மணி ஆச்சு ...!
சிறுகதை 039/2023 07-10-2023
17--06-1911
" நாதா ...! ! "
"ம்ம் "
" மணி ஆச்சு ..."
"ம்ம் "
"நாதா ..அதை எடுத்து கொண்டாயா ..?"
" எடுத்து கொண்டு விட்டேன் "
" பின் ஏன் புறப்பட தாமதம் ...?"
" இதோ புறப்பட்டு விட்டேன் . நான் காளி மற்றும் பாரத மாதவை
வணங்க வேண்டும் ..."
" சரி ...நாதா ...பயப்படாதே..."
" ம்ம் "
நாதன் கண்களை மூடிக்கொண்டு காளி தேவியை வணங்கினான்.
பிறகு ' பாரத மாதா " வை தியானித்தான் .தியானதிற்கு பிறகு
பாரத மாதாவின் கால்களை தொட்டு தன் கண்களில் ஒற்றி கொண்டான் .
" தோழர்களே ...நான் தயார் .நான் உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன் "
அங்கு 4 பேர் இருந்தனர் . ஒவ்வொருவராக நாதனை கட்டி பிடித்து
பிரியாவிடை கொடுத்தர்கள் .
" பாரத மாதாவிற்கு ஜெய் " என்று சொல்லி கிளம்பினான் .
மணி ஆச்சு ...!
திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் மணியாச்சி ஸ்டேஷன் வந்ததது .
நாதன் மிக நிதானமாக நடந்தான் .
ரயில் மணியச்சியில் 10 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் . நாதன்
மிக மிக பொறுமையுடன் முதல் வகுப்பு பெட்டி நோக்கி நடந்தான் .
கடைசி கோச் முன்பாக முதல் வகுப்பு பெட்டி இருந்ததது .
நாதன் வந்து விட்டான் .
மணி ஆச்சு ...!
நாதன் முதல் வகுப்பு பெட்டி கதவை திறந்தான் . ஒரு ஆங்கில துரை,
மற்றும் அவன் மனைவி இருந்தனர்.
ஆம் .
ஆஷ் துரை தான் .
வ.உ .சி மற்றும் சிவாவை சிறையில் அடைத்து பெரும் சித்திரவதை-க்கு
காரணமான அதே ஆஷ் துரை தான் .
நாதன் தன் பாக்கெட்-லிருந்து துப்பாக்கியை எடுத்து ஆஷ் துரையை
சுட்டான் . ஆஷ் துரை இறந்தான் .
உடனே ...நாதன் பொது கழிப்பிடம் சென்று துப்பாக்கியால் தன்
தலையில் சுட்டான். அவனது மூளை சிதறியது .
ஆம் ...!
நாதன் வேறு யாரும் அல்ல .
வாஞ்சிநாதன் தான் .
பயங்கர வாதம் தீர்வு அல்ல. ஆனால் தான் கொண்ட தேச பற்றின்
காரணமாக அந்த வழியை தேர்ந்து எடுத்தான் .
ஆனால் அவனிடம்
தேச பற்று
தியாகம்
அற்பணிப்பு
இவற்றிக்கு வாஞ்சிநாதனிடம் குறைவே இல்லை. இந்திய சுதந்திர
போராட்டதில் இது போல் எங்கும் இந்த மாதிரி நிகழ்வு நடக்கவில்லை .
வ. உ. சி. யை செக்கு இழுக்க வைத்த , சிவாவிற்கு தொழுநோய் வர
காரணம் ஆஷ் துரை தான் என முடிவு செய்து ஆஷ் துரையை
கொன்றான்.
ஒரு வேளை ....இந்த தியாகம் , தேச பற்று மற்றும்
அற்பணிப்பு இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு
வருமே ஆனால் ...ஒரு எரிமலை வெடிக்கும் .
அது ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளுக்கு சமம் ...!
அது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளுக்கு சமம் ...!!
அதுஆயிரக்கணக்கான அணுகுண்டுகளுக்கு சமம் ...!!!
நமக்கு சம தர்ம நாட்டை உருவாக்க பயங்கரம் அற்ற கோடிக்கணக்கான
இளைஞர்கள் அவசியம் .
இதுவே நமது இன்றைய தேவை.
பயங்கரவாதம் அல்ல ...!
வாஞ்சிநாதனின் தியாகம் , அற்பணிப்பு உள்ள
மக்களே தேவை...!!
வாஞ்சிநாதனின் தியாகம் பரவட்டும்.
வாஞ்சிநாதனுக்கு வீர வணக்கம் ...!
வாஞ்சிநாதனின் அற்பணிப்பு பரவட்டும் ...!!
வாஞ்சிநாதனின் தியாகம்
பரவட்டும்...!
R. சத்திய நாராயணன் சின்ன சேவகன் 30-09-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!