சிறுகதை 011/2023 முட்டாள் 01-07-2023
காதல் ...!
காதல் ...!!
காதல் ...!!!
மூர்த்தி 3 வருஷமாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறான் . அவள் பெயர்
இந்து . ஆழமான காதல் . பார்க்க ரொம்ப அழகு . உருண்டை முகம் .
நல்ல அகன்ற நெற்றி . தினமும் உடைக்கு ஏற்றவாறு ஸ்டிக்கர் பொட்டு .
கல்லோரியில் படிக்கிறாள் . பி .எ . சரித்திரம் .மூர்த்தியின் நண்பன்
ஒரு " வாட்ச் " கடை வைத்து இருந்தான் . தினமும் காலை மற்றும்
மாலையில் அவன் அங்கு நின்று கொண்டு இந்துவை " வாட்ச் " (சைட் )
செய்வான் .அவள் பெயர் , குடும்ப விவரம் மற்றும் படிக்கும் ஆண்டு
நண்பன் மூலம் அறிந்தான் . மூர்த்தி அதே கல்லூரியில் படித்தவன் .
மூர்த்தி " வாட்ச் " செய்வதை அவளும் "வாட்ச் " செய்தாள் .மூர்த்தி அவள்
அழகில் மயங்கி , லயித்து போய் இருந்தான் .
மூர்த்தி டிகிரி கிடைத்ததும் ஒரு வங்கியில் பணி செய்தான் .
அதிகம் படிப்பான் . விவேகனந்தா நூல்கள் மிகவும் பிடிக்கும். சமூக
சேவையில் ஆர்வம் .அடிக்கடி சென்னை சென்று ராமகிருஷ்ண ஆஸ்ரமம்
போய்விட்டு வருவான் ..சமூக சேவை ஆர்வம் அவனை வேலையை
ராஜினாமா செய்ய வைத்தது . சென்னை சென்று ரா .கி ஆஸ்ரமத்தில்
சேர்ந்தான் . அவனுக்கு மிஷன் நடதுதும் மாதாந்திர பத்திரகையில்
உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. சம்பளம் இல்லை . சாப்பாடு
மிஷன் போட்டுவிடும் . நன்றாக எழுதினான் . அவன் வேலை மற்ற
சேவகர்களால் பாராட்டபட்டது . எல்லாம் 3 வருஷங்கள் தான் . மூர்த்தி
மன குழப்பம் அடைந்தான் . கல்யாணம் செய்து கொள்ள ஆசை . அவனுக்கு
குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் .தனக்கும் ஒரு குழந்தை வேண்டும்
என்று நினைத்தான் .
வங்கி வேலையை முன்யோசனை
இல்லாமல் விட்டுவிட்டோமே என வருந்தினான் .
தன் மூட்டை , முடிச்சுகளுடன் சொந்த ஊர் வந்தான் .
பிறகு தான் இந்துவை பார்த்தான் . இந்துவுக்கு பரிசும் , கடிதமும்
கல்லூரி முகவரிக்கு அனுப்பி வைத்தான் . அவள் முர்த்தியை கண்டு
கொள்ள வில்லை. இப்படி 2 வருடம் ஓடிவிட்டது . அவள் வீட்டில் இந்த
விஷ்யத்தை சொல்லி இருப்பாள் என மூர்த்தி உறுதியாக நம்பினான் .
அவளிடம் பேச துடித்தான் .
மூர்த்தியின் பிறந்த நாள் . ஒரு முடிவு எடுத்தான் .
அவன் நேர்மை மிக்கவன் . தைரியசாலி . நேரே இந்து வீட்டுக்கு
போனான் . அவள் தங்கை கதவை திறக்க ....இவன் உங்க அம்மாவை
பார்க்க வேண்டும் என சொல்ல ...
அவர் அம்மாவிற்கு ஷாக் .
மூர்த்தி நேரே விஷ்யத்திற்கு வந்தான் .
" நான் இந்துவை விரும்புகிறேன் . கல்யாணம்
செய்து கொள்ள பிரியபடுகிறேன் ..."
" இல்லை ....அவளுக்கு டுபாய் மாப்பிளை நிச்சயம்
முடிந்து விட்டது ..."
என்று வாய் கூசாமல் போய் சொன்னார் . மறு நாள் லஞ்ச் சமயத்தில்
மூர்த்தி கல்லூரி சென்றான் . அவள் 4 நண்பர்களுடன் "பாஸ்கெட் பால்"
மைதானதத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தாள் . பயம் எதுவும்
இல்லமால் மூர்த்தி பேச்சை ஆரம்பித்து ....
" நான் பிறகு பேசவா ...?"
" இல்லை இப்போதே பேசு ...!"
" இந்து ...ஐ லவ் யு ...!"
" எனக்கு நிச்சயம் ஆகிவிட்டது ...!"
" இல்லை அது பொய் என்று எனக்கு தெரியும் ...!"
"ம்ம ...ஆமாம் பொய் தான் ...!"
"நீங்க என்ன சொல்றீங்க ...?"
" யு ஆர் மை எனிமி ...!"
" இல்லை ...நான் உங்களை உண்மையாக...."
"உனக்கு என்ன தகுதி இருக்கு ...? "
" என்ன எதிர் பார்ப்பு ...?"
" ஸ்டுப்பிட் ...! கெட் லாஸ்ட் ...!"
மூர்த்திக்கு செம ஷாக் . பளார் ..பளார் ...என்று கன்னத்தில் அரைந்த்து
போல இருந்தது .கிளம்பி விட்டான் . நேரே மது கடைக்கு போனான் .
பிறகு தன் முடிவை மாற்றி கொண்டான் . பேரிடி . " உனக்கு என்ன
தகுதி ...?"- இதுவே அவன் காதுகளில் எதிரொலித்தது . அவன் குலுங்கி
குலுங்கி நடு ரோடிலையே அழுதான் . துடிதுடித்து போனான் .
எந்த பெண் ஒன்றும் இல்லாதவனை விரும்புவாள் ..?
இது அவனுக்கு தோன்றவே இல்லை..
சொத்து இல்லை....!
வேலை இல்லை....!!
பணம் இல்லை ....!!!
காதலுக்கு கண் உண்டு .
அவன் ஒரு மடையன் ....!
R.சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
01-07-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!