Friday, 7 July 2023


         014/2023     வாணி..வா... நீ...!


                                                    ஓரங்க நாடகம் 


                           பாத்திரங்கள்    :    சரஸ்வதி , நாரதர் 
                                        
                                           இடம்      :    சத்யலோகம் 


                                                             காட்சி 

( சர்ஸ்வதி வீணையை மீட்டி இசையில் லயித்து இருந்தாள் . அப்போது 

  நாரதர் வருகிறார் ,)

நாரதர்       :   தேவி ...! தேவி...!!

சரஸ்           :   ம் ம் ....

நாரதர்       :   வரலாமா தேவி ?

சரஸ்          :   அதுதான் வந்து விட்டீர்களே ...? வாருங்கள் ...!

நாரதர்      :     கலை மகளே ...! தங்களுக்கு தெரியாது என்று ஒன்றும் 

                           இல்லை ....வந்து ...வந்து ...

சரஸ்          :      இன்று இங்கு வந்த காரணம் என்ன ? ஏதாவது புது கலகமா ?

நாரதர்      :     தேவி ...!   நான் கலகக்காரன் என்று பேர் பெற்று விட்டேன் ...

சரஸ்          :     ...ம் ....மேலே சொல்லுங்கள் .

நாரதர்      :     நான் கலகம் செய்பவன் தான் .  ஆனால் என் கலகம் 

                           நன்மையை தான் கொண்டு வரும் ...!

சரஸ்          :     சரி ...இருக்கட்டும் ...!! இப்போது என்ன கலகம் ...?

நாரதர்      :     தேவி ...! அப்படி சொல்லாதீர்கள் ...நீங்கள் ஸத்யலோகாகத்தின் 

                           தாய் ....தாயே ...! எனக்கு ஒரு மன வருத்தம் உள்ளது.

சரஸ்          :      ம்ம்.....சொல்லுங்கள் ...!

நாரதர்      :      தேவி ...! நான் பாரத தேச சஞ்சாரம் முடித்து விட்டு வருகிறேன் ...

சரஸ்          :     ம் ....

நாரதர்      :   தேவி ...! நான் பெண்களை உன்னிப்பாக கவனித்தேன் . பாவம் ..!

                         பெண்ணை பிறக்க மாதவம் செய்ய வேண்டும் என உங்கள் 

                          பக்தன் சொல்லி விட்டு போய் விட்டான் ...

சரஸ்          :   ஆம் ...! அதற்கு என்ன ...?

நாரதர்      :    பெண் உரிமை பற்றி பலரும் பேசுகிறார்கள் .ஆனால் விடுதலை 

                          இன்றி மிகவும் கஷ்ட பட்டு வருகிறார்கள் .

சரஸ்          :    மாற்றம் மிக மெதுவாகவே நடக்கும் ...

நாரதர்     :     ஒப்பு கொள்கிறேன் தேவி . ஆனாலும் பெண் படும் பாடு 

                          ரொம்ப அதிகம் தாயே ...!

சரஸ்         :     ம் ...

நாரதர்     :     (பெரு மூச்சு விட்டு )......தாயே ...! வேலைக்கு போகும் பெண்கள் 

                           ஆனாலும் சரி ....இல்லத்து அரசியாக இருந்தாலும் அவள் தான் 

                           மிகவும் கஷ்ட படுகிறாள் . அனைத்து பாரம் தாங்கி வேதனையில் 

                           வாடுகிறாள் ...

சரஸ்          :     நீங்கள் உண்மையை தான் சொல்வீர்கள் ...எனக்கு நன்கு அது 

                           தெரியும் . அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ...?

நாரதர்       :     மிக்க நன்றி தேவி ..! நான் சொல்வதை ஏற்று கொள்வீர்களா ..?

சரஸ்           :    நீங்கள் தவறு செய்ய மாட்டீர்கள் ....நான் என்ன செய்ய

                           வேண்டும் ...?

நாரதர்       :    அது மிக மிக கடினம் .

சரஸ்           :    இருக்கட்டும் . விவரம் சொல்லுங்கள் .

நாரதர்       :    நீங்கள் ஒரு சாதாரண பெண்ணாக பூமியில் பிறக்க 

                           வேண்டும் .

சரஸ்           :     பிறந்து என்ன செய்ய வேண்டும் ...?

நாரதர்       :     பிறந்து சமூக தொண்டு செய்ய வேண்டும் .

சரஸ்           :     சமூக தொண்டா ...?

நாரதர்       :     ஆம் . என் திட்டதை சொல்கிறேன் 

                            1. சாதாரண பெண்ணாக பிறக்க வேண்டும்.
   
                            2. உங்களுக்கு நீங்கள் தான் சரஸ்வதி என்று தெரிய கூடாது .

                            3. உங்களுக்கு தெய்வ சக்தி இருக்காது . மேலும் எந்த விதமான 

                                அமனுஷிய சக்தி இருக்காது .

                            கவனமாக கேளுங்கள் தேவி ,,,!

                           1. பெண் உரிமைக்காக போராட வேண்டும் 

                          2.  பெண் பொருளாதார நிலமை உயர பாடுபட வேண்டும் .
     
                           3.  விருப்பம் போல் அவள் கல்யாணம் செய்ய உரிமை 

                                வேண்டும் .

                           4. வீட்டு சுமையில் ஆண்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் 

                          5.  கிராமங்களிலும் , நகரங்களிலும் உள்ள பெண்கள் சமூக ,

                              அரசியல் , பொருளாதார விழிப்புணர்ச்சி பெற வேண்டும் .

                          6.  பெண்களை பாலியல் வன்முறை செய்பவர் கடும் 

                               தண்டனை அடைய வேண்டும் .

                          7.  பெண் சரிசம உரிமை பெற வேண்டும்.
 
                          8.  கிராம , நகர , மாநில , தேசிய , உலக அளவில் ஒன்று 

                               சேர்த்து ..ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் .

                         9.   இது பெண்ணின் புரட்சி ...!!! !!! !!!

                        தாயே ...! அவ்வளவு தான் ...உங்களால் முடியுமா ..?

சரஸ்       :      ஏன் முடியாது ...?

நாரதர்    :     உங்களுக்கு என்று எந்த சக்தியும் இருக்காது . உறுதியாக 

                         சொல்கிறீர்களா ...?

சரஸ்        :     இந்த 21ம்  நூற்றாண்டில் சாதாரண பெண்ணாக பிறந்து 

                         நான் பெண் உரிமைக்காக பாடு பட வேண்டும். அவ்வளவு 

                        தானே மகரிஷி ...?

நாரதர்     :    எள் என்றால் எண்ணை ஆகி விடுகெறீர்கள் ....

சரஸ்         :    உங்கள் கலகம் இன்று முடிந்த்தா ...?

நாரதர்     :     நீங்கள் தயாரா ...?

சரஸ்         :     ஆம் ...! சத்யம் ...!!

நாரதர்     :     வாழ்துக்கள் தேவி ...! நான் வருகிறேன் ...!!

                    ( நாரதர் போகிறார் . சரஸ்வதி வீணை , ஜப மாலை மற்றும் 

                      சுவடிகளை தன்னிடமிருந்து எடுத்து விடுகிறார் )

                                      திரை மூடுகிறது 

பின் குரல் :     கலை மகள் பிறந்து விட்டாள் . அவளுக்கு பெற்றோர் 

                            வைத்த பெயர் வித்யா ...!

                           புரட்சியை முன்னிட்டு வளர்கிறாள் ...!!

                           " வித்யா விஜயம் " ஆரம்பித்து விட்டது ...!!!


                                                  சுபம் .

                            கதை -வசனம்      :      சத்யன் 

                            ஒலி,ஒளி அமைப்பு :  ஸ்ரீ விவேக் 

                            பின் குரல்                   :   சின்ன சேவகன் 

                           இயக்கம்                     :    R. சத்ய நாராயணன் \


                                                        08-07-2023 

R. சத்ய நாராயணன்      ஸ்ரீ விவேக்     சத்யன்     சின்ன சேவகன் 



1 comment:

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!