Friday, 13 October 2023
டேய் ....!
ஓம் சரவணபவ ...!!! !!!
Friday, 6 October 2023
இஸ்மாயில்
உலுக்கியவர் ...!
மணி ஆச்சு ...!
சிறுகதை 039/2023 07-10-2023
வாஞ்சிநாதனின் தியாகம்
பரவட்டும்...!
Friday, 29 September 2023
இசம்ஸ்
மார்க்ஸிசம் ஒன்றே புரட்சிகரமானது...!
இரு உண்மை சம்பவங்கள் .. ! !
சினிமா கதாநாயகன் ஒரு முறை மன நல மருத்துவரிடம் சென்றார்.
அவரது முறை வந்ததும் உள்ளே சென்றார். மருத்துவர் அவரை உட்கார
சொன்னார். பின்பு என்ன பிரச்சனை என்று கேட்டார்.
அவ்வளுவுதான் . ஓ என்று ஆழ ஆரம்பித்து விட்டார். மருதுவருக்கு
ஒன்றும் புரிய வில்லை. பின்பு அவர் அது தான் என்னிடம் வந்து
விட்டீர்களே ...? இனி கவலை ஏன் என்று கேட்க நாயகன் ஓ ஓ வென
அழுதார். பின்பு அழுகையை சற்று குறைத்து கொண்டு " டாக்டர்
நான் நிம்மதியாக இல்லை . சதா அழுதுகொண்டே இருக்கிறேன் .
எனக்கு மனசோர்வு வந்து உள்ளது . மிக ஸ்ட்ராங்க் மத்திரைகள்
தாங்கள். " என சொன்னார். மருத்துவரோ உங்களுக்கு ஒரு
பிரச்சனை-யும் இல்லை . உங்களுக்கு மாத்திரை தேவை இல்லை .
நான் ஒரு சிகிச்சை சொல்கிறேன் . அதன் படி நடங்கள் . நகரத்தில்
சார்லி சாப்ளின் படம் ஓடுகிறது . போய் பாருங்கள் . சிரித்து சிரித்து
நீங்கள் நலமாகி விடுவீர்கள் என்றார்.
அவ்வளவு தான் நாயகன் திரும்பி ஓ ஓ வென பெரிதாக ஆழ ஆரம்பித்து
விட்டார். விக்கி விக்கி , தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்து விட்டார் .
டாக்டர் குழம்பி போய் நான் தான் உங்களுக்கு மண்சோர்விலிருந்து
விடு பட வழி சொல்லி விட்டேனே என்றார்.
நாயகன் ...சற்று அழுகையை குறைத்து பேசினார் .
" நான் தான் அந்த சாட்சாத் சார்லி சாப்ளின் ..!"
??? ??? ???
சிரிக்க வைத்தவன் இப்போது அழுகிகிறான் ...!
சம்பவம் -02
ஒரு முறை அந்நிய ஊரில் சார்லி சாப்ளின் மாறு வேட போட்டி நடந்தது .
ஊர் எங்கும் போஸ்டெர்கள் . சார்லி சாப்ளின் வேஷத்தில் பலர். நம்
சார்லி சாப்ளினிக்கும் ஒரு ஆசை . இந்த போட்டியில் தாமும் கலந்து
கொள்ள விரும்பினார்.
ஒவ்வொருவரும் 3 நிமிடங்கள் சார்லி சாப்ளின் போன்று நடிக்க வேண்டும்.
வரிசியாக எல்லோரும் நடித்து விட்டு வந்தார்கள் . சார்லி சாப்ளின் (ஒரிஜினல்)
முறை வந்தது . 3 நிமிடம் நடித்தார் .
போட்டி முடிந்து விட்டது .
பரிசு அளிப்பு விழா தொடங்கியது . சார்லி சாப்ளின் (ஒரிஜினல் ) குஷி
ஆகி விட்டார்.
முதல் பரிசு - சார்லி சாப்ளினுக்கு அல்ல ...!
இரண்டாம் பரிசு- சார்லி சாப்ளினிக்கு அல்ல ...!!
மூன்றாம் பரிசு - சார்லி சாப்ளினுக்கே (ஒரிஜினல் )
நகலக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசு.....!
அசலுக்கு மூன்றாம் பரிசு....!!!
இது தான் விதி ...!
இது தான் வாழ்க்கை ...!!
இது தான் உலக நியதி ...!!!
உண்மை சுடும் ...!
Friday, 22 September 2023
மாபெரும் போராட்டம்
( பாகம் -02) 23-09-2023
போராட்டாம் தமிழகம் தழுவியதாக மாறியது .பல ஊர்களில்
கண்டன ஆர்பாட்டம் , கண்டன பேரணி மற்றும் அடையாள வேலை
நிறுத்தம் என்று போராட்டம் குபு குபு என பரவியது .போராட்டம் தீ என
பரவியது . நான் திருப்புரில் 1000 கணக்கான தொழிளார் மத்தியில்
நன்கு பேசினேன் . உண்மையில் வீர உரை ஆற்றினேன் . புரட்சி
பற்றி பேச வில்லை. தொழிலாளர்கள் நான் CPI அல்லது CPMயை
சார்ந்தவன் இல்லை என்று தெரிந்து இருந்தாலும் என் பேச்சை மிகவும்
விரும்பினார்கள் . நான் அரசியல் வித்யாசம் பார்க்காமல் தொழில்
சங்க ஒற்றுமை பற்றி மட்டுமே பேசினேன் . நல்ல கரவொலி . எனக்கு
அது தெம்பை கொடுத்தது .இப்படி இருக்கும் போது ...
நான்
இளங்கோ
நாராயணன்
ஒன்று கூடி ஒரு போராட்ட பிரச்சார குழுவை தொழில் சங்க மேலிடம்
அமைத்து எங்களை பல ஊர்களுக்கு அனுப்பி வைத்தன்ர் .
நீலகிரி
கோவை
திருப்பூர்
கரூர்
ஈரோடு
என ஊர் ஊராக சென்று போராட்டத்தின் அவசியம் குறித்து பேசி
அவர்களை உற்சாக படுத்தினோம். இதில் விந்தை என்ன வென்றால்
நாங்கள் மூவருமே புரட்சிகர இயக்கம் சார்ந்தவர்கள் . எனக்கு பின்னால்
வந்தாலும் அவர்களின் அற்பணிப்பு அதிகம். மேலும் ஒரு தோழர்
ரூல் -5 வாங்கினார். பால சுப்ரமணியம் ( இப்போது அவர் மறைந்து
விட்டார் ).....அவரும் பின்னால் முழு நேர புரட்சியாளராக சேர்ந்தார்.
போராட்டம் போல் அரசியல் விழிபுணர்ச்சி தருவது வேறு ஒன்றும்
இல்லை.
நான் முழு நேர புரட்சியாளன் என முடிவு எடுத்த பின்பு தான்
இந்த போராட்டம் துவங்கியது. இப்போது நன்கு புரிகிறது . புரட்சிகர
அமைபிற்கு தொழில் சங்கம் பற்றிய அறிவும் , அனுபவமும் இல்லை .
எங்கள் போராட்டதிற்கு எந்த வித வழிகட்டாலும் இல்லை . நாங்கள்
நால்வரும் ( பால சுப்ரமணியம் ) தொழில் சங்க பணியிலே இருந்து
இருந்தால் ஒரு உறுதியான கட்டுக்கோப்பான தொழில் சங்கதை
மாநிலதில் உருவாக்கி இருப்போம் . நாங்களும் வேலை இழக்காமல்
இருந்து அதாவது பகுதி நேரம் மட்டும் புரட்சிகர அமைபிற்கு வேலை
செய்து இருந்தால் எங்களுக்கும் வாழ்வை இழக்க நேர்ந்து இருக்காது .
புரட்சிகர தமிழக தொழில் சங்கம் கட்டி இருப்போம் . அமைபிற்கு
எனக்கு எந்த வழிகாட்டுதலும் தர வில்லை . இல்லை அதனால் தர
முடிய வில்லை . ஒரு பெரும் வாய்பை நழுவ விட்டோம் .இந்த மாபெரும்
போராட்டத்தை அமைப்பு கண்டு கொள்ள கூட வில்லையே ...?
எங்கள் தொழில் சங்க அகில இந்திய அமைப்பு கமிட்டி தோழர் ராஜு
அவர்கள் என்னை முழு நேர தொழில் சங்கவாதியாக வர சொன்னார் .
மாதாமாதம் சம்பளம் வந்து விடும் என உறுதி அளித்தார் . அட கடவுளே ..!
நான் ஏற்கனவே முடிவு எடுத்து இருந்ததால் மன்னிக்கவும் என்று சொல்லி
விட்டேன். இன்று நினைத்து பார்க்கிறேன் . அப்படி சென்று இருந்தால்
கூட என் வாழ்வு இவ்வளவு மோசகமாகி இருக்காது . என்ன செய்ய ...?
அப்போது நான் என் அமைப்பின் மீது முழு நம்பிக்கை வைத்து இருந்தேன் .
ம் ம்....
போராட்டம் முடிவுக்கு வந்தது .ஒரே ஒரு மன்னிப்பு கடிதம் கொடுக்க
சொல்லி என் தொழில் சங்கம் கேட்டு கொண்டது . நானும் சம்மதம்
தெரிவித்தேன் . பணி நியமன உத்தரவு வந்தது . எனக்காக
ஆயிரகணக்கான தொழிலாளர் போராடி பெற்ற வெற்றி . நான்
அவர்களுக்காகவே பணியில் சேர்ந்து ஒரு மாதம் வேலை செய்தேன் .
தொழில் சங்கமும் , தொழிலாளர்களும் என்னை தனி இடத்தில் வைத்து
பார்த்தனர்.
ஒரே ஒரு மாசம் .
நான் வேலைக்கு முழுக்கு போட்டேன் . நான் என்ன செய்கிறேன் என்ற
நினைப்பே எனக்கு வரவில்லை. எல்லாம் வீதி . நியதி .
கடைசியில் நாங்கள் நால்வரும் பணியை துறந்தோம் ...!
இது தவறான முடிவு.
எங்களை தொழில் சங்கதிலயே பணி செய்ய சொல்லி இருக்க வேண்டும் .
அதிகார வர்கத்தின் எதிராக போராடிய போது தான் தொழில் சங்க
ஒற்றுமை மற்றும் அவர்களின் போராட்ட குணம் மற்றும் அற்பணிப்பை
முழுதாக உணர்தேன் .
நான் சார்ந்த அமைபிற்கு தொழில் சங்க போராட்டம் பற்றி எந்த புரிதலும்
இல்லை என்பதை இப்போது உணர்கிறேன்.
என் போராட்டம்
மாபெரும் போராட்டம்
கடைசியில் நாங்கள் நால்வரும்
மத்திய அரசு பணியை துறந்தோம் ..!
மாபெரும் தவறு ...!!
மாபெரும் போராட்டம்
மாபெரும் வெற்றியே ...!!! !
மாபெரும் போராட்டம்
சிறுகதை 35/2023 பாகம் - 01 23-09-2023
நிர்வாகமே நிர்வாகமே
நிர்வாகமே நிர்வாகமே
காட்டு தர்பார் நிர்வாகமே
காட்டு தர்பார் நிர்வாகமே
தோழர் சத்திய நாராயணனின்
தோழர் சத்திய நாராயணனின்
வேலை நீக்க உத்தரவை
வேலை நீக்க உத்தரவை
வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு
வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு
அனுமதியோம் அனுமதியோம்
அனுமதியோம் அனுமதியோம்
காட்டு தர்பார் நிர்வாகதை
காட்டு தர்பார் நிர்வாகதை
அனுமதியோம் அனுமதியோம்
அனுமதியோம் அனுமதியோம் ...!
ஆர்பாட்ட முழக்கங்கள் விண்ணை தொட்டன.உணர்ச்சி பெருக்கும்
அற்பணிப்பும் கொண்ட தொழில் சங்க தலைவரும் குன்னூர் அலுவலக
பெண்கள் அனைவரும் எரிமலை என வெடித்து கோஷம் செய்தார்கள் .
இது துவக்கம் தான் . இந்த ஆர்பாட்டத்தின் பின்னணி என்ன ..? வேலை
நீக்க உத்தரவை பெற்றது சாட்சாத் நானே தான் .
ஆம்.
நான் தான் சத்திய நாராயணன் .தொலைபேசி இலாக்காவில் 3 மாதம்
பயிற்சி பெற்று 1982-இல் நிரந்தரம் ஆனேன் . நான் வேலையில் சுறுசுறுப்பாக
இருப்பேன் .நன்கு உழைத்தேன் . எனது வேகம் மேலதிகரிகளுக்கு
ஆச்சர்யியமாக இருந்தது . ஆனால் நான் வேலை செய்யும் பொழுதே
சக ஊழியரிடம் கேலியும் , கிண்டலுமாக அரசியல் பேசுவேன்.எனக்கு
டிபார்ட்மெண்ட் மாற்றம் வந்தது . பிரச்சனை ஆரம்பித்தது . பிரிட்ஷ்
காலத்தில் இருந்த " மூவ்மென்ட் ரிஜிஸ்டர் " பழக்கதிற்கு வந்தது . யார்
வெளியே போனாலும் அதில் காரணம் , நேரம் ஆகியவற்றை பதிவு செய்ய
வேண்டும் . நான் டீ குடிக்க போகிறேன் என்று எழுதி செல்வேன் . ஆனால்
நான் பெண்கள் சிறுநீர் கழிக்க சென்றால் அதையும் எழுதவேண்டுமா ?
என கேள்வி கேட்டேன் . பெண்கள் ஆதரவு கிடைத்து அவர்கள் அதில்
எழுதுவதை அவர்களே எழுதுவதை விட்டு விட்டனர் .
இது முடிந்து பல மாதங்கள் ஓடி போனது . ஒரு உயர் அதிகாரி எங்களுக்கு
வந்தார். பெயர் அருமை சின்னான் . வயதானவர். மீசையை முறுக்கி
விட்டு இருப்பார். நான் எப்போதுமே அலுவலகம் 15 நிமிடங்களுக்கு முன்பே
வந்து விடுவேன் . ஆம். நிதானமாக நான் ஒரு சிகெரேட் குடிப்பேன்.
புதிய மேல் அதிகாரி காலையில் வெளியே நின்று கொண்டு இருப்பார்.
நான் எப்போதும் போல் சிகெரேட் குடிப்பேன். இது அவரை ரொம்ப
பாதித்தது . நான் அவமரியாதை செய்வதாக நினைத்து கொண்டார்.
ஆனால் எனக்கு அப்படி எல்லாம் எண்ணம் போகவில்லை. தம் அடிப்பது
ஒரு பழக்கமே .
அதிகரிகளுக்கு ஊழியரை பற்றி பேசுவது தான் அவர்கள் பொழுது போக்கு.
என்னை பற்றி எந்த அதிகாரி-யும் நல்ல எண்ணம் வைத்து இருக்க வில்லை .
காரணம் எனது பேச்சு .அருமை சின்னானுக்கு என் மீது ஏனோ கோபம் .
என்னை பழி வாங்க நினைத்தார் . அவர் மேல் அதிகாரி என்னை ....அழ
வைக்க எண்ணிஉள்ளார் . ஒரு நாள் மதியம் எனக்கு ஒரு மெமோ கொடுத்து
அனுப்பினார்.
அது ரூல்-5 ...!
அதன் படி எந்த காரணமும்
காட்டாமல் வேலை நீக்க உத்தரவை
வழங்கினார் . அவரால் என் வேலை பற்றி
குற்றம் சுமத்த வாய்ப்பு இல்லாததால்
இந்த கொடிய ரூல் 5....!!! !!
அவரின் நோக்கம் அவர் காலில் விழுந்து வணுங்குவேன் என கருதினார்
போல. நான் அவரை சந்திக்க வில்லை. இந்த உத்தரவை எங்கள் தொழில்
சங்க செயலரிடம் ( திரு .கோபால் ) கொடுத்தேன் . அவர் அதிர்ந்து போனார் .
அவர் அவரது மேல் நிலை தோழர்களிடம் பேசி விட்டு நாளை மாலை
ஆர்பாட்டம் என தெரிவிதார். அந்த ஆர்பாட்டதின் கோஷங்களை தான்
நீங்கள் படித்தீர்கள் .ஆர்பாட்டத்தை எதிர் பார்க்காத அவர் கலங்கி விட்டார்.
ஆர்பாட்டங்கள் தொடர்ந்தன . அருமை சின்னான் கதி கலங்கி தினமும்
அலுவலகத்திற்கு ஒரு சூட் கேஸில் அரிவாள் கொண்டு வருவதாக நான்
கேள்வி பட்டேன் . என்னை கண்டால் அவருக்கு பயம் . நான்கு நாட்களுக்கு
பிற்கு அடையாள வேலை நிறுத்தம் . அதிகாரி அசைந்து கொடுக்க வில்லை .
பிறகு என்னுடன் வேலை பார்த்த 2 தோழர்களுக்கும் ரூல் -5 கொடுக்க பட்டது .
போராட்டம் பெரிதாகி கொண்டே போனது . தொலை பேசி இலக்காவில்
தோழர்கள் உள்ளே நுலைந்து கோஷம் போட்டார்கள் . எந்த தொலை பேசியை
எடுத்தாலும் போராட்ட கோஷங்களே கேட்கும். கூன்னூர் மற்றும் ஊட்டி , பிறகு
கோத்தகிரி மற்றும் கூடலோர் பகுதிகளில் போராட்டம் பரவியது.
மாவட்ட அமைப்பாளர் தோழர் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். நீலகிரி
மாவட்டம் முழுக்க வேலை நிறுத்தம் நடைபெற்றது. எல்லோரும் ஒரே ஒரு
தனிமனிதனின் சுதந்திற்காக போராடினார்கள் . அற்பணிப்பு 100%.
போராட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் போலீஸ் பட்டாளம் குவிந்து
இருந்தது . கண்டன பேரணியும் கண்டன கூட்டமும் நடந்தன . நான் கண்டன
கூட்டதத்தில் பேசினேன் . நான் புரட்சி பற்றி எல்லாம் பேசவில்லை.
தொழிலாளர் ஒற்றுமை மற்றும் தொழில் சங்க போராட்டங்கள் பற்றியே
பேசினேன் . பயங்கர கர ஒலி .போராட்டம் நீண்டு கொண்டே போனது .
தமிழ் நாட்டில் ஆங்காங்கே அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது .
ஆர்பாட்ட கோஷங்களும் தமிழகம் எங்கும் எதிர் ஒலித்தது. தொழில் சங்க
பத்திரிகை என்னை ஒரு தீவரவாதி என்று தலை அங்கம் எழுதி ...ஆனாலும்
போராட்டதிற்கு ஆதரவு செய்தனர்.
மாதங்கள் ஓடின.
தொழில் சங்க தலைவர்கள் என் வீட்டிற்கு வந்து சம்பள பணத்தை கொடுத்து
விட்டு போனார்கள் . இங்கு ஒன்று சொல்லி கொள்ள பிரியபடுகிறேன் .
CPI & CPM தோழர்களுக்கு இருந்த அக்கறை கூட CPI- ML அமைப்பிற்கு
துளியும் இல்லை. ஆனால் நான் அதை அப்போது பெரிது படுத்த வில்லை.
அரசியல் வேறாக இருந்தாலும் தொழில்சங்கம் என்றால் தொழிலாளர்
ஒற்றுமையே பெரிது .நான் சார்ந்து இருந்த புரட்சிகர அமைப்பு எனக்கு
ஏதாவது வேண்டுமா ...? என சம்பரயாதமாக கூட கேட்க வில்லை . அது
மட்டும் அல்ல . பெரிய தொழில் சங்க போராட்டம் நடைபெறுகிறது ....அதற்கு
வழிகாட்ட முன் வரவில்லை. தொழில் சங்க போராட்டாம் என்றால் அதில்
புரட்சி இருக்காது என்று நினைத்து விட்டார்கள் போல . இந்த சமயத்தில்
தான் மத்திய கமிட்டி என்னை முழுநேர புரட்சியாளராக வார சொன்னது .
நான் எந்த விட முன்யோசனை இன்றி சம்மதம் தெரிவிதேன் . அப்போது
அகில இந்திய தொழில் சங்க தோழர் என்னை முழுநேரமாக பாணியாற்ற
சொன்னார். கூடவே மாதம் தோறும் சம்பளம் கொடுத்து விடுவோம் என
என்னை கேட்டு கொண்டார். நான் ஏற்கனவே முடிவு எடுத்து இருந்ததால்
அந்த வாய்ப்பை இழந்தேன் .
போராட்டம் பரவியது . எரிமலை என தமிழ் நாடு முழுவதும் பரவியது .
தொழிலாளர்கள் பொங்கி எழுந்தனர். என்னை மையமாக வைத்து
நடை பெற்ற போராட்டம் குபு குபு என பரவியது
போராட்டம் தொடர்கிறது ...!
R .சத்திய நாராயணன் 23-09-2023
சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்