சிறுகதை 027/2023 வீதி நாடகம் 26-08-2023
1980-களில் மக்கள் கலை இலக்கிய மன்றம் ...மக்கள் கலாசார கழகம்
ஆனது. தமிழகம் முழுக்க முக்கிய நகரங்கள் மட்டும் இன்றி பல்வேறு
கிராமங்களில்-லும் வீதி நாடகங்கள் அரங்கேற்ற பட்டன . அதற்கு நல்ல
வரவேற்பு இருந்தது . மக்களின் கரவொலி விண்ணை தொடும்படி
இருந்தது .சினிமா மற்றும் மேடை நாடகங்கள் பூஷ்வா கலை என்று
கூறி புறக்கணித்தனர் . அது தவறு .
மேடை இல்லை.
மைக் இல்லை.
மைக் அப் இல்லை .
வசனம் கம்மி .
மைமிங் அதிகம் .
பல சமூக பிரச்னைகளை வைத்து நாடகம் போட்டோம் . வெற்றியும்
கண்டோம் .
தண்ணீர் பிரச்சனை
வரதட்சணை பிரச்சனை
வெட்டி வேலை -விவசாய பிரச்சனை
முதலாளி- நில உடைமையாளர் கூட்டு
அவசர அவசியம் ( காசு வாங்கும் பொது கழிவு )
மசாலா பத்திரிகை-கள்
அரசியல் கட்சிகளின் ரெட்டை வேடம்
ஊழல்
போலீஸ் அடக்குமுறை
தர்ம ஆஸ்பத்திரி அவலம்
வேலை இல்லா திண்டாட்டம்
--------------------------------------
இப்படி பல கருக்களை கொண்டு வீதி நாடகங்கள் போட்டோம் . இதில்
பணிவுடன் சொல்கிறேன் என் பங்கு அதிகம் . நான் இயக்குனராகவே
பணியாற்றினேன் . மற்றும் தமிழகம் முழுவதும் வீதி நாடக பயற்சி
முகாம்களை நடத்தி உள்ளோம் . புரட்சிகர பாடல்களுக்கு நடனம் கற்று
கொடுக்க பட்டது . இதிலும் என் பங்கு அதிகம் என்பதை பணிவுடன்
சொல்கிறேன். நடிகர்கள் அனைவரும் நன்கு ஆதரவு தந்தன்ர் . நாடங்களுக்கு
முடிவில் நடிகர்கள் ஸ்டீல் ஆக நிற்க அப்போது 2 அல்லது 4 வரி பாடல்
பாடப்படும். இதில் " தீ " என்ற மக்கள் கவிஞர் பங்கு அபராம் . மேலும்
நான் சினிமா ரசிகன். அதனால் எங்கள் நாடகங்களில் "ஸ்லோ மோஷன் "
டெக்னிக் நானே முதலில் கொண்டு வந்தேன் . மக்கள் இடையே நல்ல
வரவேற்பு இருந்தது.
1986-ல் கோவையில் பாசிச எதிர்ப்பு மாநாடு பிரமாண்டமாக நடந்தது .
மிக பெரிய மாநாடு . ஆயிர கணக்கில் மக்கள் . 2 நாட்கள் நடைபெற்ற
மாநாட்டில் இரவு கலை நிகழல்ச்சி தான் . நானே அதன் பொறுப்பை
ஏற்றுக்கொண்டேன். சில தோழர்கள் என்னை முன்மொழிந்தன்ர் .
இந்த மாநாட்டிற்கு நான் எழுதிய நாடகங்கள் ....
வீதி நாடகங்கள் மேடையில் போடப்பட்டன .
நான் உருவாக்கிய நாடகங்கள்
1. முன்பு ஒரு காலத்திலே
2. ஊர்வலம்
3. "கை "ராசி ராஜூவ் ( ராஜிவ் பிரதமர்)...!
4. மூவர்ண விலங்குடிப்போம் ...!!!
அம்மா ...!
அப்பா !!
நான் என் மூளையை கசக்கி பிழிந்து 10 நாட்களில் முடித்து விட்டேன் .
1. முன்பு ஒரு காலத்திலே ....
இதில் சிறுவர்-சிறுமியர் நடித்தது . காட்டில்
நடக்கும் கதை . எல்லோரும் மாஸ்க் போட்டு நடித்தார்கள்.
குட்டி முயலே புரட்சி தலைவன் . பிரமாதமாக நடித்தார்கள்,
2. ஊர்வலம் : இது நாட்டிற்கு இப்போது தேவையான
ஊர்வலம் எது என்று சொல்வது . சிறுவர்களே நடிதத்தார்கள் .
" புரட்சி ஓங்குக " ஊர்வலத்தையே தேர்வு செய்வர் .
3. "கை " ராசி ராஜூவ் ...! இது வேலை இல்லா திண்டாட்டம் ,
வறுமை , ஊழல் , போன்ற பிரச்சனைகள் வைத்து கொண்டு
மக்களை " 21-ம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்வது "
நகைச்சுவை வடிவில் போட பட்டது .
4. மூவர்ண விலங்கோடிப்போம் ...! ! !
இது மிகை இன்றி சொல்ல வேண்டும் என்றால் இது எனது
" மாஸ்டர் பீஸ் ". சுமார் 3 மணி நேரம் நடக்கும் இந்த நாடகத்திற்கு
கதை -வசனம்- மைமிங்- இயக்கம் எனது . ஆனால் ஒன்றை
சொல்லியே தீர வேண்டும் . ஒவ்வொரு காட்சி முடியும் போதும்
2 அல்லது 4 வரி பாடல் தேவை பட்டது . தீ தான் எல்லா பாடல்களும்
எழுதினார் . இந்த நாடகத்தை வீடியோ எடுக்க வில்லையே என
மிகவும் வருந்துகிறேன். இப்படி ஒரு இந்திய சுதந்திர நாடகம்
நான் எழுதியது இல்லை . இனியும் அந்த வாய்பு கிடைக்குமா
என தெரிய வில்லை.
நடிகர்கள் சிறப்பாக நடித்தனர் .
காந்தி சைவ புலியாக நடித்தார்.
சுதந்திர போராட்டம் துவங்கி அவசர நிலை
பிரகடனம் வரை கதை சொல்லபட்டது .
நக்ஸல்பாரி இயக்கம் சிறப்பாக அமைந்தது .
நான் இந்த கதையை எழுத பயன்படுத்திய ஒரே
புத்தகம் ....
இன்றய இந்தியா
ரஜினி பாம்தத் .-ஆசிரியர்
நாடகத்திற்கு இப்படி ஒரு கை தட்டல் வரும் என்று நான் நினைத்து கூட
பார்க்கவில்லை .எனது படைப்புகளில் இதுவே உச்சம் . இதை வீடியோ
எடுக்காமல் இருந்தது மிக மிக பெரிய தவறு . இப்போது நான் உணர்கிறேன்
வீதி நாடகம் என் உயிர்.
பல நுணுக்கங்களை புகுத்தி உள்ளேன் .
வீதி நாடகம் வாழ்க ....!
கலை மக்களுக்கே ...!!
R.சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் சத்யன் சின்ன சேவகன்
26-08-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!