பிரசாதம்
சிறுகதை : 030/2023 02-09-2023
புரட்சிக்காரன் கோவிலுக்கு செல்ல பயங்கர தைரியம் அவசியம் .குற்ற
உணர்வு இல்லாமல் அச்சம் இன்றி கோவிலுக்கு செல்ல மிகுந்த துணிச்சல்
வேண்டும் . முதன் முதலாக நான் சுய உணர்வின்றி " மன சிதைவு " நோய்
இருந்த போது தான் கோவிலுக்கு சென்றேன் . சர்ச் , மசூதி ( சிறப்பு
உரிமை பெற்று சென்றேன் ) . பின் சில வருடங்கள் கழித்து சர்ச்
செல்வதை விட்டு
விட்டேன்.
ஆம்.
என் சுய உணர்வு இல்லாத போது தான் முதன் முதலில் கோவிலுக்கு
சென்றேன் .நோய் போனதும் என்னை நானே சுய பரிசீலனை செய்தேன்.
கடவுள் நம்பிக்கை , கோவில் செல்வது என் ரத்தத்தில் ஓடுகிறது என
புரிந்து கொண்டேன் . என் புரட்சிகர கருத்துகளை நான் என்றுமே கை
விட வில்லை .என் சுய உணர்வு , சுய நம்பிக்கை , சுய மன முடிவு ஆகிய
காரணங்களுக்காக கோவில் செல்ல ஆரம்பித்தேன் .
எனக்கு நம் கோவில் மிகவும் பிடித்து இருந்தது . நீங்கள் கடவுளை
வணங்காவிட்டாலும் கோவிலுக்கு செல்லலாம் .இந்த சுதந்தரம் வேறு
மதங்களில் இல்லவே இல்லை.
உபநிஷத் சொல்கிறது :
நீ கடவுளை நம்புவது முக்கியம் அல்ல . ஆனால்
நீ சனாதன தர்மாவை கடைபிடிப்பதே முக்கியம் .
சனாதனம் என்றால் " அழிவு அற்றது " " நிரந்தரம் ஆனது " என்றே
அச்சொல்லுக்கு பொருள் . "ஹிந்துத்வா " சக்திகளை "சனாதன சக்திகள் "
என யார் சொன்னாலும் அது தவறு. சனாதன தர்மாவில் ஜாதிகள் இல்லை.
சரி ...நான் கோவிலுக்கு செல்கிறேன். கோவிலுக்கு செல்ல செல்ல அது
நமது இடம் என்ற எண்ணமே மேல் ஓங்குகிறது . இது உண்மை. கோவில்
உள்ளே நீங்கள் கடவுளை கும்பிடாமல் சும்மா உட்கார்ந்து இருந்தாலே
நம் எண்ணம் ...கற்பனை ...எல்லாம் மாறுகிறது . சில வருடங்களுக்கு
முன் நான் கதை எழுத கோவிலுக்கு செல்வேன். கற்பனை நன்கு வரும் .
இது பொய் அல்ல . நிதர்சன உண்மை.
சைட் அடிக்க கோவில் சென்றால் அதில் தவறு இல்லை. மனதில் நல்ல
எண்ணமே தோன்றும் .எல்லாவற்றை-யும் விடுங்கள் . எங்கள் வீட்டுக்கு
அருகே ஒரு சாஸ்தா கோவில் உள்ளது . வியழான் மற்றும் சனி அன்று
மாலை 6.40-க்கு தீப ஆராதனை காட்டிவிட்டு " பிரசாதம் " தருவார்கள் .
பொங்கல்
புளிசாதம்
தயிர் சாதம்
ஏன் ...?
ஃப்ரைடு ரைஸ் கூட தருவார்கள் .
பிரசதாம் வாங்கி விட்டு வெளியே ஒரு திட்டில் உட்கார்ந்து சாப்பிடுவேன்.
அம்மம்மா ...!
அப்பப்பா ...!!
என்ன சுவை ...? நல்ல கேட்டரிங் தான் கொடுக்கிறார்கள் என்றால கூட
அதன் ருசி தனி ருசி . ருசியோ ருசி . இது கடவுளுக்கு நைவைதியம்
செய்வதால் தான் அதிக ருசியோ என எண்ணுவேன் . நான் பொய் சொல்ல
வில்லை . எனக்கு இந்து மதத்தில் பிடித்தது " அன்ன தானம் " தான் . வருட
வருடம் டிசம்பர் மாதத்தில் சனி மற்றும் ஞாயிறு ஐயப்ன் சேவா சமாஜம்
அல்லது கோவில் சார்பாக அன்னதனாம் நடைபெறும் .
நான் பல திருமண விருந்து சாப்பாட்டை சாப்பிட்டு உள்ளேன் . ஆனால்
அன்னதான ருசி நிசய்யம் வரவில்லை . நான் கடவுளுக்கு நைவைதியம்
செய்வதால் தான் ருசி அதிகம் உள்ளது என்பது என் நம்பிக்கை . சத்யம்
இது மூட நம்பிக்கை இல்லை. பிரத்யேக ருசி . பின் எந்த கோவிலுக்கு
சென்றாலும் பிரசாதம் வாங்காமல் வார மாட்டேன்.
ஒரு முறை குடும்ப தகராறு காரணமாக நான் வீட்டில் சாப்பிட வில்லை
ரூபாய் 20 -ல் வட பழனி சென்று மதிய உணவு சாப்பிட சென்று விடுவேன். 3
மாதங்கள் வட பழனி முருகனின் அன்னதானம் தான் எனக்கு. நான்
நங்கநல்லோரில் மதியம் உணவு சில தடவைகள் சாப்பிட்டு உள்ளேன்.
மாங்காட்டில் அன்னதானதிற்கு என கான்கீரிட் மேசை மற்றும் நாற்காலி .
உட்கார்ந்தே சாப்பிடலாம் .
நான் இரண்டு ஆண்டுகளாக கோவில் செல்வதில்லை . எல்லாம் என்
வாழ்க்கை முறை தான் காரணம் . நான் மாலையில் தூங்கி விடுவேன்
. தவிர நான் M .A . சரித்திரம் படித்து
வருகிறேன் ." யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் " என்ற
காரணத்தால் ஒன்றே ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன் . நீங்கள்
கோவிலுக்கு சென்று கடவுளை கும்பிடவிட்டாலும் பரவாயில்லை . ஆனால்
கட்டாயாம் பிரசாதம் வாங்கி உண்டு பாருங்கள் .அவ்வளவு ருசியோ ருசி .
It is not Idealistic Consumption. But purely Materialistic Consumption...!!!
கோவிலுக்கு செல்லுங்கள் ...!
பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள் ...!!
ருசியோ ருசி ...!!!
சுபம்
R .சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
02-09-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!