உழைப்பா ? சிந்தனையா ?
சத்யன் சத்திய பூ இதழ் 05 பூ 04 07-02-2017
மிக முக்கியமான கேள்வி ?
மனிதனுக்கும் விலங்குக்கும் என்ன வேறுபாடு ?
புன்னகை. ஆடல் . பாடல். என சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இவை அனைத்தும் தவறு. இவை மனிதனாக மனிதன் (குரங்கு)
மரியா பின் ஏற்பட்ட விளைவுகள்.
அடிப்படையில் மனிதனை விலங்கிடம் இருந்து பிரிப்பது எது ?
காலம் காலமாக இந்த கேள்வி உள்ளது.
பதில் காண்பதற்கு முன் மனிதனுக்கும், விலங்கிற்கும் உள்ள ஒற்றுமையை
பார்ப்போம் . 4 விஷயங்கள் மனிதனுக்கும் விலங்கிற்கும் பொதுவாக உள்ளது.
1. உணவு மற்றும் மலம்
ஆம். மனிதனும் சரி, விளங்கும் சரி தாம் உயிர் வாழ உணவை உட்கொள்ள வேண்டும்.
மேலும் அது ஜீரணமாகி பின் மலம் கழிக்க வேண்டும்.
இது தான் முதல் ஒற்றுமை.
2. உறக்கம்
ஆம். மனிதனானாலும் சரி, விலங்கு ஆனாலும் சரி திங்கமும் கட்டாயம்
உறங்க வேண்டும். ஆம். இதுவும் பொதுவே.
3 இனப்பெருக்கம்
மனிதனும் சரி, விலங்கும் சரி தம் இனத்தை பெருக்க உடலுறவு கொள்வதும்
பொதுவே.
4. பயம்
ஆம். விலங்கு எப்போதும் தனது பாதுகாப்பு கருதி ஒருவித பய உணர்வுடனே
வாழ்கிறது. மனிதனும் தனக்கு பாதுகாப்பு தேடி இன்று வரை பய படுகிறான் .
மேலும் இயற்கை சக்தி கண்டு மனிதன் இன்றுவரை ஒருவித பய உணர்ச்சியில்
தான் உள்ளான்.
பயமும் மனிதனுக்கும், விலங்கிற்கும் பொதுவான ஒரு குணமே.
அப்படியானால் மனிதனை விலங்குகள் இடத்திலிருந்து வேறுபடுத்துவது
எது ? எது ?? எது ???
இந்த கேள்விக்கு விடை காண்பது சற்று கடினமான விஷயம்.
ஆனால் உபநிஷிதம் (வேதாந்தம்) தெள்ள தெளிவாக விடையை கூறுகிறது.
அதற்கு முன் மார்க்சிசம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
உழைப்பு ...உழைப்பு மட்டுமே மனிதன் விலங்குகள் இடமிருந்து வேறுபட
அடிப்படை காரணம் என கூறுகிறது.
இது மேலோட்டமாக பார்த்தால் மிகவும் சரி என்றே தோன்றும்.
ஏங்கல்ஸ் இதுகுறித்து விரிவாக புத்தகம் எழுதி உள்ளார். அதில் இருப்பது
ஒண்டு மட்டுமே.
ஆம். உழைப்பு ! உழைப்பு !! உழைப்பு !!!
இங்கு தான் நான் ஒரு கேள்வி எழுப்புகிறேன் .
மனிதனை (குரங்கை) உழைக்க சொல்லி தூண்டியது எது ?
இந்த கேள்வி மிக மிக முக்கியம்.
ஆம். மனிதனை உழைக்க சொல்லி தூண்டியது சிந்தனையே !
திட்டமிட்ட உழைப்பிற்கு சிந்தனை என்பதே முன்நிபந்தனை.
விலங்குகள் கூட தம் உணவிற்காக ஒரு குறிப்பிட்ட அளவு உழைக்கின்றன.
ஆம். வேட்டை ஆடுகின்றன.
ஆனால் மனிதன் மட்டுமே ஒரு சமூக விலங்காக திட்டம் போட்டு
உற்பத்தியில் ஈடுபடுகிறான்.
இதற்கு அடிப்படை தேவை சிந்தனை !
ஆம்.
சிந்தனை ! சிந்தனை !! சிந்தனை !!!
எனவே மனிதனை விலங்கிடம் இருந்து வேறுபடுத்துவது சிந்தனையே !
மார்க்ஸ் உழைப்பை உயர்த்திப்பிடிக்க கூறினார்:
பிறக்கும் ஒவ்வரு குழந்தையும் 2 கைகளுடன்
பிறக்கின்றன !
ஆம். உழைப்பதற்காகவே 2 கைகள் .....
ஆனால் நான் சொல்கிறேன் :
பிறகும் ஒவ்வரு குழந்தையும் 2 கைகள் மற்றும்
ஒரு மூளையுடன் பிறக்கின்றன.
ஆம். ஆம். ஆம். உறுதியாக நம்மால் சொல்ல முடியும்.
விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்துவது சிந்தனையே !
மனிதன் சமூக விலங்காக இருந்தாலும் அவனது திட்டமிட்ட உழைப்பிற்கு
காரணம் சிந்தனை மட்டுமே.
எனவே உங்களது நெஞ்சில் பதிவு செய்யுங்கள்.
உங்களது மூளையில் பதிவு செய்யுங்கள் .
மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு
சிந்தனையே !
சிந்தனையே !!
சிந்தனையே !!!


No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!