Friday, 27 January 2017




      
    

வரவேற்கப்பட வேண்டிய தடை !
   பெப்சி-கோலாவிற்கு தடை !!
சத்யன்     சத்திய பூ      பூ 3  இதழ் 04   28-01-2017

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தை ஒரு உலுக்கு உலுக்கியது . போராட்டத்தில் பல நல்ல அம்சங்கள் நிறைந்து இருந்தன. மாணவர்கள் போராட்டம் கற்று கொடுத்தவை ஏராளம். ஆனால் மிக முக்கியமான ஒரு உப-விளைவு உண்டு.
ஆம் !
அதுதான் அந்நிய குளிர்பானங்கள் மீது வெறுப்பும் அவற்றை பகிஷ்கரிபதும் தான்.
பெப்சியும் கோலாவும் தமிழகத்தில் தமது சுரண்டலை ஏகபோகமாக நடத்தி வருகின்றன. இதை இந்த போராட்டம் எதிர்த்து மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நாம் என்ன குடிக்க வேண்டும் என தீர்மானிப்பது நமது உரிமை. நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதும் நமது உரிமை.
சிற்றுண்டிக்கு நாம் சுண்டல்,பொரி, வடை, பஜ்ஜி, முறுக்கு
கடலை உருண்டை, பக்கோடா ஓமபொடி, மிக்சர் என சாப்பிட்டு வந்தோம். தற்போது குழந்தைகள் ஜன்க் உணவுவகைகளை சாப்பிடும் பழக்கம் வந்துள்ளது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல. பிசா, பர்கர்கள் என அந்நிய சிற்றுண்டியை சாப்பிடும் போக்கு உள்ளது. சிறுவர்களில் பலருக்கு உடல் பருமன் வருவதற்கு (Obesity) வருவதற்கு அந்நிய உணவு வகைகளே karanam endru  பல மருத்தவ ஆய்வுகள் வந்த்விடன. அதே போல் நாம் குடிக்க நமது நாட்டு பானங்கள் உள்ளன. பொவண்டோ, மோர், இளநீர் , பத நீர், பாதம் பால், பழச்சாறு ஆகியவற்றை குடிக்கலாம். குடிக்க வேண்டும். அதே போல் சிற்றுண்டியில் சமோசா, பாணி பூரி,பேல் பூரி, பப்ஸ் ஆகியவற்றை ஏற்று கொள்ளாலாம்.
எனவே மக்கள் நமது கலாச்சாரத்தை விட்டுகொடுக்க கூடாது. இது பற்றிய விழிப்புணர்வை ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு அளித்துள்ளது.
தமிழ் நாடு வணிகர் சங்கம் மற்றும் தமிழ் நாடு வியாபாரிகள் சம்மேளனம் மார்ச் முதல் தேதி முதல் தமிழகம் முழுக்க பெப்சி-கோலா விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
தமிழன் விழித்து கொண்டான் !
இந்த தடை நூறு சதவிதம் வரவேற்க படவேண்டும் !
இந்த தடை சற்று விரிவாக இருக்கவேண்டும் என்பதே என் கருத்து. இந்தியாவில் பிசா மற்றும் பர்கர் விற்பனை தடையும் வரவேண்டும். KFC க்கு இங்கு என்ன வேலை ?
மக்கள் yocika வேண்டும். நாம் நம் கலாச்சாரத்தை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது.
எனவே தேச பற்றுடன் இருப்போம் !
தேச கலாச்சாரத்தை உயர்த்தி பிடிப்போம் !!
பெப்சி-கோலா தடையை மனமுவந்து வரவேற்போம் !!!
ஜெய் ஹிந்த் !
ஜயது பாரதம் !!
ஜயது மனுக்குலம் !!!
28-01-2017
NOTE:     OUR SNACKS AND DRINKS ARE MUCH MORE HEALTHIER, TASTY
                AND MUCH CHEAPER!
                WHY SHOULD WE FOLLOW FOREIGN CULTURE?
                LET US HAIL INDIAN CULTURE!
                LET US HAIL TAMIL CULTURE!!

         



No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!