Friday, 22 September 2023

 

                மாபெரும் போராட்டம் 

                                                      ( பாகம் -02)                    23-09-2023

போராட்டாம் தமிழகம் தழுவியதாக மாறியது .பல ஊர்களில் 

கண்டன ஆர்பாட்டம் , கண்டன பேரணி மற்றும் அடையாள வேலை 

நிறுத்தம் என்று போராட்டம் குபு குபு என பரவியது .போராட்டம் தீ என 

பரவியது . நான் திருப்புரில் 1000 கணக்கான தொழிளார் மத்தியில் 

நன்கு பேசினேன் . உண்மையில் வீர உரை ஆற்றினேன் . புரட்சி 

பற்றி பேச வில்லை. தொழிலாளர்கள் நான் CPI அல்லது CPMயை 

சார்ந்தவன் இல்லை என்று தெரிந்து இருந்தாலும் என் பேச்சை மிகவும் 

விரும்பினார்கள் . நான் அரசியல் வித்யாசம் பார்க்காமல் தொழில் 

சங்க ஒற்றுமை பற்றி மட்டுமே பேசினேன் . நல்ல கரவொலி . எனக்கு 

அது தெம்பை கொடுத்தது .இப்படி இருக்கும் போது ...

                                                          நான் 

                                                          இளங்கோ 

                                                          நாராயணன் 

ஒன்று கூடி ஒரு போராட்ட பிரச்சார குழுவை தொழில் சங்க மேலிடம் 

அமைத்து எங்களை பல ஊர்களுக்கு அனுப்பி வைத்தன்ர் .

                                                        நீலகிரி 

                                                        கோவை 

                                                        திருப்பூர் 

                                                        கரூர் 

                                                        ஈரோடு 

என ஊர் ஊராக சென்று போராட்டத்தின் அவசியம் குறித்து பேசி 

அவர்களை உற்சாக படுத்தினோம். இதில் விந்தை என்ன வென்றால் 

நாங்கள் மூவருமே புரட்சிகர இயக்கம் சார்ந்தவர்கள் . எனக்கு பின்னால் 

வந்தாலும் அவர்களின் அற்பணிப்பு அதிகம். மேலும் ஒரு தோழர் 

ரூல் -5 வாங்கினார். பால சுப்ரமணியம் ( இப்போது அவர் மறைந்து 

விட்டார் ).....அவரும் பின்னால் முழு நேர புரட்சியாளராக சேர்ந்தார்.

போராட்டம் போல் அரசியல் விழிபுணர்ச்சி தருவது வேறு ஒன்றும்

 இல்லை.  


                    நான் முழு நேர  புரட்சியாளன் என முடிவு எடுத்த பின்பு தான் 

இந்த போராட்டம் துவங்கியது. இப்போது நன்கு புரிகிறது . புரட்சிகர 

அமைபிற்கு தொழில் சங்கம் பற்றிய அறிவும் , அனுபவமும் இல்லை .

எங்கள் போராட்டதிற்கு எந்த வித வழிகட்டாலும் இல்லை . நாங்கள் 

நால்வரும் ( பால சுப்ரமணியம் ) தொழில் சங்க பணியிலே இருந்து 

இருந்தால் ஒரு உறுதியான கட்டுக்கோப்பான தொழில் சங்கதை 

மாநிலதில் உருவாக்கி இருப்போம் . நாங்களும் வேலை இழக்காமல் 

இருந்து அதாவது பகுதி நேரம் மட்டும் புரட்சிகர அமைபிற்கு வேலை 

செய்து இருந்தால் எங்களுக்கும்  வாழ்வை இழக்க நேர்ந்து இருக்காது .

புரட்சிகர தமிழக தொழில் சங்கம் கட்டி இருப்போம் . அமைபிற்கு 

எனக்கு எந்த வழிகாட்டுதலும் தர வில்லை . இல்லை அதனால் தர 

முடிய வில்லை . ஒரு பெரும் வாய்பை நழுவ விட்டோம் .இந்த மாபெரும் 

போராட்டத்தை அமைப்பு கண்டு கொள்ள கூட வில்லையே ...?

எங்கள் தொழில் சங்க அகில இந்திய அமைப்பு கமிட்டி தோழர் ராஜு 

அவர்கள் என்னை முழு நேர தொழில் சங்கவாதியாக வர சொன்னார் .

மாதாமாதம் சம்பளம் வந்து விடும் என உறுதி அளித்தார் . அட கடவுளே ..!

நான் ஏற்கனவே முடிவு எடுத்து இருந்ததால் மன்னிக்கவும் என்று சொல்லி 

விட்டேன். இன்று நினைத்து பார்க்கிறேன் . அப்படி சென்று இருந்தால் 

கூட என் வாழ்வு இவ்வளவு மோசகமாகி இருக்காது . என்ன செய்ய ...?

அப்போது நான் என் அமைப்பின் மீது முழு நம்பிக்கை வைத்து இருந்தேன் .

ம் ம்....

போராட்டம் முடிவுக்கு வந்தது .ஒரே ஒரு மன்னிப்பு கடிதம் கொடுக்க 

சொல்லி என் தொழில் சங்கம் கேட்டு கொண்டது . நானும் சம்மதம்  

தெரிவித்தேன் . பணி நியமன உத்தரவு வந்தது . எனக்காக

ஆயிரகணக்கான தொழிலாளர் போராடி பெற்ற வெற்றி . நான்

 அவர்களுக்காகவே பணியில் சேர்ந்து ஒரு மாதம் வேலை செய்தேன் .

தொழில் சங்கமும் , தொழிலாளர்களும் என்னை தனி இடத்தில் வைத்து 

பார்த்தனர். 


ஒரே ஒரு மாசம் .

நான் வேலைக்கு முழுக்கு போட்டேன் . நான் என்ன செய்கிறேன் என்ற 

நினைப்பே எனக்கு வரவில்லை. எல்லாம் வீதி . நியதி .

கடைசியில் நாங்கள் நால்வரும் பணியை துறந்தோம் ...!

இது தவறான முடிவு.

எங்களை தொழில் சங்கதிலயே பணி செய்ய சொல்லி இருக்க வேண்டும் .

அதிகார வர்கத்தின் எதிராக போராடிய போது தான் தொழில் சங்க 

ஒற்றுமை மற்றும் அவர்களின் போராட்ட குணம் மற்றும் அற்பணிப்பை

முழுதாக உணர்தேன் .


நான் சார்ந்த அமைபிற்கு தொழில் சங்க போராட்டம் பற்றி எந்த புரிதலும் 

இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். 


                                                    என் போராட்டம் 

                                                    மாபெரும் போராட்டம் 

                                                    கடைசியில் நாங்கள் நால்வரும் 

                                                    மத்திய அரசு பணியை துறந்தோம் ..!

                                                    மாபெரும் தவறு ...!!


             மாபெரும் போராட்டம் 

                         

             மாபெரும் வெற்றியே ...!!! ! 


R .சத்திய நாராயணன்      சத்யன்     ஸ்ரீ விவேக்       சின்ன சேவகன் 

                                                      23-09-2023
                          


No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!