கதை அல்ல நிஜம் ...!
சிறுகதை 033/2023 16-09-2023
மூர்த்தி .
சிறந்த கம்யூனிஸ்ட் . மக்களுக்காக உழைப்பதில் பெருமிதம் கொண்டவன் .
மக்கள் சேவையே அவனது லட்சியம் . உயிர் . கடமை எல்லாம் . மூர்த்தி
அமைப்பில் சேர்ந்த போது அவன் கல்லூரி மாணவன் .பின் மத்திய
அரசில் தொலைபேசி அமைப்பில் வேலை . கை நிறைய சம்பளம் .
அவன் அப்போது ஊட்டி அமைப்பின் செயலாளர் . பின் கோவை மாவட்ட
அமைப்பு கமிட்டி உறுப்பினர் . தியாகம் , அற்பணிப்பு இதுவே அவனது
தாரக மந்திரம் . ஆதரவாளர்களை சந்தித்து பேசி அமைப்பில் சேர்ப்பார்.
நல்ல அமைப்பாளராக செயல் பட்டார். இந்த தருணத்தில் அமைப்பு ...
அதாவது மத்திய கமிட்டி மூர்த்தியை முழு நேர புரட்சியாளன்- ஆக
அழைத்தது .
மூர்த்திக்கு சந்தோஷம் . அவனது உழைப்பால் அவனுக்கு அமைப்பில்
கிடைத்த பதவி உயர்வு. கோவை மாவட்டத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றிய
பின்பு மாவட்ட அமைப்பாளராக மதுரை-க்கு மாற்ற பட்டார். மூர்த்தி
சந்தோஷமாக புதிய பொறுப்பை ஏற்று கொண்டான் . எந்த வித முன்
யோசனை இன்றி மத்திய அரசு பணியை துறந்தான் . அவன் அதிகமாகவே
சேவை செய்தான் .
புதிய இடம்....
புதிய பகுதி ...
புதிய தோழர்கள் ...
ஆர்வத்துடன் பணியாற்றினான் . அப்போது மதுரையில் அமைப்பு பெரிதாக
ஒன்றும் இல்லை. மூர்த்தி அவன் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து
இருந்தான். மதுரை என்றால் மதுரை மட்டும் அல்ல.
புதுக்கோட்டை
திருவாடானை
தொண்டி
பரமக்குடி
ராமநாதபுரம்
தேவகோட்டை
என தென் பகுதி முழுமைக்கும் பொறுப்பு . இப்படி இனிதே போய் கொண்டு
இருந்த அவன் வாழ்வில் "சுனாமி " வந்ததது. மதுரை மாவட்ட கமிட்டி
சிறப்பு கூட்டத்தை மாநில செயலாளர் கூட்டினார் .
மூர்த்திக்கு "சனி " வந்ததது . மாநில செயலாளர் அவன் மீது கூட்டத்திலயே
விமர்சனம் எனும் அம்பை தொடுத்தார் .
" மக்களுக்கு பொறுப்பாய் இருக்க வேண்டிய நீங்களே
எப்படி மக்களுக்கு துரோகம் செய்யலாம் ...? "
என தொடர்ந்தார் . மூர்த்திக்கு நெஞ்சு லப் -டப் என அடித்தது .
செயலர் தொடர்ந்தார் .
" நீங்கள் மக்கள் பணத்தில் இருந்து சிகெரேட் பிடிக்கிறீர்கள் ...
இது மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா ...? " என
என் மீது குற்றச்சாட்டை அடுக்கி கொண்டே போனார் .
மூர்த்தி -க்கு செம ஷாக் ...!
பேச முடியவில்லை .....!!
செயலர் குற்றச்சாட்டுக்கு மூர்த்தி பதில் சொல்ல முடிய வில்லை . இது
நடந்து 35 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது என்றால் செயலரை
வாங்கு வாங்கு என்று வெளுத்து வங்கி இருப்பான் . ஆனால் அன்று அவனால்
முடியவில்லை . கூட்டம் முடிந்த பின் தனியே சென்று குலுங்கி குலுங்கி
அழுதான் . தான் கை நிறய சம்பளம் வாங்கும் வேலையை விட்டு விட்டு
வந்தவன் .இது செயலருக்கும் தெரியும் . பின் எப்படி இவ்வாறு விமர்சனம்
வைக்க முடிந்ததது ...?.
மூர்த்தி-யை பொறுத்த வரை "தம் " அடிப்பது ஒரு பழக்கம் .
அவ்வளவு தான் . அமைப்பிற்கு தொந்தரவாக அவன் இருந்ததது கிடையாது.
மற்ற தோழர்கள் எல்லாம் நன்றாகவே தோழமையுடன் பழகினார்கள்.
பணத்தை தியாகம் செய்து விட்டு வந்த மூர்த்தியை விமர்சனம் என்ற பேரில்
மூர்த்தியின் மனதை சுக்குநூறாக ஆக்கி விட்டார் . "தம் " அடிப்பது
தனிப்பட்ட சுத்தந்திரம் . மூர்த்திக்கு அந்த உரிமை உள்ளது. "தம் " அடிப்பது
மக்கள் கலாச்சாரமே ...! அவனின் அற்பணிப்பு 100%. செயலர் விமர்சனம்
தேவை இல்லாததது .வறட்டு தனம் . விதண்டா வாதம் . இந்த சம்பவத்தை
மூர்த்தியால் வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாது . கூட்டதிற்கு பிறகு
மூர்த்தி மிகவும் கஷ்டபட்டான் .
ஆம் ...!
அவன் "தம் " அடிப்பதை நிறுத்த வில்லை .
பீடி குடிக்க ஆரம்பித்து விட்டான் .....!
பி. கு. : "தம் "அடிப்பது தவறு அல்ல . ஒரு பழக்கம் . மேலும் அமைப்பு
விதிகள் "குடிக்காரராக இருக்க கூடாது என்று தான் சொல்கிறது .
"தம்" பற்றி எந்த விதியும் இல்லை. பின் தேவை அற்ற இந்த
விமர்சனம் .....
ஏன் ...?
R .சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
16-09-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!