படுத்திய ஒரே 

                                              புத்தகம்  ....

                                                                   இன்றய இந்தியா 

                                                                   ரஜினி பாம்தத் .-ஆசிரியர் 

நாடகத்திற்கு இப்படி ஒரு கை தட்டல் வரும் என்று நான் நினைத்து கூட 

பார்க்கவில்லை .எனது படைப்புகளில் இதுவே உச்சம் . இதை வீடியோ 

எடுக்காமல் இருந்தது மிக மிக பெரிய தவறு . இப்போது நான் உணர்கிறேன் 


                       வீதி நாடகம் என் உயிர்.

                       பல நுணுக்கங்களை புகுத்தி உள்ளேன் .


                      வீதி நாடகம் வாழ்க ....!
                      கலை மக்களுக்கே ...!!


R.சத்ய நாராயணன்      ஸ்ரீ விவேக்     சத்யன்      சின்ன சேவகன்    


                                                      26-08-2023


Friday, 18 August 2023

 


சிறுகதை 026   இருதார ம "ன"ம்..!!   

                               19-08-2023


மணி ...!

பூமாதேவி ...!!

லக்ஷ்மி ....!!!

மூவரும் ஒரே ஐ .டி . கம்பனியில் வேலை செய்கிறார்கள் .சுமார் 4

 வருடங்களாக இதே இடத்தில் வேலை செய்கின்றனர் . மூவரும் ஒரே 

டீமில் உள்ளனர் .டீம் மேனேஜர் மணி தான் . இவர்கள் மூவரிடமும் நட்பு 

மிக மிக ஆழமானதாக இருந்தது .ஆழமான நட்பு காதலாக கூட மாறலாம் .

ஒவ்வுறு வாரமும் இவர்கள் மூவரும் " விஜயா " மாலில் சாந்திபார்கள் .

சினிமா பார்பர்ர்கள். பிறகு நல்ல ஹோட்டலில் ....மாலில் சாப்பிடுவார்கள் .

மூவரும் சாப்பிட்டு முடிந்ததும் ஐஸ் -கிரீம் சாப்பிடுவார்கள். மூவருக்கும் 

ஐஸ்-கிரீம் என்றாள் உயிர். எல்லாவ்ற்றை-யும் பேசும் இவர்கள் வாழ்வில் 

பெரிய பிரச்சனை வர போகிறது என பூமாவுக்கும் , லக்ஷ்மிக்கும் தெரியாது .

ஆனால் மணி இருதலை கொள்ளி எறும்பு போல் ஆகிஉள்ளான் . அவன் 

அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறான் . அவன் பூமா மற்றும் லக்ஷ்மி 

இடம் தான் ஒரு மேட்டர் சொல்ல வேண்டும் என நினைத்தான் . ஆனால் அதில் 

பெரும் பிரச்சனை இருந்தது .

வார முதல் நாள் . லஷ்மி விடுமுறை . டீ குடிக்க மணியும் , பூமாவும் 

சென்றார்கள் .

டீ -யை குடிக்க ஆரம்பித்தான் . அதற்குள் பூமா பேச துவங்கினாள் .

" மணி ..நான் உன்கிட்டே ஒண்ணு சொல்லணும் ."

" சரி ....சொல்லு ...!"

" நீ  கோபிக்க கூடாது .."

" இல்லை ..சொல்லு "

" எப்படி சொல்றது தெரியில்லை ....இருந்தாலும் சொல்கிறேன் 

  ஐ லவ் யு ......"- சொல்லி விட்டு டீ குடிக்க ஆரம்பிதாள் . மணிக்கு சந்தோஷம் 

தாங்க முடியவில்லை . ஆனால் அதை காட்டி கொள்ள வில்லை.

" என்ன மணி ...? நீ என்ன சொல்றே ...?"

" தாங்க்ஸ் ....அடுத்த வராம் இதே ...இல்லை விஜய மாலில் சொல்கிறேன் ."

" இப்போ சொல்ல முடியாதா ...?"

" இல்லை நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா சொல்றேன் "

இருவரும் ஆபிஸ் உள்ளே சென்றனர். 

மறு நாள் .

லக்ஷ்மி வாந்தால் . வந்த உடனே மணியிடம் வந்து லஞ்ச் ஃபுட் கோர்டில் 

மதியம் சாப்பிடலாம் . எனக்கு உன் கூட பேச வேண்டும் .." -சொல்லி விட்டு 

வேலையை பார்க்க போய் விட்டாள் .

லஞ்ச் டைம்.

ஃபுட் கோர்ட் .

மணி -லக்ஷ்மி இருவரும் ஆர்டர் செய்தார்கள் .

மணி ஆரம்பித்தான் ." என்ன லக்ஷ்மி ...? என்னவோ பேசணும் ...

சொன்னீயே ...? சொல்லு ...!"

லக்ஷ்மி பட் என விஷயத்திற்கு வந்தாள் .

" மணி ....எனக்கு வேற வழி தெரியலை ...ஐ லவ் யு ...!"

மணிக்கு சந்தோஷம் உச்சம் . செய்வது தெரியாமல் அடக்கி கொண்டான் .

" லக்ஷ்மி ...அடுத்த வாரம் விஜயா மாலில் சந்திபோம் ..அப்போ நான் 

   சொல்றேன் ...! எல்லாம் நல்ல நியூஸ் தான் .."

" சரி ...."

அடுத்த வாரம் .

விஜயா மால் .

மணி தான் முதலில் வந்தான் . பிறகு பூமாவும் கொஞ்ச நேரம் கழித்து 

லக்ஷ்மியும் .வந்தனர் . பூமா வருவது லக்ஷ்மிக்கு தெரியாது . லக்ஷ்மி 

வருவது பூமாவிற்கு தெரியாது. 

மணி அமைதியை கலைத்தான்.

" நீங்க ரெண்டு பேருமே உங்க விருப்பம் சொல்லி விட்டீர்கள் . நானோ 

  பெரிய பிரச்சனையில்  உள்ளேன் . "

" என்ன ? " என்று இருவரும் கேட்க ...

" நான் உங்க ரெண்டு பேரையும் லவ் பன்றேன் . எனக்கு உங்களில் 

  யாரையும் மிஸ் பண்ண முடியாது . 2 பேரையும் கல்யாணம் செய்ய முடியாது 

  மீறி பண்ணி கொண்டால் எனக்கு சிறை தான் ....நான் என்ன செய்வது ...?

பூமா லக்ஷ்மி அமைதி . இருவரும் மணியிடம் சொல்லிவிட்டு போனார்கள் .

" நாங்கள் சீக்கிரம் திரும்பி வந்து விடுவோம் ...பிளீஸ் ...வைட் ..."

மணியின் இத்யம் லப் -டப் என வேகமாக அடித்தது . 15 நிமிஷங்கள் 

நரகமாக இருந்தது .

இருவரும் தெளிவுடன் வந்தனர் .

மணி :   " என்ன ...? உங்க முடிவு என்ன ...?"

பூமா   :    " லெட் அஸ் லீவ் டூ கெதர் ...!"

லக்ஷ்மி :   " எஸ் ..வீ கேன் லீவ் டூ கெதர் ...!"

மணி     : " ஓ ...மை காட் ...! "- ஆழ ஆரம்பித்து விட்டான் .

ஐஸ் -கிரீம் வந்தது . மூவரும் வாங்கி ஒருங்கே கொண்டு வந்து 

மூவரும் :  " சீயர்ஸ் " என்று சந்தோஷமாக சாப்பிட ஆரம்பித்தார்கள்.


                                                            எஸ். 

                                                            மணி 

                                                            பூமா 

                                                            லக்ஷ்மி 

                                            லெட் தெம் லீவ் டூ கேதர் ...! ! !

      மூவரும் சேர்ந்தே வாழட்டுமே ...! ! !


ஆர்.சத்ய நாராயணன்    சத்யன்       ஸ்ரீ விவேக்     சின்ன சேவகன்   

                                                         19-08-2023 


 


             சிறுகதை 025/2023      19-08-2023                                 தீவிர"வாதம்"...!                    


உதகை அரசினர் கலை கல்லூரி .எழில் மிகு இயற்கை . கேம்பஸ் பெரிது .

சுற்றிலும் உயரமான மரங்கள். ரம்மியமான சுழல் . லேடீஸ்-க்கு என தனி 

ரூம் இருந்தது . சற்று தள்ளி டீ ரூம் இருந்தது .

சேகர் இரண்டாம் ஆண்டு பட்ட படிப்பு படித்து கொண்டு இருந்தான் .

கல்லோரியிலே "தம் " அடிப்பான் . செயின் ஸ்மோக்கர் .காலை முதல் 

வகுப்பு மட்டும் கட்டாயம் அட்டென்ட் செய்வான் .

 பிறகு....என்ன...கல்லோரியை சுற்றுவது "சைட் " அடிப்பது தான் வேலை. 

ஒரு நாள் தன் நண்பன் உடன் சுற்றி வரும் போது 2 பெண்கள் நூலகத்தில் 

இருந்து திரும்பி கொண்டு இருந்தார்கள் . வேடிக்கையாக சேகர் 

" வாட்ஸ் யுவர் நேம் பேபி " என்று கேட்டான் . அவன் பதில் வரும் என்று 

எதிர் பார்க்கவில்லை . 

"ப்ரியா " என்று பதில் வந்தது . சேகருக்கு ஆச்சரியம் . ப்ரியா நல்ல 

ஸ்மார்ட் -ஆக இருப்பாள் . எப்போதும் பாவாடை தாவணியில் தான் 

வருவாள் . வெள்ளி மட்டும் சேலை ...! நெற்றியில் விபூதி -குங்குமம் 

வைத்து இருப்பாள் .

தினமும் அவளை சைட் அடிக்க பேசும் பழக்கம் ஏற்பட்டது .தினமும் 

கல்லூரி முடிந்த பிறகு சயின்ஸ் பிளாக்கில் தனியாக சந்திபார்கள் .

இது அன்றாட நடக்கும் வாடிக்கை. எல்லா விஷ்யங்கள் பற்றியும் பேசுவார்கள் .

சேகர் தினமும் அவளுக்கு 5 ஸ்டார் வாங்கி தருவான் .ப்ரியாவிற்கு சேகர்  

10 மாத குழந்தையாக இருக்கும் போட்டோவை காண்பித்தான். அவள் 

அந்த போட்டோவிற்கு முத்த மழை கொடுத்தாள் . அந்த போட்டோவை 

திரும்பி தர மறுத்து விட்டாள் . சேகர்  கேட்டு  பார்த்தான் . அவள் சம்மதிக்க 

வில்லை . சரி ..என்று விட்டு விட்டான். ஒரு வருடமாக இருவரும் காதலித்து 

கொண்டு இருந்தனர் . 

சேகரை பற்றி தெரிந்து கொள்ள பல விஷ்யங்கள் இருந்தன . நேர்மை

 ஆனவன். கல்லோரியில் நடக்கும் பட்டிமன்றம் , பேச்சு போட்டி

 எல்லாவற்றிலும் கலந்து கொள்வான். முற்போக்கு சிந்தனை உள்ளவன் 

சமீபத்தில் தான் ஒரு பொருளாதார பேராசிரியர் சீனிவாசன் என்பவர் 

மூலம் மார்க்ஸியம் கற்று கொண்டான். கல்லோரி மேடைகளிலும் தன் 

வீர உரை மூலம் மானவர்களுக்கு போராட்ட தத்துவத்தை புகட்டினான் .

அவன் ஒரு நாத்திகவாதி . உறுதியில் இருந்தான் .அவனுக்கு நண்பர்கள் 

அதிகம் . அதே போல பெண் நண்பர்களும் அதிகம் .பெண்களிடம் பெண் 

உரிமை பற்றி பேசுவான் . பலரை நாத்திகவாதியாக மாற்றி உள்ளான் .

அவனுக்கு இளம் ரத்தம் . சமூகம் , குடும்பம் போன்ற வற்றில் அவன் 

சிந்திக்க வில்லை .நாத்திகம் மட்டுமே அவன் மூச்சு ...!

ப்ரியாவை பற்றி சொல்ல வேண்டும் ஆனால் அவள் சேகர் சொல்லும் 

எல்லா கருதுக்கள்-யும் ஏற்று கொள்வாள் . ஆனால் கடவுள் பக்தியில் 

சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை . அவள் உறுதி மிக பெரிது .

அவளுக்கு பிடித்த தெய்வம் முருகன் .முருக பக்தை . இதை பற்றியும் 

இருவர்களும் பேசினார்கள் . ஆனால் ஒரு முடிவுக்கு வர முடிய வில்லை.

ஒரு நாள் தனியாக பேசும் போது வீட்டில் ஒரு முருகன் படமாவது 

இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொன்னாள் . ஆனால் சேகர் 

தன் கொள்கையில் தீவீரமாக இருந்தான் . சமரசம் இல்லை என்று 

கண்டிப்பாக சொல்லிவிட்டான் .

                                   "வாழ்க்கை என்பது சமரசம் அல்ல ...!

                                    ஆனால் ..வாழ்கையில் சமரசங்கள் இல்லாமலும் இல்லை "

இதை சேகர் உணர மறுத்தான் .திருமணம் என்பது இரு மனம் ஒன்று சேர்வதே.

இதில் விட்டு கொடுத்து தான் போக வேண்டும் . இதை சேகர் உணரவில்லை .

நாத்திகதில் பிடிவாதமாக இருந்தான் . குடும்பத்தில் விட்டு கொடுத்து 

இரு மனம் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை .ஆனால் சேகர் கட்டாயமாக 

வீட்டில் முருகன் படம் வைக்க முடியாது என்று சொல்லி விட்டான் .


                                   அடுத்த 2 நாட்கள் ப்ரியா கல்லூரி வர வில்லை .ப்ரியாவை 

பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை . மூன்றாம் நாள் அவள் 

வரும் வழியில் காத்து இருந்தான். ப்ரியா வந்தாள் . நேரே சேகரிடம் 

வந்து அவனது குழந்தை போட்டோவை கொடுத்து " சேகர் ...நம் காதல்

 முறிந்தது .

என்னால் தினமும் முருகனை கும்பிடாமல் இருக்க முடியாது . உன் கொள்கை 

படி நீ வாழ்ந்து கொள் . முருகன் அருமை சொன்னாள் உனக்கு புரியாது .

என்னால் தினமும் முருகனை வணங்காமல் இருக்க முடியாது . நீ உனக்கு 

பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து கொள் . ஆல் தி பெஸ்ட் ..!  "

என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே வகுப்பு சென்று விட்டாள் .


                         இது நடந்து 30 ஆண்டுகள் ஓடி விட்டன . ப்ரியா தான் வேலை 

பார்க்கும் இடத்தில் வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டாள் என்பதை 

தன்  நண்பன் மூலம் அறிந்தான். 

                       " 20 வயதில் கம்யூனிஸ்ட்-ஆக இல்லாதவனும் 

                         30 வயதில் கம்யூனிஸ்ட் -ஆக இருப்பவனும் முட்டாள் ...!"

என்று கூறிய ஆங்கில அறிஞரின் வார்த்தைகளில் மிக ஆழமான 

கருத்து உள்ளதை இப்போது புரிந்து கொண்டான் . அவனது மார்க்ஸிய 

சேவை பாதியில் நின்று போனது .

                       அவனது காதலுக்கு முட்டுக்கட்டை ..

                                                முருகன் ...!

                                                முருகா ....!!

          பி. கு .  தற்போது சேகர் வீட்டில் 2 பெரிய முருகன் படங்கள் .


                              

R.சத்ய நாராயணன்     சத்யன்     ஸ்ரீ விவேக்      சின்ன சேவகன்    

                                               19-08-2023
 

Friday, 11 August 2023

 

           என்ன செய்ய வேண்டும் ..?             

          12-08-2023     சிறுகதை 24/2023 

அன்புள்ள தோழரே ...!

                            வணக்கம் .

                             தங்கள் கடிதமும் , புத்தகமும் கிடைத்தது. மிக்க நன்றி. 

நீங்கள் உங்கள் புத்தகத்தில்  குறிபிட்டுள்ள பெரும்பான்மை

 விஷயங்களை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன் .ஆனால் சில

 விஷ்யங்கள் என் மனதை வேதனையடைய செய்கிறது . என் மனதில் 

தோன்றும் விஷயங்களை உங்கள் முன் வைக்க போகிறேன் . நான் 

என்றுமே புரட்சிக்கு ஆதரவு கொடுக்கவே விரும்புகிறேன் .

                             நக்ஸல்பாரி இயக்கம் ...!

                             நீங்கள் நக்ஸல்பாரி இயக்கம் குறித்து மிக நன்றாகவே 

எழுதி உள்ளீர்கள் . சீன வானொலி " இந்தியாவில் வசந்த்ததின் இடி 

முழக்கம் கேட்கிறது " என்று அறிவித்தது மிக சரியே . ஆனால்

 நக்ஸல்பாரி இயக்கதில் இருந்து தான் CPI (ML ) கட்சி துவங்கியது . பல 

முடிவுகள் சரியாக இருந்த போதும் பெரும் தவறு செய்து விட்டார்கள் .

நக்ஸல்பாரி, சிலிகுரி ஆகிய பகுதிகளில் இருந்த நிலமை வேறு. அந்த 

நிலை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. எனவே இயக்கம் தீவீர

 வாதத்தில் வீழ்ந்தது அறிந்த ஒன்றே. நாட்டில் எங்கும் புரட்சிகர 

நிலை இருக்க வில்லை . எனவே அந்த திட்டத்தை எல்லா இடங்களிலும் 

நிறைவேற்றுவது என்பது மிக தவறான விஷயம். 

                             பின் என்ன நடந்தது...? 

தொட்டதற்கு எல்லாம் கருத்து வேறுபாடு . விளைவு கட்சி பிளவு .

இன்று சுமார் 40 கட்சிகளாக இல்லை குழுக்களாக செயல் பட்டு 

வருகின்றான்ர். 

                             இங்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் . சுதந்திர 

போராட்ட காலத்தில் காந்தி-நேரு , காந்தி-ராஜாஜி . பட்டேல் -நேரு 

போன்று எண்ணற்ற முரண்பாடுகள் கட்சிக்கு உள் இருந்தது . ஆனால் 

யாரும் கட்சியை பிளவு செய்ய விரும்ப வில்லை . கட்சி ஒற்றுமை தான் 

முக்கியம் என இருந்தனர் . ஒரு பூஷ்வா கட்சிக்கு தெரிந்த விஷயம்  

கூட புரட்சியாளர்களுக்கு தெரிய வில்லை என்பது சாபக்கேடு .

                           ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ...!

இதை CPI (ML) உணர வேண்டும். நக்ஸல்பாரி முடிந்து பல பத்தாண்டுகள் 

ஓடிவிட்டன. பூஷ்வா காட்சிகள் கூட I .N.D .I .A என ஒன்று படுகின்றனர். 


இதை இந்திய புரட்சியாளர்கள் , இடது சாரிகள் , மக்கள் இயக்கங்கள் 

அறிவுஜீவிகள் , மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர

 வேண்டிய காலம் வந்து விட்டது . இப்போதும் நான் வைக்கும் திட்டம் தான் 

சரியானது என்று இருப்போமே என்றால் வருங்காலம் நம்மை தூற்றும் .


                                         1. ஏகாதிபத்திய எதிர்ப்பு 

                                         2. முதலாளிதத்துவ எதிர்ப்பு 

                                        3. நில உடமை எதிர்ப்பு 

                                        4. தொழிலாளர் நல்வாழ்வு 

                                        5. உலக அமைதி & நல்வாழ்வு 

இந்த 5 அம்ச திட்டத்தை எல்லோரும் ஏற்று கொள்வார்கள் .இதை ஏற்று 

கொள்பவர்கள் ஒன்றாக இணைந்து " என்ன செய்ய வேண்டும் " என 

கூடி திட்டம் போட்டால் "இந்தியா விழித்து கொள்ளும் ". இது தான் 

இன்றைய பிரதான திட்டம் ." சமதர்ம " சமூகம் அமைக்க என்ன செய்ய 

வேண்டும் என்று ஒரு குறிப்பான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் .

தோழரே ...!

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன  .

              1. கட்சி /முன்னணி ரகசியமாக இருக்க வேண்டிய அவசியம் 

                  இல்லை . ( 21-அம் ) நூற்றாண்டில் இது சாத்தியம் இல்லை .

             2. கட்டாயம் ஆயுத புரட்சி தான் என்பதும் அவசியம் இல்லை.

                 இதை தன் மறைவுக்கு முன் கேஸ்ட்ரோ சொல்லி உள்ளார். 

             3.  மக்களை ஒரே அணியில் திரட்ட வேண்டும் .

            4.  பாராளுமன்ற பங்கு என்பது 2 காரணங்களுக்காக 

                அமைய வேண்டும் .

                                  அ . சட்டம் இயற்றி நிர்வாகத்தை செயலுக்கு 
                                   
                                         கொண்டு வரவேண்டும் . இது சாத்தியமே ...!

                                  ஆ. இல்லை என்றால் மக்கள் முடிவு செய்வார்கள் 
             
             5. "சமதர்ம " சமூகம் மட்டும் உலக அமைதி மற்றும் சமாதான 

                  சகவாழ்வு -இதுவே நம் இலக்கு .

நான் என் எல்லா கருத்துகளையும் முன் வைக்க வில்லை . எது இப்போது 

முக்கியமோ அதை மட்டுமே நான் கோடிட்டு காட்டி உள்ளேன்.

                                           ஒற்றுமையே நமது பலம் ...!

நான் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் .

உங்கள் கருதுக்கள் மற்றும் விமர்சனங்களை ஆவலோடு எதிர் 

பார்த்து உள்ளேன்.

                                                                                                      இப்படிக்கு ,

                                                                                                 புரட்சி தாசன் 

                                                                                                 தமிழ்நாடு - 2023-2024


R .சத்ய நாராயணன்    சத்யன் ஸ்ரீ விவேக்    சின்ன சேவகன் 

                                                       12-08-2023


                                                      அடுத்த வாரம் 2 காதல் கதைகள் 

                                                                    1. தீவிர "வாதம் "...!

                                                                    2. இரு தார ம"ன"ம்....!!   

 

                  நாலே நாலு கேள்வி ..?? ??                    12-08-2023   சிறுகலை  023/2023


                                                               சுய பரிச்சை 

நேரம்    :      அளவு இல்லை                                            மதிப்பெண் :   100 மார்க்குகள் 

                                  எல்லா கேள்விகளுகும்  விடை அளிக்கவும் 

                                                           00- விளையாட்டு 

1.      ஒலம்பிக்ஸில்  சீனா போன்று இந்தியா சாதிக்க முடியாததற்கு 

         காரணம் என்ன ...? 

2.     இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் -விவரிக்க ...??

3.    இந்தியா விளையாட்டு துறையில் உழல், லஞ்சம் , மற்றும் 

       பாரபட்சம் உள்ளதா ...???

4.   இந்திய வீரர்களுக்கு போட்டிக்கு முன் அரசு உதவி உள்ளதா ..?? ?? -விவரி .

                                                           01- விண்வெளி 

1.   விண்வெளி ஆராய்ச்சியில் ISRO-வின் பங்கு என்ன ...?

2.   சந்தராயன் III வெற்றி பெறுமா    ??ஆய்க .

3.  ISRO வின் தொழில்நுட்ப வளர்ச்சி வல்லரசு நாடுகளுக்கு இணையாக 

    உள்ளதா ...???

4.   சூரிய ஆராய்சி எப்போது துவங்கும் ...?? ?? 

                     
                                                         02. அறிவியல் 

1.   இந்தியாவின் சுதந்திரதிற்கு பிறகு 100 விலுக்காடு அறிவியல் 

     வளர்ச்சி அடையவில்லை ...? விவரி 

2.   " அறிவியல் கொள்கை திட்டம் " நாடாளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது .

      அதன் சரத்துக்களை பட்டியல் ஈடுக ...??

3. அணுஆயுத தடைக்கு இந்தியா எடுத்து உள்ள முயற்சிக்கு பலன் உள்ளதா???

4. ' அமைதிக்கு அணு ' -விளக்குக ....?? ??


                                                    03. கல்வி 

1. இந்தியா 100% எழுத்தறிவு  பெற்று விட்டதா ? இல்லை என்றால் அதற்கான 

   காரணம் என்ன...?

2. பட்டபடிப்பு  , ஆராய்சி வரை இலவசமாக படிக்க வாய்ப்பு உள்ளதா ...??

3.  இடஒதிக்கீடு  கொள்கை சரியானதா ??? விவரி 

4.  ஏன் பொருளாதார ரீதியில் ஒதுக்கீடு கொண்டு வரக்கூடாது -திறனாய்வு 

     செய்க ...?? ??


                                                      04- பண்பாடு 

1. வேற்றுமையில் ஒற்றுமை - விளக்குக ...?

2. இந்திய பண்பாட்டின் முக்கிய அம்சங்கள் யாவை ..??

3. அண்டை நாடுகளில் நமது பண்பாட்டு வளர்ச்சி பணிகள் நடக்கிறதா ..???

4.  இந்திய கலை வளர்ச்சியில் வானொலி , தொலைகாட்சி மற்றும்

     ஊடகங்களின் பணி என்ன ...?? ??


                                                     05- பொருளாதாரம் 

1.   அரசியல் சாசன முகவுரையில் இந்தியா ஒரு "சமதர்ம" நாடு என்று 

      பிரகடனம் செய்து உள்ளது சரியா ? 

2.   வறுமையை ஒழிக்க முடியாதத்ற்கு காரணங்களை வரிசிப்படுத்து..??

3.  பெரும் தொழில் நிறுவனங்கள் தேசிய உடமை ஆகததற்கு யார் 

     காரணம் ..???

4.  "சமதர்ம" சமூகம் உருவாக நாம் என்ன செய்ய வேண்டும் ...?? ??


                                                06- வரலாறு 

1. சங்க காலத்தில் பெண்கள் நிலை எவ்வாறு இருந்தது ...?

2. மொகாலாய ஆதிக்கம் (300 ஆண்டுகள் ) , பிரிட்டிஷ் (300 ஆண்டுகள் )

   இந்தியாவின் தணிதன்மையை எவ்வாறு பாதித்தது  ...??

3. சுதந்திர இந்தியா சீனாவை ( விடுதலை 1949) போல் வளர்ச்சி 
  
   எல்லா துறைகளிலும் அடைய வில்லையே ...???

4.  இந்தியாவில் CPI (ML) ஏன் ஒன்று பட்டு இல்லமால் தனி தனி குழுக்களாக 

    செயல் பட்டு வருகிறது ...?? ??  விரிவாக ஆராய்சி செய்க .


                                                07- சமூகம் 

1.  ஜாதி , தீண்டாமை எப்போது யாரால் தோன்றியது என்று விவரி ...?

2.  ஜாதி ஒழிப்பிற்கு என்று சட்டமோ , இயக்கமோ இல்லையா அல்லது 

     உள்ளதா ...?? -விரிவாக எழுது .

3. பொருளாதார ஒதுக்கீடு என்பதே சரி - ஆம் அல்லது இல்லை என்பதை 

    திறனாய்வு செய்.....???

4.  "சமதர்ம " சமூகம் அமைய என்ன வழி ...?? ?? 


                                              08-அரசியல் 

 1.  இந்திய அரசியல் சாசனம் மதிப்பீடு -செய்க.

 2.  " பாராளுமன்ற " ஜனநாயகத்தில் 100% சுதந்திரம் , சமத்துவம் 

        மற்றும் ஜனஞாயகம் உள்ளதா ...??

3. இந்திய அரசியல் கட்சிகளின் வரலாற்றில் CPI (ML ) கட்சியின் 

    கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை ஆழ்ந்து எழுதுக ..???

4. இன்றைய தேசிய அரசியல் நிலையை வெளிக்கொணர்க ...?? ??

                                             (END )

விடைகள் :    SEARCH GOOGLE 

நீங்கள் எழுதும் பதில்களை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளுங்கள் .

எனக்கு கேள்வி கேட்க மட்டுமே முடியும் . எனக்கு பதில் தெரிந்து இருந்தாலும் 

நான் எனக்கு " தெரியாது " என்று சொல்லவே " தற்சமயம் " முடியும் .

                                   பதில் காண்பது உங்கள் உரிமை ...!

                                   உங்கள் விருப்பம்...!!

                                   ஆல் தி பெஸ்ட் ...!!!

                                  100-க்கு 100 வாங்குக ...!! !!

ஆர்.சத்ய நாராயணன்    சத்யன்    ஸ்ரீ விவேக்   சின்ன சேவகன் 

                                                       12-08-2023

                                                      அடுத்த வாரம் 2 காதல் கதைகள் 

                                                                    1. தீவிர "வாதம் "...!

                                                                    2. இரு தார ம"ன"ம்....!!  


Friday, 4 August 2023

 


சிறுகதை 022/2023    ஒரு வக்கீலின் வாதம் ...!                                     05-08-2023


மாண்புமிகு ....

ஆனரபில் ...

உச்ச நீதி மன்ற தலமை நீதிபதி அவர்களே ...!

இந்த வழக்கு தன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது . எனவே என் இறுதி

 வாதத்தில்  என் கருத்துகளை அழுத்த திருத்தமாக பதிவு செய்ய

 விரும்புகிறேன் . 

ஆம். 

நம் அரசியல் அமைப்பு சட்டம் " வீ தி பீப்பிள் ஆஃப் இந்தியா " அதாவது 

" மக்களாகிய நாம் " என ஆரம்பித்து ஒரு நீண்ட அரசியல் அமைப்பு 

சட்டமாக பேர் பெற்று விளங்குகிறது . மேலும் ...

                   இந்தியா ஒரு முழு இறைமை உடைய  சமய சார்பற்ற 

                   சமதர்ம ....

என துவங்குகிறது . நான் எல்லா விஷயங்கள் விட்டுவிட்டு ஒன்றே மட்டுமே 

எடுத்து கொள்ள விரும்புகிறேன் . 

மதிபிற்கு உரிய நீதிபதியே ...!

இந்திய அரசியல் சட்டத்தின் முக உரையில் " இது சம தர்ம " நாடு என்று 

குறிப்பிட பட்டு உள்ளது . 

                                           இது தான் பிரச்சனை ...!

                                          இது தான் மையம் ...!!

                                          இது தான் என் கேள்வி ...!!!

                                          இந்தியா ஒரு சமதர்ம நாடா ...????

இல்லை. நிச்சயம்  இல்லை. நாட்டில் பெரும்பான்மை மக்கள் வறுமையில் 

தான் வாடுகின்றனர் . இந்தியாவின் முதுகு எழும்பு என்று சொல்ல படும் 

விவசாயிகள் வாழ்க்கையை பற்றி இந்த உலகமே அறியும் . அது மட்டும் அல்ல .

நகரத்தில் குடிபுங்குந்த தொழிலாளிகள் சுபிட்சமாக வாழ வில்லை . நான் 

புள்ளி விவரங்களை தர விரும்ப வில்லை. உலகே அறியும் . இப்படி

 தொழிலாளி - விவசாயி வறுமையில் உள்ள போது எப்படி நம் நாட்டை 

ஒரு "சமதர்ம " நாடு என்று சொல்ல முடியும் ?  மக்கள் சார்பாக நான் இந்த 

நீதிமன்றம் முன் சில கேள்விகளை வைக்க விரும்புகிறேன் ......

                1. இந்தியாவில் அனைத்து தொழிற்சாலைகளும் தேச உடமை 

                   ஆக்க பட்டு உள்ளதா ...?

               2. நாட்டின் பெரும்பான்மை மக்கள் பொருளாதார ரீதியில் 

                   " சமத்துவம் " பெற்று உள்ளனரா ...??

               3. கிராமங்களில் கூலி விவசாயிகள் நிலம் இல்லாமல் மூணு 

                   வேளை சாப்பிடுகிறார்களா ...??? பெரும்பாலும் காலை பழைய 

                  சோறு தான் . மூணு வேளை நல்ல உணவு என்பது வெறும் கனவு 

                  தான் 

               4. பிறகு ...மருத்துவம் ... இந்தியாவில் உள்ள பெரும் " பல்நோக்கு 

                   மருத்துவ மனைகள்" தனியரிடமே உள்ளது . இதை ஏன் தேசிய 

                  உடமை ஆக்க கூடாது ...???? சமதர்ம சமூகத்தில் எல்லா சிகிச்சைகள் 

                  இலவசமாகவே இருக்கும் . இது மக்களின் அடிப்படை உரிமை .

                5. கல்வி ...அம்மம்மா ...! எல்லா கல்வி நிறுவனங்கள் தனி

                    உடமையாகவே  உள்ளது .அனைவருக்கும் கல்வி ...அதுவும் 

                   பள்ளி - கல்லூரி - ஆராய்ச்சி வரை இலவசமாக இல்லையே ...??? ??

              6. தற்சமயம் இந்தியாவில் உள்ள பெண்கள் சமூகத்திலும் , வீட்டிலும் 

                  முழு சுதந்திரம் பெற்று உள்ளனரா ??? ??? பெண்கள் பாதுகாப்பு 

                  உள்ளதா ...??? ???   உ.ம் :     மணிப்பூர் வன்முறை .

              7. கடைசியாக ...இங்கு இன்று இந்தியாவில் " சுதந்திரம் , சமத்துவம் 

                  சகோதராத்துவம் " உள்ளதா ...??? ??? ?

              8.  ஆட்சி, நிர்வாகம் இவற்றில் மக்கள் பங்கு உள்ளதா ...??? ??? ??

             9.  அதிகார வர்கம் யாருக்காக உள்ளது .??? ??? ???

ஆனரபில் நீதிபதியே ...!

எப்படி பார்த்தாலும் இந்தியா ஒரு "சமதர்ம " நாடு இல்லை என்பது வெட்ட 

வெளிச்சமாக தெரிகிறது .இந்த நேரத்தில் நமது அரசியல் அமைப்பு 

" சமதர்ம " நாடு என்று பிரகடனம் செய்வது சரியா ...? 

இதற்கு 2 தீர்வுகளே உள்ளன .

                          1. அரசியல் சாசன முகவுரையில் " சமதர்ம "என்ற சொல் 

                              நீக்க பட வேண்டும் .

                          2. அல்லது இந்தியா மெய்யாகவே ஒரு " சமதர்ம " நாடக 

                              மாற வேண்டும் .

எனவே "சமதர்ம " நாடாக இந்தியா மாற வேண்டும் என சொல்லி என் 

வாதத்தை முடித்து கொள்கிறேன் .

தட்ஸ் ஆல் யுவர் ஆனர் ...!!!


நீதிபதி :    வாதங்கள் ஏற்று கொள்ள பட்டன . அரசியல் அமைப்பு  சட்டத்தின்

                     முகவுரையை மாற்றுவது சரி அல்ல. எனவே நிஜமாகவே பாரத 

                     நாடு " சமதர்ம " சமூகுமாக வேண்டிய கட்டயாம்  உள்ளது .

                     எனவே இப்போது தீர்ப்பு சொல்ல முடியாத நிலை . எனவே 

                     தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன் .

                     நல்லதே நடக்கும் என நம்புவோமாக .

                     ஜெய் ஹிந்த் ...!



                                                            சுபம் 

R.சத்ய நாராயணன்     ஸ்ரீ விவேக்     சத்யன்     சின்ன சேவகன் 

                                           05-08-2023