Friday, 2 June 2023

 



                                              தண்ணீர் ...! தண்ணீர் ...!!        ( சிறுகதை -001/2023 )


நாக்கு வறண்டு விட்டது . உடல் சோர்வும் வந்து விட்டது .. நடக்க கூட 

முடிய வில்லை.

                                     தாகம் ...!

                                          தாகம் ...!!

                                                தாகம்.....!!!

நான் எப்போதும் தண்ணீர் கிடைக்கும் இடத்தில் தண்ணீர் இப்போது 

இல்லை.சுற்றிலும் தண்ணீர் இல்லை . சூரிய வெப்பம் அதிகம் .

கடும் சூடு .உடல் தகதகத்து கஷ்ட படுத்தியது .

உடல் குளிக்க வேண்டும் போல் இருந்தது . வெப்பம் மிக மிக அதிகம் .

குளித்து சில வாரங்கள் ஆகி விட்டது .

அய்யோ ...! அம்மா ..!! அப்பா ...!!!

எங்கே குளிப்பேன் ...?

என் தாகம் எப்போது தீரும் ...??

பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்ததது ...!

நான்கு நாட்களாக சரியாக சாப்பிட வில்லை . சில பழங்கள் மட்டுமே 

சாப்பிட்டேன் .பசியை விட தாகம் தான் அதிகம் .வெய்யல் சுட்டு எரித்தது .

என்னால் தாங்க முடிய வில்லை .

                       தண்ணீர் ...! 

                            தண்ணீர் ...!!

எங்கே போவேன் ...?

ஓட ஆரம்பித்து விட்டேன் .

தண்ணீர் குடித்து 10 நாட்கள் ஆகிவிட்டது .

ஓடி ஓடி சோர்ந்து விட்டேன் .உடல் பலவீனமாக இருந்தது. என் மகளை 

பார்க்க ஆசை . அவள் பெரியவள் ஆகி விட்டாள் .ஆனால் நான் அவளை விட்டு 

ஓடினேன் . என் மகளுக்கும் தாகம் .

எனக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை .ஒன்றும் புரியவில்லை .

தண்ணீர் தேடி ஓடினேன் . ஆனால் கிடைக்கவில்லை..

இப்போது நாடு ரோடில் ஓடி கொண்டு இருக்கிறேன் .எனக்கு மேலே பயங்கர 

சப்தத்துடன் ஒரு இயந்திரம் பறந்து போனது . சப்தம் என் காதை துளைத்து 

என் மூளையை என்னவோ செய்தது . நான் மிரண்டு போனேன் .(Drone).

பயம் வந்தது . வேகமாக ஓடினேன் .சீக்கிரம் தண்ணீர் குடிக்க வேண்டும் .

எனக்கு வயது ஆகி விட்டது . அது எனக்கு தெரியும் .

ரோடு .

பக்கவாட்டில் ஒரு பெரிய கட்டிடம் . அதன் காவலாளி தன் இடுப்பில் இருந்து 

துப்பாக்கியை எடுத்தான்.


நான் உண்மையில் ஒரு சாது ...! 

எனக்கு ஆபத்து வந்து விட்டது என்பதை உணர்ந்தேன் .

எனக்கு வேறு வழி தெரிய வில்லை . அந்த கவலாளியை நோக்கி ஓடினேன் .

என் கையினால் அவனை தூக்கி வீசி எறிந்தேன் . அவன் சாய்ந்து விட்டான் .

அவன் மயங்கி விழுந்து இருக்கலாம் .

அல்லது 

அவன் இறந்து இருக்காலம் .

நான் மீண்டும் ஓடினேன் ...!

அட ...

இவ்வளவு சொல்லி விட்டேன் ...

என் பெயரை சொல்ல வில்லையே ...?

என் பெயர் ...

என் பெயர்....

                                          அரிசிக்கொம்பன் ...!!!

பி .கு 01 :       நான் தந்தம் உள்ளவன் . மீண்டும் வாசிக்கவும் .

பி .கு . 02 :    இந்த கதையை சொல்லுவது யார் என்று கடைசி வரை 

                       வராது .

                       ஆம் ...!  யானை ...!!


R. சத்ய நாராயணன்                ஸ்ரீ விவேக்            03-06-2023

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!