Friday, 3 February 2017



                                             ஐ.டி ஊழியர்களுக்கு
                               
                          உடனடி தேவை ஒரு தொழிற்சங்கம் !

              சத்யன்    சத்திய பூ      இதழ் 02  பூ 04     04-02-2017

உலகமே கிராமம் !
உலகமயமாக்கம் !!
தாராளமயமாக்கம் !!!
எங்கே செல்கிறது உலகம் ?
பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் உச்சிக்கு சென்று விட்டது.
பெரும் பண முதலை நிறுவனங்கள் ஒரு புதிய யுக்தியை கையில்
எடுத்துள்ளன.
ஆம் !
நல்ல சம்பளம் என ஆசைகாட்டி இளைஞர்களை வேலைக்கு சேர்கின்றன
ஐ.டி நிறுவனங்கள்.
சம்பளம் என்னவோ அதிகம் தான். ஆனால் சுரண்டல் என்பது உச்சத்திற்கு
சென்று விட்டது. அப்பட்டமான சுரண்டல்.
8 மணி நேர வேலை !
8 மணி நேர ஓய்வு !!
8 மாய் நேர உறக்கம் !!!
இதற்காக தங்கள் ரத்தம் சிந்தி போராடினார்கள் தொழிலாளர்கள் !
நூற்றாண்டுக்கு மேல் ஆகி விட்டது. செங்கொடி பிறந்தது.
ஆனால் இப்போது முளைத்திருக்கும் காளான் ஐ.டி இதுவரை
தொழிலாளர்கள் போராடி பெற்ற சலுகைகள் அனைத்தையும் காற்றில்
பறக்கவிட்டுவிட்டன.
கழுதைக்கு முன்னே ஒரு குச்சியில் கேரட் கட்டிவிட்டு கழுதை  மீது
ஏறிக்கொண்டு கழுதையை ஏமாற்றி முன் செல்லும் சுயநலவாதி போல் தான்
ஐ.டி நிறுவன அதிகாரிகளின் சுரண்டல்  வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
கேரட் நல்ல சம்பளம் !
கழுதை ஐ.டி ஊழியர்.
ஆம் !
சம்பளம்  மட்டும் போதுமா ?
8 மணி நேர வேலை என்பது என்ன ஆச்சு ?
தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை ஊழியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.
சில சமயம் இடைவிடாமல் 24 மணி நேரம் கூட உழைக்க சொல்கின்றது இந்த
கடைந்து எடுத்த அந்நிய நிறுவனங்கள். வாரத்தில் 2 நாள் விடுமுறை என்பதும்
காற்றில் பறக்க விட படுகிறது.
தொழிலாளி என்ன மனுஷனா ? இல்லை மாடா ??
ஓய்வு இன்றி கண் விழித்து உழைத்து தங்களது உடல்நிலையை கெடுத்து
கொண்டு இருகுகின்றனர் ஐ.டி தொழிலாளர்கள்.
இப்படி வேலைப்பார்த்தால் 10 அல்லது 15 வருடத்தில் நிச்சயமாக அவர்கள்
பல்வேறு நோய்க்கு ஆளாக நேரிடும்.
பணம் மட்டும் வாழ்க்கையல்ல.!
உடல் ஆரோக்கியம் அதைவிட மேலானது !!
இதை யாரும் மறுக்க முடியாது .
ஆனால் இவர்களுக்கு என்று  எந்த தொழிற்சங்கமமும் இல்லை.
இந்த பேச்சு எடுத்தாலே வேலை நீக்கம் தான்.
இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்.
தொழிற்சங்கம் அவசியம் தேவை. ஐ.டி ஊழியர்களுக்கு தெரியாதது
இல்லை.
பணத்திற்காக உயிரை விட முடியாது.
100 ஆண்டுகளுக்கு முன் போராடி வாங்கிய சலுகைகள், உரிமைகள்
ஆகியவற்றை நாம் இழக்க முடியாது .இழக்க கூடாது .
எனவே ...
ஐ.டி தொழிலார்களே ....!
உங்கள் ரத்தம் உறிஞ்ச படுகிறது.
உங்கள் ஆரோக்கியம் செத்துக்கொண்டு இருக்கிறது..
உடனே தொழிற்சங்கம் ஆரம்பிக்க முயலுங்கள்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !
போராடுங்கள் !!
போராட்டம் இன்றி வாழ்கை இல்லை.
உடனே ...
தொழிற்சங்கம் கட்டுங்கள் !
ஐ.டி தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் !!
வெற்றி நமதே !!!
உழைப்போம் 8 மணி நேரம் !
ஓய்வு எடுப்போம் 8 மணி நேரம் !!
உறங்குவோம் 8 மணிநேரம் !!!
இது நமது உரிமை.
இது நமது உரிமை.
இதில் கை வைக்க அனுமதிக்க கூடாது.
எனவே ...
உலக ஐ.டி தொழிலாளர்களே ஒன்று படுங்கள் !
WORKERS OF ALL COUNTRIES UNITE !!!

 

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!