Friday, 28 July 2023
சிறுகதை 019/2023 குற்றப்பத்திரிகை
29-07-2023
பெறுநர் : பாரத பிரதமர்
Friday, 21 July 2023
காதல் ஒரு தொடர்கதை ...!
22-07-2023 சிறுகதை 018/2023
அத்யாயம் - 00
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
எனக்கு காதலிக்க ஆசை ...!
நான் காதலியை தேடி கொண்டு இருக்கிறேன் .
நான் முதல் முதலாக அவளை பார்த்தேன் . உருண்டை முகம் .
நெற்றியில் வண்ண பொட்டு . இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பு. 4
வருடங்களாக அவளை காதலித்தேன். அது அவளுக்கும் தெரியும் . பின்
அவளிடம் பேச ஆசை பட்டேன் . ஒருமுறை பேசியும் உள்ளேன். " ஐ லவ் யு "
என்று நான் சொல்ல அவள் " இப்போது இது தேவையா ..? " என சொன்னாள் .
நான் வெளியூர் சென்று திரும்பிய உடன் ஒரு கல்யாண பத்திரிகை வந்து
இருந்தது . பிரித்து படித்தேன் .
ஆம்., அவளுக்கு தான் கல்யாணம் ...! ( தொடரும் )
அத்யாயம் - 01
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
சில வருடங்கள் அவள் தோழியை காதலித்தேன். அழகு . அதிபுத்திசாலி .
வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தாள் . எனக்கோ வேலை இல்லை .
அவள் தான் சம்பாதிக்கிறாள் என்று ...கல்யாணம் செய்துகொள்ள
அவளிடம் சொல்ல போனேன் . நெஞ்சில் தைரியம் இருந்த்து . அவள்
" ஹலோ " என்று குஷியாக வரவேற்றாள் . நன்கு பேசினாள் . எனக்கு
கடைசியில் " நான் உங்களை கல்யாணம் செய்ய விரும்புகிறேன் "
என்று சொல்ல முடியவில்லை . நான் "பை " சொல்லிவிட்டு கிளம்பினேன் .
என் தைரியம் அவ்வளவு தான் ...! ( தொடரும் )
அத்யாயம் -02
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
நான் வெளியூரில் இருந்தேன் . என் பக்கத்து வீட்டில் அவள் இருந்தாள் ..
தினமும் காலையில் 6.40க்கு கோலம் போடுவாள் . நான் வாசலில்
உட்கார்ந்து "சைட் " அடிப்பேன் . துணை " தம் "...! அவள் ஒரு நல்ல
பாடகி . அவள் வீட்டு ஜன்னல் என் வீட்டு ஜன்னல் எதிரே இருந்தது .
அவள் என்னை பார்க்கிறாள் என்று எனக்கு நன்கு தெரியும் . சினிமா
பாடல்களை சத்தமாக பாடுவாள் . குரல் அருமை. ஒரு முறை "
தனிமையில் இனிமை காண முடியுமா ? " என்று பாடினாள் . என்
நெஞ்சம் முழுக்க அவள் தான் . எனக்கு இட மாற்றம் . என்னால்
அவளுடன் பேச முடியவில்லை. ஒரு நீண்ட ....காதல் கடிதம் எழுதி
என் ஆசையை தெரிவித்து பதிலுக்காக காத்து இருந்தேன் .
பதில் இல்லை ...! (தொடரும் )
அத்யாயாம் -03
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
அவளை பார்த்தேன் . பார்த்த உடனே "கிளீன் பௌலட் ".வித விதமாக
சுடிதார் போட்டு கல்லூரி செல்வாள் .சில சமயம் சேலையும் கட்டுவாள் .
உடைக்கு "மேச்சாக " வண்ண வண்ண பொட்டு வைப்பாள் . நான்
தினமும் காலை மாலை ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து அவளை ரசிப்பேன் .
நாட்கள் செல்ல செல்ல அவள் மீது காதல் ஆழமானது . ஒரு நாள்
மன உறுதியுடன் நேரே அவளை பார்க்க கல்லூரி சென்றேன். என்
திருமண விருப்பத்தை சொன்னேன் . அம்மம்மா ...!
அவள் " உனக்கு என்ன தகுதி இருக்கு ...? " என்று ஒருமையில் பேசினாள் .
" யு ஸ்டுப்பிட் ...கெட் லாஸ்ட்...! " என்று என்னை அவமானம் செய்தாள் .
அங்கு இருந்து கிளம்பினேன். ( தொடரும் )
அத்யாயம் - 04
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
அவளை சந்தித்தேன் , சற்று குள்ளம் . ஆனால் வட்ட முக பேரழகி .
தினமும் விபூதி , குங்குமம் வைப்பாள் . பக்கத்து தெருவில் தான்
குடி இருந்தாள் . அவளது முகவரிக்கு நான் பரிசு பொருள் , மற்றும்
காதல் கடிதம் அடிக்கடி அனுப்புவேன். நான் அவளிடம் நேரில் வந்து
பேச போவதாக தேதி நிச்சயம் செய்து அனுப்பினேன். மறு நாள் எனக்கு
ஒரு "கால் " வந்தது . அவளுடைய மாமனார் பேசுவதாக சொல்லி ...
அவளுக்கு ஒரு மாதம் முன் திருமணம் ஆகிவிட்டதாக என்னிடம்
கூறினார் ...! ( தொடரும் )
அத்யாயம் - 05
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
தினமும் பஸ் ஸ்டாபில் ஒரு முகமதிய பெண்ணை பார்ப்பேன் . அவள்
" பர்தா " போடுவாள் . ஆனால் முகத்தை மறைக்க மாட்டாள் . நான்
அவள் அழகில் சொக்கி போனேன் . மாலை அவளை ஒரு டீ கடையில்
இருந்து அவளை பார்ப்பேன் . அவளுக்கு கல்லூரி முகவரியில் நான்
பரிசு பொருள் மற்றும் கடிதம் உருக்கமாக எழுதுவேன் . அடிக்கடி
கடிதம் போடுவேன் . ஒரு வருடம் கழிந்து அவள் கல்லூரியில் இருந்து
ஒரு "கால் " வந்தது . என்னை வர சொல்லி சொன்னார்கள் . நானும்
போனேன் . கடைசியில் கல்லூரி நிர்வாகம் " அப்படி ஒரு பெண்ணே
இல்லை ...தவறான முகவரி ..." என்று சொல்லிவிட்டார்கள் . ஒரு
வருடமாக நான் அனுப்பியவற்றை திருப்பி கொடுத்தார்கள் .
ஐயோ ....! இது என்ன கொடுமை ...? ( தொடரும் )
அத்யாயம் - 06
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
அவளை பார்த்தேன் . மாநிறம் . சிங்கப்பல் . முட்டை வடிவ முகம்.
ஸ்டிக்கர் பொட்டு . அவள் பிரதோஷம் பிரதோஷம் அன்று கோவிலுக்கு
வருவாள் . நானும் போவேன் . அவள் வீடு பக்கத்தில் தான் இருந்தது .
ஒரு நாள் அவள் வீட்டிற்கு போகும் போது நான் வருகிறேனா என
திரும்பி பார்த்தாள் .கால் இடறி விட்டது . நான் திரும்பி விட்டேன் .
அவள் ஒரு டாக்டர். அவள் கிளினிக் அடிக்கடி செல்வேன் . சின்ன
பிரச்சனையாக இருந்தாலும் நான் செல்வேன் . சிரித்த முகத்துடன்
சிகிச்சை அளிப்பாள் .
நான் அவளிடம் என் காதலை சொல்ல வில்லை ...! ( தொடரும் )
அத்யாயம் -07
மீண்டும் அத்யாயம் -00
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
ஆம் ...!
மன வலி ...!!
R.சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
22-07-2023
குறுஞ்செய்தி : பாரத பிரதமர் மீதான குற்ற பத்திரிகை
எழுதி முடிக்க பட்டது . அது வரும் 29-07-2023 சனி அன்று
தாக்கல் செய்யப்படும்.
தமிழச்சி ...!
சிறுகதை 017/2023 22-07-2023
வீட்டு கதவு தட்டபட்டதும் சுந்தரத்தின் அம்மா கதவை திறந்தார் .
வெளியே 2 பேர். பார்த்தாலே போலீஸ் என்று தெரியும் . வீட்டுக்கு
வந்த அவர்கள் அவர்களாகவே நாற்காலியில் உட்கார்ந்தார்கள் .
" சுந்தரம் இருக்கானா...? "
" இல்லை ...நீங்கள் யார் ...? " - சுந்தரத்தின் அம்மா .
" நாங்க ....க்யு பிராஞ்சு "
" அப்படினா ...? "
" சி .ஐ . டி ....போலீஸ் ..."
" நீங்க வர காரணம் ....ஏன் சுந்தரத்தை பற்றி கேட்கிறீர்கள் ...? "
" ஆமாம் ...சுந்தரம் இப்போது எங்கே ...? "
" தெரியாது ..."
" என்னம்மா ...பையனை கேட்டால் தெரியாது என்று சொல்றீங்க ...?"
" சத்தியமா எனக்கு தெரியாது ...! "
" அவன் லெட்டர் போட்டானா ...?"
" இல்லை ..."
" ஏன் அவனை கேட்கிறீர்கள் ...? என்ன அவசியம் ...?"
" அம்மா ...அவன் எந்த ஊரில் இருக்கான் என்றுக்கூட தெரியாதா ..?"
" ஆமாம் ...அவன் என்னிடம் ஒன்றும் சொல்ல மாட்டான் ...எப்போதாவது
வருவான் . ஒரு 2 நாட்கள் இருந்து விட்டு போய் விடுவான் .."
" ஏன் அம்மா அவனை ஒன்றும் கேட்க மாட்டீர்களா ...? "
" எதுக்காக அவனை கேட்கிறீர்கள் ...?"
" அவன் ஒரு நக்சலைட் ...!"
" அப்படினா என்ன ...?"
" அவன் ஒரு தீவரவாதி ...?"
" ஐயோ ...என்ன இப்படி வாய் கூசாமல் பொய் சொல்கிறீர்கள்...?"
" ஆமாம். அம்மா . ..."
" என்ன அவன் வெடிக்குண்டு , துப்பாக்கி ஏதாவது வைச்சு இருக்கான்
என்றா சொல்கிறீர்கள் ....? "
" வந்து ..வந்து ..."
" நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் . என் மகன் தவறான பாதைக்கு
போக மாட்டான் ...."
" அம்மா புரிஞ்சுக்கங்க ....அவனை பார்த்தால் சுட்டு தள்ளி விட
கூட எங்களுக்கு அதிகாரம் இருக்கு ...!"
" நீங்க பாட்டு எதையாவது சொல்லாதீங்க ...! அவன் ஏழைகளுக்கு
உதவ தான் கழகத்தில் ...இருக்கான் ...! என் மகன் தப்பா போனா
நானே அவனை கொன்று விடுவேன் ...!"
" நீங்களும் அமைப்பில் இருக்கீங்களா ...?"
" இல்லை . என் மகனை பற்றி நீங்க சொல்றதை நான் கேட்க மாட்டேன்
நீங்க போங்க ...!"
" என்ன அம்மா இப்படி பேசறீங்க ..?"
" என் மகனுக்கு ஏதாவது ஆச்சுனா நான் உங்களை சும்மா விட
மாட்டேன் ...! "
" இல்லை ...நீங்க அவன்கிட்டே சொல்லி அவனை அமைப்பில் இருந்து
வெளியே வர சொல்லுங்க..."
" அமைப்பு ஒண்ணும் சட்ட விரோத அமைப்பு இல்லையே ..?"
" நாங்க சொல்றதை சொல்லிட்டும் ...ஜாக்ரதை ...! "
" என்ன மிரட்டி....பாக்குறீங்களா ...?"
" நாங்க வரோம் ...! "
" ஆமாம் ....அவனை என்னணு சொன்னிங்க...?"
" அவன் ஒரு நக்சலைட் ...!!! "
பி. கு . : சுந்தரம் "ஏதோ " ஒரு ஊரில் " ஏதோ ஒரு " பெயரில்
அமைப்பு தோழர்களுக்கு அரசியல் , சமூக & பொருளாதார
வகுப்பு எடுத்து கொண்டு இருக்கான் ...இல்லை ...
இருக்கிறார் ...!
R. சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
22-07-2023
Friday, 14 July 2023
சிறுகதை 016/2023 திரு ' குரல் '...!
எல்லோருக்கும் வாழ்த்து .
01. அன்பே உயிர். அன்பாக இரு.
அன்பு தான் சிறந்தது .
02. அறநெறி வாழ்வு மிக சிறப்பு .
அது தான் உயர்வு .
03. காதல் காதல் காதல் செய் .
அது சிறந்த உணர்வு .
04. பெண் உரிமைக்கு பாடு படு.
பெண் = ஆண் = சரிசமம் .
05. சுரண்டலை கட்டாயம் எதிர்த்து நில்.
சமதர்மதிற்கு அதுவே வழி ...!
06. தைரியம் நிச்சயம் நமக்கு தேவை.
வெல்ல இதுவே மார்கம் .
07. மனதில் அவசியம் உறுதி வேண்டும்.
மனமே மிக அழகு ...!
08. சத்யம் என்றும் எப்போதும் போற்று .
வாய்மை தான் வெல்லும் .
09. உரிமைக்கு தவறாது அவசியம் போராடு .
உரிமைக்குரல் நமது பிறப்புரிமை .
10. சமதர்ம சமூகம் அமைக்க வேண்டும் .
ஆம் . அதுவே புரட்சி ....!
R.சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் சத்யன்
சின்ன சேவகன்
15-07-2023
குறுஞ்செய்தி : பாரத பிரதமர் மீதான
குற்றப்பத்திரிகை தயார் .
எழுதி முடிக்கபட்ட அது
29-07-2023 (சனி ) அன்று தாக்கல்
செய்ய படும் .
சிறுகதை 015/2023 இருசொல் கீதா 15-07-2023
அத்யாயம் 01 : 01. அன்பே உயிர் .
" 18. : 18. புரட்சி செய் ....!!!
Friday, 7 July 2023
014/2023 வாணி..வா... நீ...!
ஓரங்க நாடகம்
பாத்திரங்கள் : சரஸ்வதி , நாரதர்
இடம் : சத்யலோகம்