சினிமாவின் கிளைமாக்ஸ் ...???
சிறுகதை 034/2023 16-09-2023
சினிமா ...!
மாபெறும் கண்டு பிடிப்பு ...!! மிக சிறந்த பொழுது போக்கு சாதனம் .
முன்பு எல்லாம் படம் ரிலீஸ் ஆன தேதி-யில் முன் பதிவு செய்து
சினிமா பார்ப்பது கலாசாரமாக இருந்தது . மக்கள் எல்லோரும் ...
தமிழ் நாடு முழுக்க படம் பார்ப்பார்கள் .குடும்பமாக சென்று பார்ப்பார்கள் .
சினிமா வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தது . தமிழ் சினிமா 1980-களில்
உச்சம் தொட்டது .
16 வயதினிலேயே
சிகப்பு ரோஜாக்கள்
தண்ணீர் தண்ணீர் ...!
மூன்று முடிச்சு
மூன்றாம் பிறை
மூடுபனி
நெஞ்சதை கிள்ளாதே
7வது மனிதன்
கண் சிவந்தால் மண் சிவக்கும்
முதல் மரியாதை
வறுமையின் நிறம் சிவப்பு
நிழல்கள்
சிந்து பைரவி
அழியாத கோலங்கள்
முள்ளும் மலரும்
சலங்கை ஒலி
வேதம் புதிது
நாயகன்
அவள் அப்படிதான்
இப்படி சொல்லி கொண்டே போகலாம் இயக்குனர்கள் பாலசந்தர் , பாரதி
ராஜா ,மகேந்திரன். பாலு மஹேந்திரா , ருத்ரயா பின் சங்கர் என்று
சினிமாவை அதன் உச்சத்திற்கு கொண்டு போனார்கள் .எல்லோரும்
திரை அரங்கம் சென்று பார்போம் . இப்போது நிலை என்ன ..? சுமார்
2,000 திரை அரங்குகள் கடந்த 10 ஆண்டுகளில் மூட பட்டு விட்டன..
தற்போது திரை அரங்கு சென்று பார்க்கும் கலாசாரம் தமிழ் நாட்டில்
இல்லாமால் போய் விட்டது .
காரணம் : 1. தொலை காட்சி
2. CD
எனவே சினிமா தொழில் இப்போது நசிந்து போய் உள்ளது .உங்களுக்கு
நினைவு இருக்கலாம் . மை டியர் குட்டி சாத்தான் என்ற 3D படம் பெரும்
வெற்றியை பெற்றது . காரணம் 3D படம் என்பதால் . நமக்கு கண்ணாடி
கொடுத்து விடுவார்கள் . திரையில் பார்க்கும் போது மிக பிரமிப்பாக
இருந்ததது. ஆனால் அதற்கு பிறகு வந்த 3D படங்கள் படுதோல்வியை
அடைந்தன . காரணம் தொழில் நுட்பம் போல் உள்ளடக்கம் இல்லை.
தொழில் நுட்பம் + உள்ளடக்கம் மட்டுமே வெற்றி பெரும் . சரி ...வருங்கால
சினிமா எப்படி இருக்கும் ...? நீங்கள் சென்னையில் உள்ள "பிர்லா கோளரங்கம்
" போயி வானத்தை பார்த்து இருந்தால் நான் சொல்வதை எளிதாக புரிந்து
கொள்ள முடியும் .
ஆம். சீட் இருக்காது .படுத்து கொண்டே படம் பார்க்க வேண்டும் .
ஸ்கிரீன் நமக்கு தலை மேல் இருக்கும் . அகலம் -நீளம் கிடையாது , ஆழம் ,
சுற்றுவட்டாரம் , ஆரம் மட்டுமே இருக்கும் .3D படம் போல் 7D படங்கள்
இந்த நூற்றாண்டிலேயே வந்து விடும் . அது என்ன 7D ...?
1. ஆரம்
2. சுற்றளவு
3. ஆழம்
4. மணம்
5. ஓசை
6. இயக்கங்கள்
7. முழுமை
நான் 7 D படம் பார்த்தால் எப்படி இருக்கும் என சொல்கிறேன். படுத்து
கொண்டே கண்ணாடி அணிந்தோ அல்லது அணியாமலோ பார்க்கலாம்.
அர்ஜுனன் விட்ட அம்பு நேரே நம் கண் அருகில் வரும். ஒரு சில நிமிடங்கள்
அந்த பாதிப்பில் இருந்த வெளி வார நேரம் ஆகும். பிறகு நாயகி மல்லிகை
பூவை சூடினால் நமக்கு மல்லிகை வாசம் வரும் . மீன் கடையில் சண்டை
என்றால் மீன் நாற்றம் நமக்கும் அடிக்கும். இதுவே 4 D ( மணம் ). அடுத்து
நாயகன் குடை பிடித்து இடி -மின்னல் மழையில் சென்றால் ...நமது
காதுக்கு அருகே இடி சப்தம் கேட்கும் . மின்னல் சில நொடிகள் நம் கண்ணில்
படும். தலைக்கு மேல் விழும் இடி நம் தலையின் மேல் விழுவது போன்று
இருக்கும். இதுவே 5D . அடுத்து நாயகன் ரயிலில் பயணம் செய்தால் நாம்
நம் இருக்கையிலே ரயில் -ளில் போகும் போது ஏற்படும் சப்தம் மட்டும் அல்ல .
நம் படுக்கையே ரயில்-இல் போவது போன்ற உணர்வு ஏற்படும் . நமது
இருக்கைகள் ஆட்டம் போடும் . அதே போல் பூகம்பம் திரையில் நடந்தால்
நம் இருக்கைகள் அதிர்ச்சியை உணரும் . இது தான் 6 D.
அடுத்து 7 D ....?
1 லிருந்து 6 வரை உள்ள D -கள் 2டோ அல்லது
அதற்கு மேற்பட்ட D -கள் சேர்ந்து 7D கொடுக்கும் .
இது மிக குறைவாகவே பயன்படுத்த முடியும் .
இதுவே முழுமை 7 D ....!
திரை அரங்கில் சப்தம் காதை அடைக்க செய்யும் . எல்லோரும் தங்கள்
பரவச அனுபவத்தால் ....
ஆ ....!
ஆஆ ...ஆஆ ...!!
ஓஹோ ...ஓஹோ ...!!!
ஹேய் ...ஹேய் ...!!!!
ஐயோ ...ஐயோ ...!!! !!
O MY GOD .....!!! !!!
அம்மாமாமா ....!!! !!! !
என்று கத்துவார்கள் . குழந்தைகள் முதலில் பயப்படும் . பின் பழகி போய்
விடும் .
சினிமா வரலாற்றின் கிளைமாக்ஸ் உச்சம் . இது எனது கற்பனை தான் .
ஆனால் நிச்சயம் நடைமுறைக்கு வரும். உள்ளடக்கம் + தொழில் நுட்பம்
இதை சாதிக்கும் . எப்போது என்று எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம்
நடக்கும். புதிய சினிமா அரங்குகள் கட்டபடும். இந்த சினிமாவை திரை
அரங்கில் மட்டுமே சென்று அனுபிவிக்க முடியும் . மக்களுக்கு திரை அரங்கம்
போகும் பழக்கம் வரும்.
சினிமாவின் உள்ளடக்கம் + தொழில் நுட்பம் புரட்சியை செய்யும் ...!
தியேட்டர் கலாசாரம் மீண்டும் வரட்டும் ...!
பி. கு.: இது சரியாக எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது . ஆனால்
21-ம் நூற்றாண்டு முடிவதற்குள் .....
நடந்தே தீரும் ...! ! ! ! ! ! !
R .சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
16-09-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!