சிறுகதை 022/2023 ஒரு வக்கீலின் வாதம் ...! 05-08-2023
மாண்புமிகு ....
ஆனரபில் ...
உச்ச நீதி மன்ற தலமை நீதிபதி அவர்களே ...!
இந்த வழக்கு தன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது . எனவே என் இறுதி
வாதத்தில் என் கருத்துகளை அழுத்த திருத்தமாக பதிவு செய்ய
விரும்புகிறேன் .
ஆம்.
நம் அரசியல் அமைப்பு சட்டம் " வீ தி பீப்பிள் ஆஃப் இந்தியா " அதாவது
" மக்களாகிய நாம் " என ஆரம்பித்து ஒரு நீண்ட அரசியல் அமைப்பு
சட்டமாக பேர் பெற்று விளங்குகிறது . மேலும் ...
இந்தியா ஒரு முழு இறைமை உடைய சமய சார்பற்ற
சமதர்ம ....
என துவங்குகிறது . நான் எல்லா விஷயங்கள் விட்டுவிட்டு ஒன்றே மட்டுமே
எடுத்து கொள்ள விரும்புகிறேன் .
மதிபிற்கு உரிய நீதிபதியே ...!
இந்திய அரசியல் சட்டத்தின் முக உரையில் " இது சம தர்ம " நாடு என்று
குறிப்பிட பட்டு உள்ளது .
இது தான் பிரச்சனை ...!
இது தான் மையம் ...!!
இது தான் என் கேள்வி ...!!!
இந்தியா ஒரு சமதர்ம நாடா ...????
இல்லை. நிச்சயம் இல்லை. நாட்டில் பெரும்பான்மை மக்கள் வறுமையில்
தான் வாடுகின்றனர் . இந்தியாவின் முதுகு எழும்பு என்று சொல்ல படும்
விவசாயிகள் வாழ்க்கையை பற்றி இந்த உலகமே அறியும் . அது மட்டும் அல்ல .
நகரத்தில் குடிபுங்குந்த தொழிலாளிகள் சுபிட்சமாக வாழ வில்லை . நான்
புள்ளி விவரங்களை தர விரும்ப வில்லை. உலகே அறியும் . இப்படி
தொழிலாளி - விவசாயி வறுமையில் உள்ள போது எப்படி நம் நாட்டை
ஒரு "சமதர்ம " நாடு என்று சொல்ல முடியும் ? மக்கள் சார்பாக நான் இந்த
நீதிமன்றம் முன் சில கேள்விகளை வைக்க விரும்புகிறேன் ......
1. இந்தியாவில் அனைத்து தொழிற்சாலைகளும் தேச உடமை
ஆக்க பட்டு உள்ளதா ...?
2. நாட்டின் பெரும்பான்மை மக்கள் பொருளாதார ரீதியில்
" சமத்துவம் " பெற்று உள்ளனரா ...??
3. கிராமங்களில் கூலி விவசாயிகள் நிலம் இல்லாமல் மூணு
வேளை சாப்பிடுகிறார்களா ...??? பெரும்பாலும் காலை பழைய
சோறு தான் . மூணு வேளை நல்ல உணவு என்பது வெறும் கனவு
தான்
4. பிறகு ...மருத்துவம் ... இந்தியாவில் உள்ள பெரும் " பல்நோக்கு
மருத்துவ மனைகள்" தனியரிடமே உள்ளது . இதை ஏன் தேசிய
உடமை ஆக்க கூடாது ...???? சமதர்ம சமூகத்தில் எல்லா சிகிச்சைகள்
இலவசமாகவே இருக்கும் . இது மக்களின் அடிப்படை உரிமை .
5. கல்வி ...அம்மம்மா ...! எல்லா கல்வி நிறுவனங்கள் தனி
உடமையாகவே உள்ளது .அனைவருக்கும் கல்வி ...அதுவும்
பள்ளி - கல்லூரி - ஆராய்ச்சி வரை இலவசமாக இல்லையே ...??? ??
6. தற்சமயம் இந்தியாவில் உள்ள பெண்கள் சமூகத்திலும் , வீட்டிலும்
முழு சுதந்திரம் பெற்று உள்ளனரா ??? ??? பெண்கள் பாதுகாப்பு
உள்ளதா ...??? ??? உ.ம் : மணிப்பூர் வன்முறை .
7. கடைசியாக ...இங்கு இன்று இந்தியாவில் " சுதந்திரம் , சமத்துவம்
சகோதராத்துவம் " உள்ளதா ...??? ??? ?
8. ஆட்சி, நிர்வாகம் இவற்றில் மக்கள் பங்கு உள்ளதா ...??? ??? ??
9. அதிகார வர்கம் யாருக்காக உள்ளது .??? ??? ???
ஆனரபில் நீதிபதியே ...!
எப்படி பார்த்தாலும் இந்தியா ஒரு "சமதர்ம " நாடு இல்லை என்பது வெட்ட
வெளிச்சமாக தெரிகிறது .இந்த நேரத்தில் நமது அரசியல் அமைப்பு
" சமதர்ம " நாடு என்று பிரகடனம் செய்வது சரியா ...?
இதற்கு 2 தீர்வுகளே உள்ளன .
1. அரசியல் சாசன முகவுரையில் " சமதர்ம "என்ற சொல்
நீக்க பட வேண்டும் .
2. அல்லது இந்தியா மெய்யாகவே ஒரு " சமதர்ம " நாடக
மாற வேண்டும் .
எனவே "சமதர்ம " நாடாக இந்தியா மாற வேண்டும் என சொல்லி என்
வாதத்தை முடித்து கொள்கிறேன் .
தட்ஸ் ஆல் யுவர் ஆனர் ...!!!
நீதிபதி : வாதங்கள் ஏற்று கொள்ள பட்டன . அரசியல் அமைப்பு சட்டத்தின்
முகவுரையை மாற்றுவது சரி அல்ல. எனவே நிஜமாகவே பாரத
நாடு " சமதர்ம " சமூகுமாக வேண்டிய கட்டயாம் உள்ளது .
எனவே இப்போது தீர்ப்பு சொல்ல முடியாத நிலை . எனவே
தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன் .
நல்லதே நடக்கும் என நம்புவோமாக .
ஜெய் ஹிந்த் ...!
சுபம்
R.சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் சத்யன் சின்ன சேவகன்
05-08-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!