சிறுகதை 012/2023 தீக்குளிப்பு 01-07-2023
சாய் ராம் நிதிநிறுவனம்
1 லட்சம் முதலீடு செய்தால்
ஒரு வருடம் பிறகு ரூ .15,000 மாதமாதம் ...!
போன் 044-2267 5678
போஸ்டர் நீல நிறத்தில் கொட்டை எழுதுக்களில் இருந்தது .இந்த போஸ்டெரை
பார்பவர்கள் 2 விஷ்யங்களை கவனித்தனர்.
1. பெயர் சாய் ராம் ...!
2. மாதம் ரூ. 15,000
நிறுவனர் சாய் பாபா பக்தர் போல . ஒரு யோகியின் பெயரை வைத்து
உள்ளார் . பெயரை பார்க்கும் போதே மக்களுக்கு அது பிடித்து போய்விட்டது .
நம்பிக்கையும் வந்தது .ஆம்...! ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.15,000
என்றால் சும்மாவா ...?
தங்கம்மாள் இந்த போஸ்ட்ர் பார்த்து பெரு மூச்சு
விட்டாள் . அவள் ஒரு விதவை . கணவனின் இன்சூரன்ஸ் கணக்கில்
ரூ. 75,000 இருந்தது . அவள் வயது 51. அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள் .
அவள் கல்லுரியில் படித்து கொண்டு இருக்கிறாள் . அவளுக்கு கல்யாணம்
செய்ய பணம் வேண்டும் .
இப்போது அவள் ஒரு ஆரம்ப பள்ளியில் காலை
டிபன் சமைக்க வேலை கிடைத்தது . குறைந்த சம்பளம் தான் . தனது
தாலி செயின் இருந்தது . அதை அடகு வைத்தாள். ரூ. 19,000 கிடைத்தது .
தங்கம்மாள் பல வீடுகளில் பத்து பாத்திரம் கழுவும் வேலை பார்த்து
வருகிறாள் . 10 வருடதிற்கு மேலாக வேலை செய்து வந்த வீட்டில்
ரூ. 6,000 கடனாக வாங்கினாள் .
பணம் எடுத்து கொண்டு "சாய் ராம் நிதிநிறுவனம் "
சென்றாள் . மாதம் ரூ. 15,000 கனவில் இருந்தாள் . நிறுவனத்தை சேர்ந்த
ஒருவர் விண்ணப்பத்தை தானே பூர்த்தி செய்தார் . தங்கமாள் எழுத
படிக்க தெரியாதவர். எழுத்து கூட்டி கூட்டி படிப்பார். அவள் தனது
விண்ணபத்தில் கை ரேகை பதிவு செய்தார். ரசீது பெற்று கொண்டாள் .
அடுத்த வருடம் வந்து ரூ. 15,000 மாதமாதம் பெற்று கொள்ளுங்கள் என
அனுப்பி வைத்தனர் .
சாய் ராம் நிதி நிறுவன மோசடி ...!
கோடி கணக்கில் பண சுருட்டல் ...!!
நிறுவனர் தலைமறைவு ...!!!
செய்தியை பார்த்து மயங்கி விட்டாள் . மறு நாள் கையில் மண் எண்ணையை
எடுத்து கொண்டு நிறுவனம் சென்றாள் . அங்கு 100-க்கு மேற்பட்ட மக்கள்
ஆவேசமாக கூடி இருந்தனர் .போலீஸ் குவிந்து இருந்தது .அவள் அங்கு உள்ள
மற்றவரிடம் விஷயம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். ஒப்பாரி வைத்து அழுதாள் .
அருகில் இருந்த காவலரிடம் சொல்லி சொல்லி பார்த்தாள் . யாரும் அவளை
கண்டு கொள்ளவில்லை .
துக்கம் தாங்காமல் தன் உடலில் மண் எண்ணையை
ஊற்றினாள் . தீ பெட்டி எடுக்கும் போது ஒரு காவலர் அதை பார்த்து
"சடக் " என பிடுங்கினார் . தங்கம்மாள் புரண்டு புரண்டு அழுதாள் .
சாலையில் இருந்து எழுந்த நிற்க மறுத்த அவள் ...." ஐயோ ..என் பணம்
எல்லாம் போச்சே ...!" என துடித்தாள் .
ம்ம் ....அம்மா ......! என கத்தினாள் . அவள் இதயம்
"லப் -டப் " ஐ அதிகரித்து ....சில நிமிடங்கள் தான் .....நெஞ்சை பிடித்து
கொண்டு "அம்மா என சொல்லி கொண்டே கீழே விழுந்தாள் .
திடீர் மாரடைப்பு ...!
தங்கம்மாள் செத்து போய் விட்டாள் ...!!
பி. கு . 1. சாய் ராம் நிறுவனர் நாடு விட்டு நாடு விமானத்தில்
பறந்து கொண்டு இருந்தான் .
2. தங்கம்மாளின் மகள் என்ன செய்வாள் ...?
R. சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
01-07-2023