சிறு கதை 020/2023 செவ்ஞ்சலி 29-07-2023
உதகை அரசினர் கலை கல்லூரி . நான் பி .எஸ் .சி 2-ம் ஆண்டு படித்து
கொண்டு இருந்தேன் . காந்தி ஜயந்தியை முன்னிட்டு பேச்சு போட்டி
நடந்த்தது . அதில் நான் காந்தி மீது சில விமர்சனகளை வைத்தேன் .
பேசி விட்டு செல்லும் போது " நான் ஸ்ரீநிவாசன் . எகனாமிக்ஸ் புரொஃபசர்.
என்னை என் டிபார்ட்மெண்டில் வந்து பார் ..." என சொன்னார்.
அதுவே சீனியுடன் ஆன முதல் சந்திப்பு .
பின்னர் ....
நாங்கள் நண்பர்களாக ஆனோம் . அவரும் சிகெரேட் குடிப்பார் . நானும்
குடிப்பேன் . இருவர் பிராண்ட்-ம் . ஒன்றே . " கோல்ட் ஃபிளேக் ". தினமும்
கல்லூரி முடிந்து திரும்பும் போது செரிங்க் க்ராஸில் உள்ள விலாசமான
டீ கடையில் உட்கார்ந்து பேசுவோம் . ஒரு ஆங்கில பேராசிரியர் மற்றும்
ஒரு சரித்திர பேராசிரியர் வருவார்கள் . அடுத்து ஒரு அரசு ஊழியரும்
வருவார்.
டீ ...
தம் ...
பேச்சு ...
விவாதம் ...
முக்கியமாக எங்கள் விவாத்தில் இந்திய அரசியல் , பொருளாதாரம்
குறிப்பாக சமூக பிரச்சனைகளை பேசுவோம் . என் நண்பன் ஒருவனும்
இதில் கலந்து கொள்வான் . அவனை தவிர மற்றவர்கள் எல்லாம் " தோழர்கள் "
ஆனோம் .
ஆம் ...!
புரட்சிகர இயக்கம் ...!!
சீனி ஊட்டி நகர செயலாளர் . அவர் நிறைய படிப்பார் . எழுதுவார் .
" மன ஓசை " -யில் " சுரேஷ் " என்ற பேரில் எழுதுவார் . விடுமுறை நாட்களை
அவரது ரூமில் தான் காலம் கழிப்போம் . இல்லை என்றால் தாவர இயல்
பூங்கா செல்வோம் . அவசர நிலை இருந்த போது அவர் போலீஸ்
விசாரணைக்கு ஆள் ஆனவர் .
நாங்கள் சேர்ந்தே இருப்போம் . உறவு வலு அடைந்து மிக நெருக்கம் ஆனோம் .
இந்த சமயத்தில் அவர் சென்னைக்கு மாற்ற பட்டார் . பிரிவு சோகத்தை
தந்தது . அவரது செயலாளர் பொறுப்பு எனக்கு வந்தது .அது ஒரு காலம் .
வார வாரம் ஒரு சிறிய ஹாலில் " சமூக அறிவியல் மேடை " என்று ஒரு
அமைப்பை ஏற்படுத்தி விவாதங்கள் செய்வோம் . ஊட்டியில் இருந்த
முற்போக்கு மற்றும் அறிவுஜீவிகள் பங்கு பெறுவர் .
சீனி ...ஒரு நல்ல சினிமா ரசிகர். அவருக்கு " மிர்னல்சென் " படங்கள்
ரொம்ப பிடிக்கும் . நாங்கள் சேர்ந்து பல தமிழ் படங்கள் பார்த்து உள்ளோம் .
வருடங்கள் ஓடின.....
சென்னையில் நான் இருந்தேன் . அப்போது சீனிக்கு திருமணம் . அங்கு
பல தோழர்களை சந்திக்கும் வாய்பு கிடைத்தது . சீனி அவர் பக்கதிலேயே
இருக்க சொன்னார். ஆம். நான் தான் மாப்பிள்ளை தோழன் .
பிறகு ...
என்ன என்னவோ மாற்றங்கள் .
பலர் போல் நானும் அமைப்பிலிருந்து வெளியேறினேன் . சீனுவும்
வெளியே வாந்தர்.
நான் ஊட்டி வந்து விட்டேன். வாழ்க்கை ஓடியது . பல வருடங்கள் .
பின்பு ஒரு நாள் என் ஊட்டி தோழர் என் முகவரி கிடைத்து ஒரு கடிதம்
அனுப்பினார் .
ஐயோ...! ஐயோ...! !
அம்மா ...! அப்பா ...!!
என்னால் தாங்க முடியவில்லை ...!
என் சீனி இருதய கோளாறு காரணமாக 2 வருடங்களுக்கு முன்பே
இறந்து விட்டார் என எழுதி இருந்தார்.
என்னால் தாங்க முடியவில்லை .
நான் அழுக ஆரம்பித்தேன் . கொலுங்க கொலுங்க அழுதேன் .
விக்கி விக்கி அழுதேன் . சுமார் 10 நாட்கள் நான் அழுதே தீர்த்தேன் .
மிக பெரிய இழப்பு ...!
தோழர் சீனுவுக்கு வீர வணக்கம் ...!!
பி. கு : பொருளாதார பேராசிரியர் சீனிவாசனுக்கு இந்த கதை
அர்ப்பணம் .
R . சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
29-07-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!