Friday, 2 June 2023

 


சிறுகதை    002/2023                     பதக்கம்                                    03-06-2023


அன்று :

அமெரிக்காவின் ஒகியோ நதி கரையில் ....

ஒரு மேட்டின் மேல் உட்கார்ந்து ....தனது தலையை கால் முட்டியின் கைகளை 

வைத்து கொண்டு.....

தூரத்தில் இருப்வர்களுக்கு அவர் உடல் வேகமாக குலுங்குவது தெரிந்த்து .

ஆம் ...!

அவர் குலுங்க குலுங்க அழுது கொண்டு இருந்தார் .யாரும் அவர் 

பக்கத்தில் இல்லை .

எலியை கண்ட பூனை போல அமெரிக்க ஊடகங்கள் அங்கே அடித்து 

கொண்டு ஓடி வந்தனர் .

கைகளில் மைக் மற்றும் காமிராவுடன் வந்தனர் .அவர்கள் அழுகின்ற 

மனிதனை கையால் தட்டி எழுப்புகின்றன்ர் .அவர் அழுது கொண்டே 

மேலே எழுகிறார் . தன் ஆடைகளை சரி செய்து கொள்கிறார்.

பின் உரையாடல் ...

முழுவதும் ஆங்கிலதில் ....

" சார் ..நீங்கள் முகமது அலி தானே ..."

அழுகயை சற்று நிறுத்தி " ஆம் " என்கிறார் .

" நீங்கள் தானே ஒலிம்பிக்ஸில் குத்து சண்டையில் தங்க பதக்கம் 

 பெற்றவர்...? "

"ஆம் "

" நீங்கள் ஏன் அழுகிறேர்கள் ...? "

" மனம் சரி அல்ல ..."

" என்ன சார் ...நீங்கள் உலக அளவில் குத்து சண்டையில் சாம்பியன் ...

உங்களுக்கு என்ன வருத்தம் ... "


" இந்த உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டது. ஆனால் அமெரிக்காவில் 

இன்றும் நிற வெறி தலை விரித்து ஆடுகிறது . ஒரு நிற வெறி பிடித்த 

ஒரு நாட்டின் பிரதிநிதியாக ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டது பெரும் 

அவமானமாக கருதுகிறேன் .... "


" சரி.    நீங்கள் எவ்வாறு நிற வெறியால் பாதிக்க பட்டீர்கள் ..."

" வேண்டாம் ..வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்கள் ...! "

" சரி சார் ...இங்கு வந்து தனியே ஏன் அழுது கொண்டு இருக்கிறீர்கள் ...? "

" நான் பெற்ற தங்க பதக்கத்தை இந்த நதியில் வீசி எறிந்து விட்டேன் ...! "

" ஓ மை காட் ...!!! "

இன்று : 

இந்தியா . டெல்லி .நடு ரோடு .

மல்யுத்த வீராங்கனைகள் மத்திய எம். பி . பூஷன் மீது நடவடிக்கை 

எடுக்க கூறி போராட்டம் நடதுகின்றனர் .

குற்றம்    :   பாலியியல் வன்முறை ...!

பூஷனை கைது செய்ய சொல்லி போராட்டம் .

எப்போதும் போல் நிருபர்கள் கையில் மைக் மற்றும் காமிராவுடன் ...

இனி உரையாடால் முழுவதும் ஹிந்தியில் ....

" மேடம் உங்களின் குறிக்கோள் என்ன ..? எதற்காக இந்த போராட்டம் ..? "

மிகுந்த வருத்துத்துடன் ஒரு வீராங்கனை அழுது கொண்டே சொல்கிறார் ..

" நாங்கள்  பாலியியல் வன்முறை ...குறித்து எம். பி. பூஷன் மீது புகார் 

தந்தும் ...அவர் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை ...

அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் ...! "

" சரி ...அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் ...? "

" நீதி கிடைக்க வில்லை என்றால் நாங்கள் வாங்கிய பதக்கத்தை 

கங்கை நதியில் வீச தீர்மானித்து உள்ளோம் ..."

" மேடம் ...காவல் துறை என்ன சொல்கிறது ...? "

" நாங்கள் புகார் கூடுத்தும் ...பூஷனை கைது செய்ய எந்த ஆதாரமும் 

இல்லை என்று சொல்லி விட்டார்கள் ...! "

" நீங்கள் புகார் செய்து உள்ளீர்கள் அல்லவா ...? "

" ஆம். ஆனால் அரசு அதை கணக்கில் எடுத்து கொள்ள வில்லையே ? "

படார் ...! படார் ...!! படார் ...!!!

சுற்றி இருந்த போலீஸ் திடீர் என மல்யுத்த வீராங்கனைகள் மீது 

கொடூர தாக்குதல்...

அவர்களை குண்டு காட்டாக வலிய கொடூரமாக தூக்கி போலீஸ் 

வண்டியில் ஏற்றினார்கள் . வீராங்கனைகள் தடுத்தும் பயன் இல்லை.

கைது செய்வதாக போலீஸ் கூறியது .

எம். பி. பூஷன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சந்தோஷமாக 

பங்கு கொண்டு இருந்தார்.

நீதி கேட்டவர்கள் கைது...!

குற்றம் சாற்றபட்டவர் புதிய நாடாளுமன்றதில் ....

நிற்க .

உலகத்தில்.... மிக மிக ' புனித ' நதி கங்கை ..! அதில் சடலங்கள் 

மிதந்து  செல்வது வாடிக்கை . உலகில் அதிக மாசு பட்ட நதிகளில் 

முக்கியமான நதி கங்கை ....

வீராங்கனைகளின் பதக்கத்தை விழுங்குவதற்காக  காத்து 

கொண்டு இருக்கிறது .

மல்யுத்த வீராங்கனைகளின் கைது குறித்து இன்று (01-06-2023 )

ஒலிம்பிக் கமிட்டி மிக கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளது .


                                வாழ்க ஒலிம்பிக் கமிட்டி ...!

                               கங்கை காத்து கொண்டு இருக்கிறது ...!!

பி. கு. 1983ல் உலக கிரிக்கெட் கோப்பையை வென்ற கேப்டன் கபில் தேவ் 

             இன்று ( 02-06-2023 ) மிகுந்த வேதனையை வெளிபடுத்தி உள்ளார் ...!


R. சத்ய நாராயணன்      ஸ்ரீ விவேக்           03-06-2023


No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!