Friday, 11 August 2023

 

           என்ன செய்ய வேண்டும் ..?             

          12-08-2023     சிறுகதை 24/2023 

அன்புள்ள தோழரே ...!

                            வணக்கம் .

                             தங்கள் கடிதமும் , புத்தகமும் கிடைத்தது. மிக்க நன்றி. 

நீங்கள் உங்கள் புத்தகத்தில்  குறிபிட்டுள்ள பெரும்பான்மை

 விஷயங்களை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன் .ஆனால் சில

 விஷ்யங்கள் என் மனதை வேதனையடைய செய்கிறது . என் மனதில் 

தோன்றும் விஷயங்களை உங்கள் முன் வைக்க போகிறேன் . நான் 

என்றுமே புரட்சிக்கு ஆதரவு கொடுக்கவே விரும்புகிறேன் .

                             நக்ஸல்பாரி இயக்கம் ...!

                             நீங்கள் நக்ஸல்பாரி இயக்கம் குறித்து மிக நன்றாகவே 

எழுதி உள்ளீர்கள் . சீன வானொலி " இந்தியாவில் வசந்த்ததின் இடி 

முழக்கம் கேட்கிறது " என்று அறிவித்தது மிக சரியே . ஆனால்

 நக்ஸல்பாரி இயக்கதில் இருந்து தான் CPI (ML ) கட்சி துவங்கியது . பல 

முடிவுகள் சரியாக இருந்த போதும் பெரும் தவறு செய்து விட்டார்கள் .

நக்ஸல்பாரி, சிலிகுரி ஆகிய பகுதிகளில் இருந்த நிலமை வேறு. அந்த 

நிலை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. எனவே இயக்கம் தீவீர

 வாதத்தில் வீழ்ந்தது அறிந்த ஒன்றே. நாட்டில் எங்கும் புரட்சிகர 

நிலை இருக்க வில்லை . எனவே அந்த திட்டத்தை எல்லா இடங்களிலும் 

நிறைவேற்றுவது என்பது மிக தவறான விஷயம். 

                             பின் என்ன நடந்தது...? 

தொட்டதற்கு எல்லாம் கருத்து வேறுபாடு . விளைவு கட்சி பிளவு .

இன்று சுமார் 40 கட்சிகளாக இல்லை குழுக்களாக செயல் பட்டு 

வருகின்றான்ர். 

                             இங்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் . சுதந்திர 

போராட்ட காலத்தில் காந்தி-நேரு , காந்தி-ராஜாஜி . பட்டேல் -நேரு 

போன்று எண்ணற்ற முரண்பாடுகள் கட்சிக்கு உள் இருந்தது . ஆனால் 

யாரும் கட்சியை பிளவு செய்ய விரும்ப வில்லை . கட்சி ஒற்றுமை தான் 

முக்கியம் என இருந்தனர் . ஒரு பூஷ்வா கட்சிக்கு தெரிந்த விஷயம்  

கூட புரட்சியாளர்களுக்கு தெரிய வில்லை என்பது சாபக்கேடு .

                           ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ...!

இதை CPI (ML) உணர வேண்டும். நக்ஸல்பாரி முடிந்து பல பத்தாண்டுகள் 

ஓடிவிட்டன. பூஷ்வா காட்சிகள் கூட I .N.D .I .A என ஒன்று படுகின்றனர். 


இதை இந்திய புரட்சியாளர்கள் , இடது சாரிகள் , மக்கள் இயக்கங்கள் 

அறிவுஜீவிகள் , மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர

 வேண்டிய காலம் வந்து விட்டது . இப்போதும் நான் வைக்கும் திட்டம் தான் 

சரியானது என்று இருப்போமே என்றால் வருங்காலம் நம்மை தூற்றும் .


                                         1. ஏகாதிபத்திய எதிர்ப்பு 

                                         2. முதலாளிதத்துவ எதிர்ப்பு 

                                        3. நில உடமை எதிர்ப்பு 

                                        4. தொழிலாளர் நல்வாழ்வு 

                                        5. உலக அமைதி & நல்வாழ்வு 

இந்த 5 அம்ச திட்டத்தை எல்லோரும் ஏற்று கொள்வார்கள் .இதை ஏற்று 

கொள்பவர்கள் ஒன்றாக இணைந்து " என்ன செய்ய வேண்டும் " என 

கூடி திட்டம் போட்டால் "இந்தியா விழித்து கொள்ளும் ". இது தான் 

இன்றைய பிரதான திட்டம் ." சமதர்ம " சமூகம் அமைக்க என்ன செய்ய 

வேண்டும் என்று ஒரு குறிப்பான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் .

தோழரே ...!

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன  .

              1. கட்சி /முன்னணி ரகசியமாக இருக்க வேண்டிய அவசியம் 

                  இல்லை . ( 21-அம் ) நூற்றாண்டில் இது சாத்தியம் இல்லை .

             2. கட்டாயம் ஆயுத புரட்சி தான் என்பதும் அவசியம் இல்லை.

                 இதை தன் மறைவுக்கு முன் கேஸ்ட்ரோ சொல்லி உள்ளார். 

             3.  மக்களை ஒரே அணியில் திரட்ட வேண்டும் .

            4.  பாராளுமன்ற பங்கு என்பது 2 காரணங்களுக்காக 

                அமைய வேண்டும் .

                                  அ . சட்டம் இயற்றி நிர்வாகத்தை செயலுக்கு 
                                   
                                         கொண்டு வரவேண்டும் . இது சாத்தியமே ...!

                                  ஆ. இல்லை என்றால் மக்கள் முடிவு செய்வார்கள் 
             
             5. "சமதர்ம " சமூகம் மட்டும் உலக அமைதி மற்றும் சமாதான 

                  சகவாழ்வு -இதுவே நம் இலக்கு .

நான் என் எல்லா கருத்துகளையும் முன் வைக்க வில்லை . எது இப்போது 

முக்கியமோ அதை மட்டுமே நான் கோடிட்டு காட்டி உள்ளேன்.

                                           ஒற்றுமையே நமது பலம் ...!

நான் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் .

உங்கள் கருதுக்கள் மற்றும் விமர்சனங்களை ஆவலோடு எதிர் 

பார்த்து உள்ளேன்.

                                                                                                      இப்படிக்கு ,

                                                                                                 புரட்சி தாசன் 

                                                                                                 தமிழ்நாடு - 2023-2024


R .சத்ய நாராயணன்    சத்யன் ஸ்ரீ விவேக்    சின்ன சேவகன் 

                                                       12-08-2023


                                                      அடுத்த வாரம் 2 காதல் கதைகள் 

                                                                    1. தீவிர "வாதம் "...!

                                                                    2. இரு தார ம"ன"ம்....!!   

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!