Saturday, 4 February 2017




                                   மால் கலாச்சாரம் ???

            சத்யன்      சத்திய பூ     இதழ் 03   பூ 04    05-02-2017

உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளில் புதிதாக மால் கலாச்சாரம்
பரவி வருகிறது.
சென்னை உட்பட பல இந்திய நகரங்களில் மால்கள் பல முளைத்து உள்ளன.
இந்த மால்கள் யாருக்காக ??
நிச்சயமாக மக்களுக்கு ஆனது அல்ல. உலகமயமாதல்...தாராளமயமாக்கம்
எல்லாம் சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினருக்கே.
ஆம் !
ஐ.டி ஊழியர்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்க பட்டவை.
ஐ.டி ஊழியர்களை கசக்கி பிழிந்து நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது.
அவர்களின் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது.
ஆம் !
இந்த நிலயையில் நகரகங்ளின் மால்கள் யாருக்காக ?
இந்த சிறுபான்மை ஊழியர்களுக்காகவே !
சினிமா டிக்கெட் ரூபாய் 150 முதல் ரூபாய்  500 வரை !
ஒரு கப் காபி ரூபாய் 150...!
ஒரு பாப்கார்ன் ரூபாய் 150...!
ஐஸ் கிரீம் ரூபாய் 200...!

இது மட்டுமல்ல.
மால்களில் உடைகள் 10,000....20,000 என்ற விலையையில் விற்கப்படுகின்றன.
சாதாரண மக்கள் மால்களுக்கு செல்ல முடியுமா ???
நிச்சயம் இல்லை.
மால்கள் மக்களின் காசை படு வேகமாக, சாமர்த்தியமாக சுரண்டுகின்றன.
இந்த பெரும் மால் கலாச்சாரம் நமது கலாச்சாரம் அல்ல.
அந்நிய கலாச்சாரமே !
இதை அரசும் கட்டுப்படுத்தவில்லை.
எந்த அரசியல் கட்சியும் இதை எதிர்த்து ஒரு சிறுஅறிக்கை கூட வெளியிடவில்லை.
எனவே....
மக்கள் தான் இதற்கு முடிவு கட்டவேண்டும்.
அந்நிய கலாச்சாரத்தை அடியோடு வேரறுக்க வேண்டும்.
எனவே....உரக்க முழங்குவோம் ...
மால் கலாச்சாரம் ஒழிக !
மால் சுரண்டல் ஒழிக !!


மால்...மால் குல்மால் !!!

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!