Friday, 29 September 2023

 


                          இசம்ஸ் 

சிறுகதை 038/2023                                                                                    30-09-2023


மார்க்ஸ் யார் இவர் ...?

ஏங்கெல்ஸ் யார் இவர்....??

இவர்களை பற்றி தெரியாதவர்கள் இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை 

இல்லை. 

இவர்கள் கம்யுனிஸ்ட் .

கம்யுனிஸ்ட் அறிக்கை வெளி இட்டவர்கள் .

தொழிலாளர் வர்கமே ஆட்சி செய்ய வேண்டும் என அழுத்தம் 

திருத்தமாக சொன்னவர்கள். 

மார்க்ஸியம் தெரிய விட்டாலும் அதை படியுங்கள். அவர்கள் சோசியல்-

இசம் பற்றி பேசினார்கள் . இன்று உலக அளவில் மார்க்ஸியதிற்கு 

வெற்றி கிடைக்க வில்லை என்றாலும் சமூக மற்றதிற்கான "கரு "

மார்க்ஸியத்தில் மட்டுமே உண்டு. நான் மார்க்ஸியத்தை ஏற்று 

கொண்டாலும் எனக்கு அவர் மீது சில விமர்சனங்கள் உண்டு. அவர் 

இந்தியாவை பற்றி எழுதிஉள்ளது சரி அல்ல . பிரிட்டிஷ் இந்தியாவை 

இன்பம் தரும் அழிவிற்கு கொண்டு செல்கிறது என்றார். மேலும் 

பசு மற்றும் குரங்கை (ஹனுமன் ) வழிபடுபவர்கள் காட்டு மிராண்டி 

ஆகவே இருக்க வேண்டும் என்றார். இது தவறு. 2 நூற்றாண்டுகள் 

சென்று விட்டாலும் இப்போதும் இந்தியர்கள் பசுவை மற்றும் 

குரங்கை (ஹனுமன் ) வழி பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் .

நாம் இன்றும் காட்டு மிராண்டிகளா ...? நம்து கலாசாரம் , பண்பாடு ,

வேதம் , உபநிசத் போன்றவற்றை அவருக்கு தெரியாமல் போய் விட்டது .

மார்க்ஸியதிற்கு பிறகு வருவோம் :

இன்று இளைஞர்கள் " செக்குவாரா " யார் என்று தெரியாமலே 

அவருடைய "டீ ஷர்ட் " போட்டு கொள்கிறார்கள் . 

அது இருகட்டும் . 

நாம் பெரியார் மற்றும் அம்பேத்கரை பற்றி பேச வேண்டும் . புரட்சிகர 

இயக்கங்கள் இவர்களை புரட்சியாளராக கருதிகிறார்கள் .

மார்க்ஸ் படத்துடன் இவர்கள் படத்தை போடுகிறார்கள் .

                                            பெரியரிசம் 

                                            அம்பேத்கரிசம் 

என்று ஒன்றும் இல்லை .

பெரியார் யார் ...?

ஜாதி ஒழிப்பு போராட்டம் நடதியவர். ஜாதி ஒழிப்பு என்பதை விட 

பிராமணர் எதிர்ப்பே இவரது கொள்கை. இன்று கிராம்ங்களில் 

தீண்டாமை உயர் ஜாதி இந்துகளால் கடை பிடிக்க படுகிறது . இது பற்றி 

வைக்கம் வீரர் எதுவும் பேசியது இல்லை. இது பற்றி நீதி கட்சியோ 

அல்லது திராவிடர் கழகமோ பேசியது கிடையது. பெரியார் ருசியா சென்று 

வந்த பின் சமதர்ம சமூகம் பற்றி பேசினார் . நேரு கண்டனம் செய்ததால் 

கொள்கையை மாற்றி கொண்டார். சுய மரியாதை , தன்மானம் மற்றும் 

மாநில சுய ஆட்சி பற்றி பேசினார் . மேலும் ஆகஸ்ட் 15-யை " துக்க தினமாக "

கொண்டாட சொன்னார். விடுதலைக்கு பிறகு தி .க . எந்த சீர்திருத்தமும் 

செய்ய வில்லை. அதன் மதிப்பு மறைந்ததது .பின் தனது 72-வது வயதில் 

26 வயது உடைய மணியம்மையை மணந்தார் . அண்ணாவிக்கு இது ஏற்று 

கொள்ள முடிய வில்லை. அதற்கு தனக்கு பிறகு தன் சொத்தை காப்பாற்ற 

ஒருவர் வேண்டாமா ? என பெரியார் கேட்டார். ஏன் ...? தான் தலைவராக 

இருந்த தி .க .விற்கே எழுதி வைக்கலாமே ...? ?

அடுத்து அம்பேத்கர் . இவர் நம்து அரசியல் சாசன வரைவு குழுவின் 

தலைவர் . இட ஒதுக்கிடே அவர் லட்சியம் . ஜாதியை ஒழிக்க வேண்டும் 

என்றால் பொருளாதார அடிபடையில் தான் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

இதை கண்டும் காணாமலும் விட்டு விட்டார். மேலும் இட ஓதிக்கிடு 10

வருடங்களுக்கு தான் செல்லுபடியாகும் என அரசியல் சாசனத்தில் 

எழுதி இருந்தார். ஆனால் இத்தனை வருடங்களாக தொடர்வது யாரால் ..???

சிந்திக்க வேண்டும் . 

அரசியல் கட்சிகள் இடஒதுக்கீடு விஷயத்தை வாக்கு வங்கி என செயல் 

படுகின்றனர். இது கேவலம் . அசிங்கம். அபத்தம் .

பெரியார் மற்றும் அம்பேத்கர் வலது சாரி சீர்திருத்த வாதிகள் . இவர்கள் 

புரட்சியாளர்கள் இல்லை. மக்களை வெகு காலம் ஏமாற்ற முடியாது . 

               மார்க்ஸ்-க்கு நிகர் பெரியார் இல்லை ...!

               மார்க்ஸ் -க்கு நிகர் அம்பேத்கர் இல்லை ...!!

              மார்க்ஸ் -க்கு நிகர் மார்க்ஸ் மட்டுமே ...!!!



   மார்க்ஸிசம் ஒன்றே புரட்சிகரமானது...! 


R. சத்திய நாராயணன்       சின்ன சேவகன்         30-09-2023

                       

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!