மாபெரும் போராட்டம்
சிறுகதை 35/2023 பாகம் - 01 23-09-2023
நிர்வாகமே நிர்வாகமே
நிர்வாகமே நிர்வாகமே
காட்டு தர்பார் நிர்வாகமே
காட்டு தர்பார் நிர்வாகமே
தோழர் சத்திய நாராயணனின்
தோழர் சத்திய நாராயணனின்
வேலை நீக்க உத்தரவை
வேலை நீக்க உத்தரவை
வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு
வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு
அனுமதியோம் அனுமதியோம்
அனுமதியோம் அனுமதியோம்
காட்டு தர்பார் நிர்வாகதை
காட்டு தர்பார் நிர்வாகதை
அனுமதியோம் அனுமதியோம்
அனுமதியோம் அனுமதியோம் ...!
ஆர்பாட்ட முழக்கங்கள் விண்ணை தொட்டன.உணர்ச்சி பெருக்கும்
அற்பணிப்பும் கொண்ட தொழில் சங்க தலைவரும் குன்னூர் அலுவலக
பெண்கள் அனைவரும் எரிமலை என வெடித்து கோஷம் செய்தார்கள் .
இது துவக்கம் தான் . இந்த ஆர்பாட்டத்தின் பின்னணி என்ன ..? வேலை
நீக்க உத்தரவை பெற்றது சாட்சாத் நானே தான் .
ஆம்.
நான் தான் சத்திய நாராயணன் .தொலைபேசி இலாக்காவில் 3 மாதம்
பயிற்சி பெற்று 1982-இல் நிரந்தரம் ஆனேன் . நான் வேலையில் சுறுசுறுப்பாக
இருப்பேன் .நன்கு உழைத்தேன் . எனது வேகம் மேலதிகரிகளுக்கு
ஆச்சர்யியமாக இருந்தது . ஆனால் நான் வேலை செய்யும் பொழுதே
சக ஊழியரிடம் கேலியும் , கிண்டலுமாக அரசியல் பேசுவேன்.எனக்கு
டிபார்ட்மெண்ட் மாற்றம் வந்தது . பிரச்சனை ஆரம்பித்தது . பிரிட்ஷ்
காலத்தில் இருந்த " மூவ்மென்ட் ரிஜிஸ்டர் " பழக்கதிற்கு வந்தது . யார்
வெளியே போனாலும் அதில் காரணம் , நேரம் ஆகியவற்றை பதிவு செய்ய
வேண்டும் . நான் டீ குடிக்க போகிறேன் என்று எழுதி செல்வேன் . ஆனால்
நான் பெண்கள் சிறுநீர் கழிக்க சென்றால் அதையும் எழுதவேண்டுமா ?
என கேள்வி கேட்டேன் . பெண்கள் ஆதரவு கிடைத்து அவர்கள் அதில்
எழுதுவதை அவர்களே எழுதுவதை விட்டு விட்டனர் .
இது முடிந்து பல மாதங்கள் ஓடி போனது . ஒரு உயர் அதிகாரி எங்களுக்கு
வந்தார். பெயர் அருமை சின்னான் . வயதானவர். மீசையை முறுக்கி
விட்டு இருப்பார். நான் எப்போதுமே அலுவலகம் 15 நிமிடங்களுக்கு முன்பே
வந்து விடுவேன் . ஆம். நிதானமாக நான் ஒரு சிகெரேட் குடிப்பேன்.
புதிய மேல் அதிகாரி காலையில் வெளியே நின்று கொண்டு இருப்பார்.
நான் எப்போதும் போல் சிகெரேட் குடிப்பேன். இது அவரை ரொம்ப
பாதித்தது . நான் அவமரியாதை செய்வதாக நினைத்து கொண்டார்.
ஆனால் எனக்கு அப்படி எல்லாம் எண்ணம் போகவில்லை. தம் அடிப்பது
ஒரு பழக்கமே .
அதிகரிகளுக்கு ஊழியரை பற்றி பேசுவது தான் அவர்கள் பொழுது போக்கு.
என்னை பற்றி எந்த அதிகாரி-யும் நல்ல எண்ணம் வைத்து இருக்க வில்லை .
காரணம் எனது பேச்சு .அருமை சின்னானுக்கு என் மீது ஏனோ கோபம் .
என்னை பழி வாங்க நினைத்தார் . அவர் மேல் அதிகாரி என்னை ....அழ
வைக்க எண்ணிஉள்ளார் . ஒரு நாள் மதியம் எனக்கு ஒரு மெமோ கொடுத்து
அனுப்பினார்.
அது ரூல்-5 ...!
அதன் படி எந்த காரணமும்
காட்டாமல் வேலை நீக்க உத்தரவை
வழங்கினார் . அவரால் என் வேலை பற்றி
குற்றம் சுமத்த வாய்ப்பு இல்லாததால்
இந்த கொடிய ரூல் 5....!!! !!
அவரின் நோக்கம் அவர் காலில் விழுந்து வணுங்குவேன் என கருதினார்
போல. நான் அவரை சந்திக்க வில்லை. இந்த உத்தரவை எங்கள் தொழில்
சங்க செயலரிடம் ( திரு .கோபால் ) கொடுத்தேன் . அவர் அதிர்ந்து போனார் .
அவர் அவரது மேல் நிலை தோழர்களிடம் பேசி விட்டு நாளை மாலை
ஆர்பாட்டம் என தெரிவிதார். அந்த ஆர்பாட்டதின் கோஷங்களை தான்
நீங்கள் படித்தீர்கள் .ஆர்பாட்டத்தை எதிர் பார்க்காத அவர் கலங்கி விட்டார்.
ஆர்பாட்டங்கள் தொடர்ந்தன . அருமை சின்னான் கதி கலங்கி தினமும்
அலுவலகத்திற்கு ஒரு சூட் கேஸில் அரிவாள் கொண்டு வருவதாக நான்
கேள்வி பட்டேன் . என்னை கண்டால் அவருக்கு பயம் . நான்கு நாட்களுக்கு
பிற்கு அடையாள வேலை நிறுத்தம் . அதிகாரி அசைந்து கொடுக்க வில்லை .
பிறகு என்னுடன் வேலை பார்த்த 2 தோழர்களுக்கும் ரூல் -5 கொடுக்க பட்டது .
போராட்டம் பெரிதாகி கொண்டே போனது . தொலை பேசி இலக்காவில்
தோழர்கள் உள்ளே நுலைந்து கோஷம் போட்டார்கள் . எந்த தொலை பேசியை
எடுத்தாலும் போராட்ட கோஷங்களே கேட்கும். கூன்னூர் மற்றும் ஊட்டி , பிறகு
கோத்தகிரி மற்றும் கூடலோர் பகுதிகளில் போராட்டம் பரவியது.
மாவட்ட அமைப்பாளர் தோழர் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். நீலகிரி
மாவட்டம் முழுக்க வேலை நிறுத்தம் நடைபெற்றது. எல்லோரும் ஒரே ஒரு
தனிமனிதனின் சுதந்திற்காக போராடினார்கள் . அற்பணிப்பு 100%.
போராட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் போலீஸ் பட்டாளம் குவிந்து
இருந்தது . கண்டன பேரணியும் கண்டன கூட்டமும் நடந்தன . நான் கண்டன
கூட்டதத்தில் பேசினேன் . நான் புரட்சி பற்றி எல்லாம் பேசவில்லை.
தொழிலாளர் ஒற்றுமை மற்றும் தொழில் சங்க போராட்டங்கள் பற்றியே
பேசினேன் . பயங்கர கர ஒலி .போராட்டம் நீண்டு கொண்டே போனது .
தமிழ் நாட்டில் ஆங்காங்கே அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது .
ஆர்பாட்ட கோஷங்களும் தமிழகம் எங்கும் எதிர் ஒலித்தது. தொழில் சங்க
பத்திரிகை என்னை ஒரு தீவரவாதி என்று தலை அங்கம் எழுதி ...ஆனாலும்
போராட்டதிற்கு ஆதரவு செய்தனர்.
மாதங்கள் ஓடின.
தொழில் சங்க தலைவர்கள் என் வீட்டிற்கு வந்து சம்பள பணத்தை கொடுத்து
விட்டு போனார்கள் . இங்கு ஒன்று சொல்லி கொள்ள பிரியபடுகிறேன் .
CPI & CPM தோழர்களுக்கு இருந்த அக்கறை கூட CPI- ML அமைப்பிற்கு
துளியும் இல்லை. ஆனால் நான் அதை அப்போது பெரிது படுத்த வில்லை.
அரசியல் வேறாக இருந்தாலும் தொழில்சங்கம் என்றால் தொழிலாளர்
ஒற்றுமையே பெரிது .நான் சார்ந்து இருந்த புரட்சிகர அமைப்பு எனக்கு
ஏதாவது வேண்டுமா ...? என சம்பரயாதமாக கூட கேட்க வில்லை . அது
மட்டும் அல்ல . பெரிய தொழில் சங்க போராட்டம் நடைபெறுகிறது ....அதற்கு
வழிகாட்ட முன் வரவில்லை. தொழில் சங்க போராட்டாம் என்றால் அதில்
புரட்சி இருக்காது என்று நினைத்து விட்டார்கள் போல . இந்த சமயத்தில்
தான் மத்திய கமிட்டி என்னை முழுநேர புரட்சியாளராக வார சொன்னது .
நான் எந்த விட முன்யோசனை இன்றி சம்மதம் தெரிவிதேன் . அப்போது
அகில இந்திய தொழில் சங்க தோழர் என்னை முழுநேரமாக பாணியாற்ற
சொன்னார். கூடவே மாதம் தோறும் சம்பளம் கொடுத்து விடுவோம் என
என்னை கேட்டு கொண்டார். நான் ஏற்கனவே முடிவு எடுத்து இருந்ததால்
அந்த வாய்ப்பை இழந்தேன் .
போராட்டம் பரவியது . எரிமலை என தமிழ் நாடு முழுவதும் பரவியது .
தொழிலாளர்கள் பொங்கி எழுந்தனர். என்னை மையமாக வைத்து
நடை பெற்ற போராட்டம் குபு குபு என பரவியது
போராட்டம் தொடர்கிறது ...!
R .சத்திய நாராயணன் 23-09-2023
சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!