Friday, 21 July 2023

      காதல் ஒரு தொடர்கதை ...!      

  22-07-2023           சிறுகதை 018/2023


                                                        அத்யாயம் - 00


ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

எனக்கு காதலிக்க ஆசை ...!

நான் காதலியை தேடி கொண்டு இருக்கிறேன் .


                  நான் முதல் முதலாக அவளை பார்த்தேன் . உருண்டை முகம் .

நெற்றியில் வண்ண பொட்டு . இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பு. 4 

வருடங்களாக அவளை காதலித்தேன். அது அவளுக்கும் தெரியும் . பின் 

அவளிடம் பேச ஆசை பட்டேன் . ஒருமுறை பேசியும் உள்ளேன். " ஐ லவ் யு "

என்று நான் சொல்ல அவள் " இப்போது இது தேவையா ..? " என சொன்னாள் .

நான் வெளியூர் சென்று திரும்பிய உடன் ஒரு கல்யாண பத்திரிகை வந்து 

இருந்தது . பிரித்து படித்தேன் .

                 ஆம்., அவளுக்கு தான் கல்யாணம் ...!                     ( தொடரும் )


                                                  அத்யாயம் - 01 


ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

சில வருடங்கள்  அவள் தோழியை காதலித்தேன். அழகு . அதிபுத்திசாலி .

வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தாள் . எனக்கோ வேலை இல்லை .

அவள் தான் சம்பாதிக்கிறாள் என்று ...கல்யாணம் செய்துகொள்ள 

அவளிடம் சொல்ல போனேன் . நெஞ்சில் தைரியம் இருந்த்து . அவள் 

" ஹலோ " என்று குஷியாக வரவேற்றாள் . நன்கு பேசினாள் . எனக்கு 

கடைசியில் " நான் உங்களை கல்யாணம் செய்ய விரும்புகிறேன் "

என்று சொல்ல முடியவில்லை . நான் "பை " சொல்லிவிட்டு கிளம்பினேன் .

என் தைரியம் அவ்வளவு தான் ...!                                          ( தொடரும் )


                                                     அத்யாயம் -02 

ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

நான் வெளியூரில் இருந்தேன் . என் பக்கத்து வீட்டில் அவள் இருந்தாள் ..

தினமும் காலையில் 6.40க்கு கோலம் போடுவாள் . நான் வாசலில் 

உட்கார்ந்து "சைட் " அடிப்பேன் . துணை " தம் "...! அவள் ஒரு நல்ல 

பாடகி . அவள் வீட்டு ஜன்னல் என் வீட்டு ஜன்னல் எதிரே இருந்தது .

அவள் என்னை பார்க்கிறாள் என்று எனக்கு நன்கு தெரியும் . சினிமா 

பாடல்களை சத்தமாக பாடுவாள் . குரல் அருமை. ஒரு முறை "

 தனிமையில் இனிமை காண முடியுமா ? " என்று பாடினாள் . என் 

நெஞ்சம் முழுக்க அவள் தான் . எனக்கு இட மாற்றம் . என்னால் 

அவளுடன் பேச முடியவில்லை. ஒரு நீண்ட ....காதல் கடிதம் எழுதி 

என் ஆசையை தெரிவித்து பதிலுக்காக காத்து இருந்தேன் .

                             பதில் இல்லை ...!                                                (தொடரும் )


                                         அத்யாயாம் -03

ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

அவளை பார்த்தேன் . பார்த்த உடனே "கிளீன் பௌலட் ".வித விதமாக 

சுடிதார் போட்டு கல்லூரி செல்வாள் .சில சமயம் சேலையும் கட்டுவாள் .

உடைக்கு "மேச்சாக " வண்ண வண்ண பொட்டு வைப்பாள் . நான் 

தினமும் காலை மாலை ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து அவளை ரசிப்பேன் .

நாட்கள் செல்ல செல்ல அவள் மீது காதல் ஆழமானது . ஒரு நாள் 

மன உறுதியுடன் நேரே அவளை பார்க்க கல்லூரி சென்றேன். என் 

திருமண விருப்பத்தை சொன்னேன் . அம்மம்மா ...!

அவள் " உனக்கு என்ன தகுதி இருக்கு ...? " என்று ஒருமையில் பேசினாள் .

" யு ஸ்டுப்பிட் ...கெட் லாஸ்ட்...! " என்று என்னை அவமானம் செய்தாள் .

அங்கு இருந்து கிளம்பினேன்.                                     ( தொடரும் )


                                                        அத்யாயம் - 04 

ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

அவளை சந்தித்தேன் , சற்று குள்ளம் . ஆனால் வட்ட முக பேரழகி .

தினமும் விபூதி , குங்குமம் வைப்பாள் . பக்கத்து தெருவில் தான் 

குடி இருந்தாள் . அவளது முகவரிக்கு நான் பரிசு பொருள் , மற்றும் 

காதல் கடிதம் அடிக்கடி அனுப்புவேன். நான் அவளிடம் நேரில் வந்து 

பேச போவதாக தேதி நிச்சயம் செய்து அனுப்பினேன். மறு நாள் எனக்கு 

ஒரு "கால் " வந்தது . அவளுடைய மாமனார் பேசுவதாக சொல்லி ...

அவளுக்கு ஒரு மாதம் முன் திருமணம் ஆகிவிட்டதாக என்னிடம் 

கூறினார் ...!                                                       ( தொடரும் )


                                                           அத்யாயம் - 05 

ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

தினமும் பஸ் ஸ்டாபில் ஒரு முகமதிய பெண்ணை பார்ப்பேன் . அவள் 

" பர்தா " போடுவாள் . ஆனால் முகத்தை மறைக்க மாட்டாள் . நான் 

அவள் அழகில் சொக்கி போனேன் . மாலை அவளை ஒரு டீ கடையில் 

இருந்து அவளை பார்ப்பேன் . அவளுக்கு கல்லூரி முகவரியில் நான்

பரிசு பொருள் மற்றும் கடிதம் உருக்கமாக எழுதுவேன் . அடிக்கடி 

கடிதம் போடுவேன் . ஒரு வருடம் கழிந்து அவள் கல்லூரியில் இருந்து 

ஒரு "கால் " வந்தது . என்னை வர சொல்லி சொன்னார்கள் . நானும் 

போனேன் . கடைசியில் கல்லூரி நிர்வாகம் " அப்படி ஒரு பெண்ணே 

இல்லை ...தவறான முகவரி ..." என்று சொல்லிவிட்டார்கள் . ஒரு 

வருடமாக நான் அனுப்பியவற்றை திருப்பி கொடுத்தார்கள் .

ஐயோ ....! இது என்ன கொடுமை ...?                                  ( தொடரும் )


                                                      அத்யாயம் - 06 


ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....

அவளை பார்த்தேன் . மாநிறம் . சிங்கப்பல் . முட்டை வடிவ முகம். 

ஸ்டிக்கர் பொட்டு . அவள் பிரதோஷம் பிரதோஷம் அன்று கோவிலுக்கு 

வருவாள் . நானும் போவேன் . அவள் வீடு பக்கத்தில் தான் இருந்தது .

ஒரு நாள் அவள் வீட்டிற்கு போகும் போது நான் வருகிறேனா என 

திரும்பி பார்த்தாள் .கால் இடறி விட்டது . நான் திரும்பி விட்டேன் .

அவள் ஒரு டாக்டர். அவள் கிளினிக் அடிக்கடி செல்வேன் . சின்ன 

பிரச்சனையாக இருந்தாலும் நான் செல்வேன் . சிரித்த முகத்துடன் 

சிகிச்சை அளிப்பாள் .

நான் அவளிடம் என் காதலை சொல்ல வில்லை ...!        ( தொடரும்  )


                                                  அத்யாயம் -07 


                                        மீண்டும் அத்யாயம் -00


ஆம் ...!

அதன் பிறகு ...

அப்படி நடந்ததிற்கு பிறகு.....


                           ஆம் ...!
                                                                     

                          மன வலி ...!!


R.சத்ய நாராயணன்     சத்யன்     ஸ்ரீ விவேக்      சின்ன சேவகன் 

                                                  22-07-2023


                             குறுஞ்செய்தி  :   பாரத பிரதமர் மீதான குற்ற பத்திரிகை 

                             எழுதி முடிக்க பட்டது . அது வரும் 29-07-2023 சனி அன்று 

                             தாக்கல் செய்யப்படும். 
 
 


No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!