வேதம்
சத்யன் சத்திய பூ இதழ் 04 பூ 04 06-02-2017
வேதம் என்றால் என்ன ?
வேதத்தை பற்றி பேசினாலே பிற்போக்கு தனம் என ஒரு கருத்து
நிலவுகிறது. மறுபுறம் வேதம் எல்லாவற்றையும் உள்ளடக்கியது என ஒரு
சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர்களும் வேதத்தை புரிந்துகொண்டவர்கள் அல்ல.
வேதம் என்றால் என்ன ?
அறிவு ....ஞானம் !
அவ்வளவு தான். எனவே அறிவை பற்றி, ஞானத்தை பற்றி பேசினால் அதுவே
வேதம்.
வேதம் மொத்தம் 4.
ரிக் ....யஜுர் ...சாம ...அதர்வண வேதங்கள்.
இவற்றை பற்றி ஆராய்வது இப்போது எனக்கு நோக்கமல்ல.
வேதம் என்றால் அறிவு என்பதை மட்டுமே பதிவு செய்ய விரும்புகிறேன்.
அடுத்து வேதாந்தம் என்றல் என்ன ?
வேதத்தின் அந்தம் அதாவது முடிவு வேதாந்தம் எனப்படும்.
இதுவே சமஸ்க்ரிதத்தில் உபநிஷிதம் என்று அழைக்கப்படுகிறது.
மொத்தம் 108 உபநிஷிதம் உள்ளன. அதில் 18 மிகவும் பிரபலமானவை.
வேதம் படிக்கிறோமோ இல்லையோ வேதாந்தம் அதாவது உபநிஷிதம்
கட்டயாம் ஒவ்வரு இந்துவும் அல்ல ஒவ்வரு மனிதனும் படிக்கச் வேண்டியது
அவசியம். இங்கு ஒரு கருத்தை வலியுறுத்த விருபுகிறேன். ஈசுவசிய உபநிஷிதம்
கூறும் ஒரு வாக்கியத்தை பார்ப்போம்.
ஈசுவசியம் இதம் சர்வம் !
ஆம் ! ஈஸ்வரன் என்பவன் இங்கும் எங்கும் சர்வ வியாபியாக உள்ளான்.
ஆம். கடவுளை உலகிற்கு வெளியே சொர்க்கத்தில் தேட முடியாது. கடவுள்
இந்த அரிய படைப்பினுள்ளேயே இருக்கிறார்.
கடவுள் = கடந்து + உள்ளவர்
கடவுள் = உள்ளே + கடந்தவர்
ஆம். கடவுள் எல்லா இடங்களிலும் கடந்து உள்ளார். அது மட்டுமல்ல மனிதனின்
மனதில் உள்ளே கடந்தவர்.
எனவே கடவுளை எங்கும் தேட வேண்டியதில்லை.
நீங்களும் கடவுள் !
நானும் கடவுள் !!
குறிப்பு : வேதாந்தம், புராணம், இதிகாசம் போன்றவற்றை பிறகு பார்க்கலாம்.
வேதாந்தத்தின் சாரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு
கடல். நேரம் வரும் பொழுது கடலில் குதிப்போம் ! முத்துக்களை
எடுப்போம் !!

No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!