இரு உண்மை சம்பவங்கள் .. ! !
சினிமா கதாநாயகன் ஒரு முறை மன நல மருத்துவரிடம் சென்றார்.
அவரது முறை வந்ததும் உள்ளே சென்றார். மருத்துவர் அவரை உட்கார
சொன்னார். பின்பு என்ன பிரச்சனை என்று கேட்டார்.
அவ்வளுவுதான் . ஓ என்று ஆழ ஆரம்பித்து விட்டார். மருதுவருக்கு
ஒன்றும் புரிய வில்லை. பின்பு அவர் அது தான் என்னிடம் வந்து
விட்டீர்களே ...? இனி கவலை ஏன் என்று கேட்க நாயகன் ஓ ஓ வென
அழுதார். பின்பு அழுகையை சற்று குறைத்து கொண்டு " டாக்டர்
நான் நிம்மதியாக இல்லை . சதா அழுதுகொண்டே இருக்கிறேன் .
எனக்கு மனசோர்வு வந்து உள்ளது . மிக ஸ்ட்ராங்க் மத்திரைகள்
தாங்கள். " என சொன்னார். மருத்துவரோ உங்களுக்கு ஒரு
பிரச்சனை-யும் இல்லை . உங்களுக்கு மாத்திரை தேவை இல்லை .
நான் ஒரு சிகிச்சை சொல்கிறேன் . அதன் படி நடங்கள் . நகரத்தில்
சார்லி சாப்ளின் படம் ஓடுகிறது . போய் பாருங்கள் . சிரித்து சிரித்து
நீங்கள் நலமாகி விடுவீர்கள் என்றார்.
அவ்வளவு தான் நாயகன் திரும்பி ஓ ஓ வென பெரிதாக ஆழ ஆரம்பித்து
விட்டார். விக்கி விக்கி , தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்து விட்டார் .
டாக்டர் குழம்பி போய் நான் தான் உங்களுக்கு மண்சோர்விலிருந்து
விடு பட வழி சொல்லி விட்டேனே என்றார்.
நாயகன் ...சற்று அழுகையை குறைத்து பேசினார் .
" நான் தான் அந்த சாட்சாத் சார்லி சாப்ளின் ..!"
??? ??? ???
சிரிக்க வைத்தவன் இப்போது அழுகிகிறான் ...!
சம்பவம் -02
ஒரு முறை அந்நிய ஊரில் சார்லி சாப்ளின் மாறு வேட போட்டி நடந்தது .
ஊர் எங்கும் போஸ்டெர்கள் . சார்லி சாப்ளின் வேஷத்தில் பலர். நம்
சார்லி சாப்ளினிக்கும் ஒரு ஆசை . இந்த போட்டியில் தாமும் கலந்து
கொள்ள விரும்பினார்.
ஒவ்வொருவரும் 3 நிமிடங்கள் சார்லி சாப்ளின் போன்று நடிக்க வேண்டும்.
வரிசியாக எல்லோரும் நடித்து விட்டு வந்தார்கள் . சார்லி சாப்ளின் (ஒரிஜினல்)
முறை வந்தது . 3 நிமிடம் நடித்தார் .
போட்டி முடிந்து விட்டது .
பரிசு அளிப்பு விழா தொடங்கியது . சார்லி சாப்ளின் (ஒரிஜினல் ) குஷி
ஆகி விட்டார்.
முதல் பரிசு - சார்லி சாப்ளினுக்கு அல்ல ...!
இரண்டாம் பரிசு- சார்லி சாப்ளினிக்கு அல்ல ...!!
மூன்றாம் பரிசு - சார்லி சாப்ளினுக்கே (ஒரிஜினல் )
நகலக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசு.....!
அசலுக்கு மூன்றாம் பரிசு....!!!
இது தான் விதி ...!
இது தான் வாழ்க்கை ...!!
இது தான் உலக நியதி ...!!!
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!