Friday, 15 September 2023



                    கதை அல்ல நிஜம் ...! 
                    சிறுகதை 033/2023                                                                16-09-2023

மூர்த்தி .

சிறந்த கம்யூனிஸ்ட் . மக்களுக்காக உழைப்பதில் பெருமிதம் கொண்டவன் .

மக்கள் சேவையே அவனது லட்சியம் . உயிர் . கடமை  எல்லாம் . மூர்த்தி 

அமைப்பில் சேர்ந்த போது அவன் கல்லூரி மாணவன் .பின் மத்திய 

அரசில் தொலைபேசி அமைப்பில் வேலை . கை நிறைய சம்பளம் .

அவன் அப்போது ஊட்டி அமைப்பின் செயலாளர் . பின் கோவை மாவட்ட 

அமைப்பு கமிட்டி உறுப்பினர் . தியாகம் , அற்பணிப்பு இதுவே அவனது 

தாரக மந்திரம் . ஆதரவாளர்களை சந்தித்து பேசி அமைப்பில் சேர்ப்பார். 

நல்ல அமைப்பாளராக செயல் பட்டார். இந்த தருணத்தில் அமைப்பு ...

அதாவது மத்திய கமிட்டி மூர்த்தியை முழு நேர புரட்சியாளன்- ஆக 

அழைத்தது . 


மூர்த்திக்கு சந்தோஷம் . அவனது உழைப்பால் அவனுக்கு அமைப்பில் 

கிடைத்த பதவி உயர்வு. கோவை மாவட்டத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றிய 

பின்பு மாவட்ட அமைப்பாளராக மதுரை-க்கு மாற்ற பட்டார். மூர்த்தி 

சந்தோஷமாக புதிய பொறுப்பை ஏற்று கொண்டான் . எந்த வித முன் 

யோசனை இன்றி மத்திய அரசு பணியை துறந்தான் . அவன் அதிகமாகவே 

சேவை செய்தான் .


புதிய இடம்....

புதிய பகுதி ...

புதிய தோழர்கள் ...


ஆர்வத்துடன் பணியாற்றினான் . அப்போது மதுரையில் அமைப்பு பெரிதாக 

ஒன்றும் இல்லை. மூர்த்தி அவன் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து

 இருந்தான். மதுரை என்றால் மதுரை மட்டும் அல்ல.

                                          புதுக்கோட்டை 

                                          திருவாடானை 

                                         தொண்டி 

                                        பரமக்குடி 

                                        ராமநாதபுரம் 

                                        தேவகோட்டை 

என தென் பகுதி முழுமைக்கும் பொறுப்பு . இப்படி இனிதே போய் கொண்டு 

இருந்த அவன் வாழ்வில் "சுனாமி " வந்ததது. மதுரை மாவட்ட கமிட்டி 

சிறப்பு கூட்டத்தை மாநில செயலாளர் கூட்டினார் . 

மூர்த்திக்கு "சனி " வந்ததது . மாநில செயலாளர் அவன்  மீது கூட்டத்திலயே 

விமர்சனம் எனும் அம்பை தொடுத்தார் . 


                 " மக்களுக்கு பொறுப்பாய் இருக்க வேண்டிய நீங்களே 

                   எப்படி மக்களுக்கு துரோகம்  செய்யலாம் ...? "

                  என தொடர்ந்தார் . மூர்த்திக்கு நெஞ்சு லப் -டப் என அடித்தது .

                   செயலர் தொடர்ந்தார் .

                  " நீங்கள் மக்கள் பணத்தில் இருந்து சிகெரேட் பிடிக்கிறீர்கள் ...

                    இது மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா ...? " என 

                   என் மீது குற்றச்சாட்டை அடுக்கி கொண்டே போனார் . 


                                                 மூர்த்தி -க்கு செம ஷாக் ...!

                                                பேச முடியவில்லை .....!!

செயலர் குற்றச்சாட்டுக்கு மூர்த்தி பதில் சொல்ல முடிய வில்லை . இது 

நடந்து 35 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது என்றால் செயலரை 

வாங்கு வாங்கு என்று வெளுத்து வங்கி இருப்பான் . ஆனால் அன்று அவனால் 

முடியவில்லை . கூட்டம் முடிந்த பின் தனியே சென்று குலுங்கி குலுங்கி 

அழுதான் . தான் கை நிறய சம்பளம் வாங்கும் வேலையை விட்டு விட்டு 

வந்தவன் .இது செயலருக்கும் தெரியும் . பின் எப்படி இவ்வாறு விமர்சனம் 

வைக்க முடிந்ததது ...?. 


                             மூர்த்தி-யை பொறுத்த வரை "தம் " அடிப்பது ஒரு பழக்கம் .

அவ்வளவு தான் . அமைப்பிற்கு தொந்தரவாக அவன்  இருந்ததது கிடையாது.

மற்ற தோழர்கள் எல்லாம் நன்றாகவே தோழமையுடன் பழகினார்கள்.

பணத்தை தியாகம் செய்து விட்டு வந்த மூர்த்தியை விமர்சனம் என்ற பேரில் 

மூர்த்தியின் மனதை சுக்குநூறாக ஆக்கி விட்டார் . "தம் " அடிப்பது

 தனிப்பட்ட சுத்தந்திரம் . மூர்த்திக்கு அந்த உரிமை உள்ளது. "தம் " அடிப்பது 

மக்கள் கலாச்சாரமே ...! அவனின் அற்பணிப்பு 100%. செயலர் விமர்சனம் 

தேவை இல்லாததது .வறட்டு தனம் . விதண்டா வாதம் . இந்த சம்பவத்தை 

மூர்த்தியால் வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாது . கூட்டதிற்கு பிறகு 

மூர்த்தி மிகவும் கஷ்டபட்டான் .


                                         ஆம் ...!

                                         அவன் "தம் " அடிப்பதை நிறுத்த வில்லை .

                                         பீடி குடிக்க ஆரம்பித்து விட்டான் .....!


பி. கு.   : "தம் "அடிப்பது தவறு அல்ல . ஒரு பழக்கம் . மேலும் அமைப்பு 

                 விதிகள் "குடிக்காரராக இருக்க கூடாது என்று தான் சொல்கிறது .

                "தம்" பற்றி எந்த விதியும் இல்லை. பின் தேவை அற்ற இந்த 

                 விமர்சனம் .....


                       ஏன் ...? 


R .சத்ய நாராயணன்      சத்யன்    ஸ்ரீ விவேக்      சின்ன சேவகன்   

                                                 16-09-2023

  

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!