கோவில்
சிறுகதை : 29/2023 02-09-2023
அன்பரே ...!
கொஞ்சம் நில்லுங்கள்.
கோவில் , கடவுள் எதிர்மறை சொற்கள் அல்ல .சிவப்பு சிந்தனையாளர்களும்
நாத்திகவாதிகளும் இப்படிபட்ட சொற்களை எதிர்மறை சொற்கள்
ஆக்கிவிட்டனர். விஞ்ஞானத்தை ஏற்று கொள்ளும் இவர்கள் , உளவியல்
விஞ்ஞானா நிபுணர், மனோதத்துவ தந்தை என்று எல்லாம் அழைக்கபடும்
" சிக்மெண்ட் ஃப்ராயிட் " சொல்லும் கருத்தை காது கொடுத்து கேளுங்கள் .
" மனித வாழ்வில் மரணம் என்று ஒன்று உள்ளவரை
கடவுள் நம்பிக்கை என்பது இருந்தே தீரும் .."
அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை . கடவுள் இல்லை என்றால் கூட
"கடவுள் நம்பிக்கை " என்பது இருந்தே தீரும் .
அரசியலில் மதம் கூடாது என்பது தான் "மதசார்பற்றது ". இதற்கு அர்தம்
மதம் கூடாது என்பது அல்ல.
"இந்து " மதம் ...மன்னிக்கவும் இது மதம் இல்லை. இது ஒரு வாழ்க்கை முறை .
வாழ்க்கை நெறி .மற்ற எல்லா மதங்களுக்கும் சட்டம் உண்டு ...கட்டளைகள்
உண்டு . அமைப்பாக உள்ளது . ஆனால் இந்துகளுக்கு என்று எந்த சட்டமும்
இல்லை . அது அமைப்பாக்கபட்ட ஒன்றும் இல்லை. நீங்கள் கோவிலுக்கு
போகலாம் அல்லது போகாமல் இருக்கலாம் . உங்கள் விருப்பம் .நாம்
கடவுளை வணங்கலாம் அல்லது வணங்காமல் இருக்கலாம் .இது தான்
இந்து வாழ்க்கைநெறியின் சிறப்பு. மற்ற எந்த மதத்திலும் இல்லாதது .
நாத்திகம் பேசுவது உங்கள் உரிமை . விருப்பம் .
புரட்சி முடிந்த நாடுகளிலும் நாத்திகம் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை .
ஸ்டாலின் இடித்த "சர்ச் " கள் எல்லாம் மீண்டும் கட்ட பட்டு விட்டன .
சீன ஒரு படி மேலே போயி " ஆன்மிகம் ஊக்குவிக்கபடும் " என்று தனது
அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்து விட்டது. இதில் இருந்து
என்ன தெரிகிறது ...? கடவுள் இல்லை என்றால் கூட கடவுள் நம்பிக்கை
போகாது . கவனிக்க ஃப்ராயிட் சொன்ன விஷயம்.
ஒரு புரட்சிக்காரன் கோவிலுக்கு போகலாமா என்பது ஒரு பெரிய கேள்வி .
புரட்சிக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . ஏன் ...?
நமது சுதந்திர போராட்ட வரலாறை படித்தால் இது நன்கு புரியும் .
திலகர், அரவிந்தர், ராஜாஜி , காந்தி, வ.உ .சி , பாரதியார் ....என்று சொல்லி
கொண்டே போகலாம். இவர்கள் சமயம் மற்றும் தேச பக்தியை தமது
இரு கண்களாக பாவித்த்தனர் .இவர்களிடம் முழு அர்ப்பணிப்பு இல்லயையா ?
வாஞ்சி நாதன் பயங்க்ராவதி ஆனாலும் அவன் ஒரு காளி பக்தன் . அவன்
" பாரத மாதா " வை வணங்குபவன் .கடவுள் நம்பிக்கை சுதந்திர
போராட்டதிற்கு தடையாக இருக்கவில்லை . ஆன்மிகம் என்பது ஆன்மா
பற்றியது . வேண்டும் என்றால் நத்திகவாதிகள் "மனம் " என்று சொல்லி
பார்க்கட்டும் . நாட்டில் 1 % மட்டுமே நாத்திக வாதிகளாக உள்ளனர் என ஒரு
புள்ளி விவரம் பார்த்த ஞாபகம் .
அடுத்து ஒரு விஷயம் . "உபநிஷத் " " நீ கடவுளை நம்புவதும் , நம்பாமல்
இருப்பதும் முக்கியம் அல்ல ....ஆனால் சனாதன தர்மாவை கடை
பிடிக்கிறாயா என்பதே முக்கியம் " -இங்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் .
" சனாதனம் " என்றால் " நிரந்தரம் ஆனது ", " ஆரம்பம் முடிவு இல்லாதது "
என்றே அர்த்தம் . இதை கூட புரிந்து கொள்ளமால் " இந்துதுவா " சக்திகளை
" சனாதன " சக்திகள் என்று சொல்வது அபத்தம் . நான் ஹிந்துத்வா அல்ல .
ஆனால் சனாதன தர்மாவை ( ஜாதிகள் இல்லை ) ஏற்று கொள்பவன் .
விஷயத்திற்கு வருகிறேன்.
கோவிலுக்கு செல்வது ஒரு பழக்கமே ...!
கடவுளை வணங்குவதும் ஒரு பழக்கமே ...!!
இந்துவிற்கு பல தெய்வங்கள் :
முருகன்
சிவன்
மீனாட்சி
காமாட்சி
காயத்ரி
நீங்கள் உங்கள் இஷ்டம் போல் எந்த கடவுளையும் வணங்காளாம் .நான்
ஒரு கதையை தான் எழுத வந்தேன் . ஆனால் பிள்ளையார் பிடிக்க
குரங்கு ஆனது போல் இது " சிறு கட்டுரை ஆகி விட்டது. எனவே கதையை
நான் தனியாக எழுதுகிறேன் .
இப்போது ஒன்றே மட்டும் சொல்லி இந்த படைப்பை நிறைவு செய்கிறேன்
கோவில் ...!
கோவில் ....!!
கோவில் ....!!!
செல்வது
இந்திய கலாச்சாரமே ...!
மக்கள் கலாச்சாரமே ...!!
சுபம்
ஆர்.சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
02-09-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!