காதல் ஒரு தொடர்கதை ...!
22-07-2023 சிறுகதை 018/2023
அத்யாயம் - 00
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
எனக்கு காதலிக்க ஆசை ...!
நான் காதலியை தேடி கொண்டு இருக்கிறேன் .
நான் முதல் முதலாக அவளை பார்த்தேன் . உருண்டை முகம் .
நெற்றியில் வண்ண பொட்டு . இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பு. 4
வருடங்களாக அவளை காதலித்தேன். அது அவளுக்கும் தெரியும் . பின்
அவளிடம் பேச ஆசை பட்டேன் . ஒருமுறை பேசியும் உள்ளேன். " ஐ லவ் யு "
என்று நான் சொல்ல அவள் " இப்போது இது தேவையா ..? " என சொன்னாள் .
நான் வெளியூர் சென்று திரும்பிய உடன் ஒரு கல்யாண பத்திரிகை வந்து
இருந்தது . பிரித்து படித்தேன் .
ஆம்., அவளுக்கு தான் கல்யாணம் ...! ( தொடரும் )
அத்யாயம் - 01
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
சில வருடங்கள் அவள் தோழியை காதலித்தேன். அழகு . அதிபுத்திசாலி .
வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தாள் . எனக்கோ வேலை இல்லை .
அவள் தான் சம்பாதிக்கிறாள் என்று ...கல்யாணம் செய்துகொள்ள
அவளிடம் சொல்ல போனேன் . நெஞ்சில் தைரியம் இருந்த்து . அவள்
" ஹலோ " என்று குஷியாக வரவேற்றாள் . நன்கு பேசினாள் . எனக்கு
கடைசியில் " நான் உங்களை கல்யாணம் செய்ய விரும்புகிறேன் "
என்று சொல்ல முடியவில்லை . நான் "பை " சொல்லிவிட்டு கிளம்பினேன் .
என் தைரியம் அவ்வளவு தான் ...! ( தொடரும் )
அத்யாயம் -02
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
நான் வெளியூரில் இருந்தேன் . என் பக்கத்து வீட்டில் அவள் இருந்தாள் ..
தினமும் காலையில் 6.40க்கு கோலம் போடுவாள் . நான் வாசலில்
உட்கார்ந்து "சைட் " அடிப்பேன் . துணை " தம் "...! அவள் ஒரு நல்ல
பாடகி . அவள் வீட்டு ஜன்னல் என் வீட்டு ஜன்னல் எதிரே இருந்தது .
அவள் என்னை பார்க்கிறாள் என்று எனக்கு நன்கு தெரியும் . சினிமா
பாடல்களை சத்தமாக பாடுவாள் . குரல் அருமை. ஒரு முறை "
தனிமையில் இனிமை காண முடியுமா ? " என்று பாடினாள் . என்
நெஞ்சம் முழுக்க அவள் தான் . எனக்கு இட மாற்றம் . என்னால்
அவளுடன் பேச முடியவில்லை. ஒரு நீண்ட ....காதல் கடிதம் எழுதி
என் ஆசையை தெரிவித்து பதிலுக்காக காத்து இருந்தேன் .
பதில் இல்லை ...! (தொடரும் )
அத்யாயாம் -03
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
அவளை பார்த்தேன் . பார்த்த உடனே "கிளீன் பௌலட் ".வித விதமாக
சுடிதார் போட்டு கல்லூரி செல்வாள் .சில சமயம் சேலையும் கட்டுவாள் .
உடைக்கு "மேச்சாக " வண்ண வண்ண பொட்டு வைப்பாள் . நான்
தினமும் காலை மாலை ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து அவளை ரசிப்பேன் .
நாட்கள் செல்ல செல்ல அவள் மீது காதல் ஆழமானது . ஒரு நாள்
மன உறுதியுடன் நேரே அவளை பார்க்க கல்லூரி சென்றேன். என்
திருமண விருப்பத்தை சொன்னேன் . அம்மம்மா ...!
அவள் " உனக்கு என்ன தகுதி இருக்கு ...? " என்று ஒருமையில் பேசினாள் .
" யு ஸ்டுப்பிட் ...கெட் லாஸ்ட்...! " என்று என்னை அவமானம் செய்தாள் .
அங்கு இருந்து கிளம்பினேன். ( தொடரும் )
அத்யாயம் - 04
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
அவளை சந்தித்தேன் , சற்று குள்ளம் . ஆனால் வட்ட முக பேரழகி .
தினமும் விபூதி , குங்குமம் வைப்பாள் . பக்கத்து தெருவில் தான்
குடி இருந்தாள் . அவளது முகவரிக்கு நான் பரிசு பொருள் , மற்றும்
காதல் கடிதம் அடிக்கடி அனுப்புவேன். நான் அவளிடம் நேரில் வந்து
பேச போவதாக தேதி நிச்சயம் செய்து அனுப்பினேன். மறு நாள் எனக்கு
ஒரு "கால் " வந்தது . அவளுடைய மாமனார் பேசுவதாக சொல்லி ...
அவளுக்கு ஒரு மாதம் முன் திருமணம் ஆகிவிட்டதாக என்னிடம்
கூறினார் ...! ( தொடரும் )
அத்யாயம் - 05
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
தினமும் பஸ் ஸ்டாபில் ஒரு முகமதிய பெண்ணை பார்ப்பேன் . அவள்
" பர்தா " போடுவாள் . ஆனால் முகத்தை மறைக்க மாட்டாள் . நான்
அவள் அழகில் சொக்கி போனேன் . மாலை அவளை ஒரு டீ கடையில்
இருந்து அவளை பார்ப்பேன் . அவளுக்கு கல்லூரி முகவரியில் நான்
பரிசு பொருள் மற்றும் கடிதம் உருக்கமாக எழுதுவேன் . அடிக்கடி
கடிதம் போடுவேன் . ஒரு வருடம் கழிந்து அவள் கல்லூரியில் இருந்து
ஒரு "கால் " வந்தது . என்னை வர சொல்லி சொன்னார்கள் . நானும்
போனேன் . கடைசியில் கல்லூரி நிர்வாகம் " அப்படி ஒரு பெண்ணே
இல்லை ...தவறான முகவரி ..." என்று சொல்லிவிட்டார்கள் . ஒரு
வருடமாக நான் அனுப்பியவற்றை திருப்பி கொடுத்தார்கள் .
ஐயோ ....! இது என்ன கொடுமை ...? ( தொடரும் )
அத்யாயம் - 06
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
அவளை பார்த்தேன் . மாநிறம் . சிங்கப்பல் . முட்டை வடிவ முகம்.
ஸ்டிக்கர் பொட்டு . அவள் பிரதோஷம் பிரதோஷம் அன்று கோவிலுக்கு
வருவாள் . நானும் போவேன் . அவள் வீடு பக்கத்தில் தான் இருந்தது .
ஒரு நாள் அவள் வீட்டிற்கு போகும் போது நான் வருகிறேனா என
திரும்பி பார்த்தாள் .கால் இடறி விட்டது . நான் திரும்பி விட்டேன் .
அவள் ஒரு டாக்டர். அவள் கிளினிக் அடிக்கடி செல்வேன் . சின்ன
பிரச்சனையாக இருந்தாலும் நான் செல்வேன் . சிரித்த முகத்துடன்
சிகிச்சை அளிப்பாள் .
நான் அவளிடம் என் காதலை சொல்ல வில்லை ...! ( தொடரும் )
அத்யாயம் -07
மீண்டும் அத்யாயம் -00
ஆம் ...!
அதன் பிறகு ...
அப்படி நடந்ததிற்கு பிறகு.....
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!