Friday, 6 October 2023

                                        

                          இஸ்மாயில் 

சிறுகதை 040/2023                                                                                   07-10-2023

டீ கடை .

இது நூலகம் போல .

நல்ல புத்தகங்களுக்கு ஈடாக நல்ல நண்பர்கள் கிடைக்கும் இடம். 

சுமார் 10 ஆண்டுக்குக்கு முன் மெயின் ரோடில் ஒரு டீ கடை இருந்ததது.

தினமும் காலை மாலை இரு நேரங்களிலும் செல்வேன். மாலையில் 

நண்பர்கள் வருவார்கள். சரவணன் , குமார். பூபதி , சுரேஷ், வினோத் என்று 

ஒரு நீண்ட பட்டியல் . டீ கடை முதலாளி, மற்றும் டீ மாஸ்டர் எல்லாருமே 

நண்பர்கள். நான் அவர்களிடம் அரசியலும் பேசுவேன் ...ஆன்மீகமும் 

பேசுவேன். டீ கடைக்கு பக்கத்தில் ஒரு 10 அல்லது 15 கடைகள் . மேல் 

தளத்தில் சில ஆபீசுகள் மற்றும் கடைகள். 

                       நவீனமயமாக்கம் இந்த பில்டிங்யை விடவில்லை . எல்லோர் 

வயற்றிலும் அடித்து பில்டிங்யை இடித்து என்பிஎல்ட் ( இரு சக்கர வாகனம் )

பெரிய ஷோ ரூமை கட்டிவிட்டார்கள் .எனக்கு அந்த டீ கடை ரொம்ப 

பிடிக்கும். அதிகாலை 3 மணிக்கே திறந்து விடுவார்கள் . ஒரு நாய் 

பட்டாளம் என்னை விடவே விடாது . நான் பிஸ்கட் வாங்கி போடுவேன்.

சரி அந்த டீ கடையை பற்றி ஏன் எழுதுகிறேன் என்ற விஷயத்திற்கு 

வருகிறேன். 

                      மாலை 5 மணி முதல் 7 மணி வரை பல டீ .+ தம் . மேல் தளத்தில் 

வேலை செய்பவர் தான் இஸ்மாயில் . அவர் 5 மணிக்கு சிகெரேட் குடிக்க

 வருவார். என்னிடம் தான் லைட்டர் வாங்குவார் . அதில் பழக பழக நாங்கள் 

நல்ல நண்பர்கள் ஆணோம் . பிறகு 6 மணிக்கு வருவார். அப்போது ஒரு 

தம். அவரிடம் நான் என்ன பேசினேன் என எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.

பொதுவாகவே பேசினோம் . 

                      அவர் பார்பதற்கு 30 அல்லது 35 வைது போல் தான் இருந்தார். 

நிறம் மிக வெள்ளை. ஒல்லியான உருவம். சற்று குட்டை . ஒரு நாள் கடையில் 

உள்ளே உட்கார்ந்து பேசும் போது அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ..?

 மேலும் எத்தனை குழந்தைகள் என கேட்டேன். அவர் மீண்டும் ஒரு சிகெரேட் 

பற்ற வைத்து விட்டு பேச ஆரம்பித்தார் .

                     " சார் ..எனக்கு இளம்வயதில் கல்யாணம் ஆகி விட்டது . எனக்கு 

இரண்டு குழந்தைகள் ....பார்க்க மிக அழகு .  நான் அப்போது தென்

 ஆப்ரிகாவில் குடி இருந்தோம் . ஒரு நாள் ஷாப்பிங் செல்ல என் மனைவியும் 

குழந்தைகளும் என் காரில் போனார்கள் . நான் அவர்களை உயிருடன் 

பார்த்தது அதுவே கடைசி ...! "

என் மனம் சற்று பதறியது . மேலே அவரே சொன்னார். 

" அவங்க போன கார் மீது லாரி மோதி கார் சுக்கு நூறாக உடைந்தது .

மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். "

" சார் ....உங்க கஷ்டம் புரிகிறது . இது எப்போது நடந்ததது ..?"

"  25 வருடங்கள் ஆகிவிட்டது . ஆனால் அவர்கள் என் மனசில் தான் 

   குடி இருக்கின்றன்ர். "

" சார்...தப்பா எடுக்காதீங்க ...நீங்க ஏன் மறுபடியும் கல்யாணம்

 செய்யவில்லை ...?  "

" சார்..... என் மனைவியை நான் இப்போதும் காதலித்து கொண்டு 

 தான்  இருக்கிறேன் . என் குழந்தைகள் என் நெஞ்சை விட்டு அகல வில்லை..."

இஸ்மாயில் பேசியது எனக்கு ஷாக் . அவர் எந்த பதட்டமும் இன்றி சர்வ 

சாதாரமாக பேசினார். 

" சார் ...நான் சந்தோஷமாக வாழ்ந்த காலத்தை நினைத்தே என் 

 காலத்தை ஒட்டுகிறேன் ..."

" சார்....நீங்க மறுபடி கல்யாணம் செய்தால் வாழ்க்கை சற்று மாறுமே ..?"

" இல்லை சார்.   என் மனைவியை என்னால் மறக்க முடியவில்லை . இது 

   இப்படி இருக்க நான் எப்படி மறுகல்யாணம் செய்ய முடியும்... ? "

" சார் ...."

" ஆம் . சார் .நான் என் மனைவியை இப்போதும் காதலித்து கொண்டே 

    இருக்கிறேன் . மறு கல்யாணம் என் வாழ்வில் நினைத்து பார்க்கவே 

   முடியாது ...! "

இஸ்மாயில் எந்த வித வேதனை , துக்கம் எதுவுமே இல்லாமல் மெதுவாக 

ஆனால் ஆணித்தரமாக பேசினார். அவர் பேச்சில் உண்மை இருந்ததது.

உறுதியும் இருந்ததது.

" சார் நீங்க ரொம்ப வித்யாசமானவர் ..."

" அப்படி எல்லாம் இல்லை. ...

                                    நான் என் மனைவியை மிகுந்து காதலிதத்தேன்  .
 
                                    என் குழந்தைகள் மீது கொள்ளை பாசம் .

                                   சார் ....நான் கிழம்புறேன் .....! "

அவர் சொல்லி விட்டு போய் விட்டார் . எனது லப் -டப் அதிகரித்தது .

                                  இஸ்மாயில் மாமனிதர் ...!

                                  அவரது காதல் அழிவு இல்லாதது ...!!

                                 அவரது பாசம் எல்லை அற்றது ,,,!!!

                                 அவருக்கு நிகர் அவர் மட்டுமே  ...!! !!

                                 இஸ்மாயில்  என் உள்ளத்தை 


                 உலுக்கியவர் ...!


R .சத்திய நாராயணன்        சின்ன சேவகன்           07-10-2023    
                              

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!