Monday, 30 January 2017

MANAVARGALE...!




      

                     மாணவர்களே ...!
         புதிய கட்சியை துவக்குங்கள் ...!
           
சத்யன்      சத்திய பூ     இதழ் ௦7   பூ 3  3௦-௦1-2௦17

காலம் கூவிகிறது . காலம் அழைக்கின்றது. வந்துவிட்டது நல்ல தருணம். களத்தில் இறங்க இதுவே சமயம்.
ஆம். ஆம். ஆம்.
மாணவர்களே ......
ஜல்லிக்கட்டு போராட்டம் உங்களை ஒன்று குவித்தது. வரலாறு காணாத ஒற்றுமையை காண்பித்தீர்கள். உங்களது சக்தியை நீங்கள் இப்போது உணர்ந்து இருப்பீர்கள். உங்களது உறுதியை உலகிற்கு காட்டி விட்டீர்கள். உங்களது போராட்டம் நூறு சதவிதம் வெற்றியே பெற்றது. வெற்றி பெற்ற தருணத்தில் அரசின்
அடக்குமுறையை சந்தித்து விட்டிர்கள். அரசு தொடர்ந்து நீங்கள் கூடாத வண்ணம் மெரீனாவில் 144தடை உத்திரவை பிறப்பித்து விட்டது. மாணவர்கள் என்றால் எந்த அரசுக்கும் பயம்தான். நீங்கள் மெரீனாவில் கூடி ஒரு புதிய அரசியல் கட்சியை துவங்க இருந்ததாகவும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கூட்டத்தை தவிர்த்து விட்டதாகவும் இன்று செய்தி தாளில் படித்தேன். தடை போட்டால் என்ன ? கவலை படாதீர்கள்.தடை ஒரு நாள் நீங்கும். இல்லைஎன்றால் வேறு இடம் உள்ளது. உங்களது முடிவில் உறுதியாக இருங்கள். காலம் பார்த்து ஒரு அரசியல் கட்சியை துவக்குங்கள். தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சியை உங்களால் தான் நடைமுறை படுத்த முடியும்.
அது மட்டுமல்ல....
உங்களது கட்சிக்கு திட்டம் ...அறிக்கை அவசியம். நீங்கள் உறுதியுடன் போராடினால் இந்த பூமியை சொர்கமாக மற்ற முடியும். முதலில் உங்களது நீண்ட கால திட்டமாக இந்தியாவை ஒரு உண்மையான சோசியலிச குடியரசாக மாற்றுவது என்று தீர்மனாம் செயுங்கள். இதுவே உங்களது இலக்கு.
அடுத்து குறுகிய கால திட்டம் .
இதில் 3 அம்சங்களை முடிவெடுங்கள் . மிக முக்கியம் இது. இதற்காகவே நீங்கள் படிபடியாக போராட வேண்டும்.
1.     கல்வி :   இன்று கல்வி எனபது சாதாரண மக்களுக்கு எட்டமால் உயரே உள்ளது. பணம் ...பணம் மட்டுமே
கல்வி பெற தகுதியாக உள்ளது. இதை மாற்ற வேண்டும். எல்லோருக்கும் உயர் மட்ட கல்வி வரை கல்வி இலவசமாக இருக்கவேண்டும். தேவையெனில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் தேச உடமை ஆக்குங்கள் .
ஆம் !
அனைவர்க்கும் உயர்மட்டம் வரை இலவசக்கல்வி !!
2.     மருத்துவம் : இந்த நாட்டில் உயர் நவீன மருத்துவ வசதி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான். அரசு மருத்துவமனைகள் வெறும் பணம் பறிக்கும், குப்பை தொட்டி போல் நோய் பரப்பும் இடங்களாக உள்ளது. இந்த நிலை மாற நிச்சயம் வேண்டும். மக்களுக்கு இலவச நவீன மருத்துவ வசதி நிச்சயம் அவசியம். ஆம். அனைத்து பெரும் மருத்துவ மனைகளும் தேச உடமை ஆக வேண்டும்.
அனைவர்க்கும் இலவச நவீன மருத்துவ வசதி !!

3.     இட ஒதிக்கீடு : நாடு விடுதலை அடைந்து 7௦ ஆண்டுகள் ஓடி விட்டன. சமுதாயத்தின் ஏற்ற இரக்கம் குறைந்த பாடில்லை. ஏழை ஏழையாகவே உள்ளான். அவன் எந்த ஜாதியை சேர்ந்த போதும் ஏழை மட்டும் ஏழையாகவே உள்ளான். இது நிச்சயம் மாற வேண்டும். எனவே பொருளாதார அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏழைக்கு முதலிடம் தர வேண்டும். இதை அடைவது நமது லட்சியமாக இருக்க வேண்டும். இதற்கு பல சாதிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும். ஆனால் மாணவர் ஒற்றுமை எதையும் வெல்லும். எனவே உடனடியாக நமது நாட்டில் பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு வரவேண்டும்.
ஆம்.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு !!!

மாணவர்களே ...!
நீங்கள் புரட்சிகர மாணவர்கள் ...!
மேலே சொன்ன அடிப்படையில் புதிய கட்சியை துவக்குங்கள் ! ஒற்றுமையுடன் இருங்கள் !! தேவைப்படும் போது போராடுங்கள் !!!
வெற்றி நிச்சயம் !!!!
இந்தியாவை மாற்றுங்கள் !!!!!
தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றுங்கள் !!!!!
உங்களால் முடியும்.
உங்களால் மட்டுமே முடியும்.
வாழ்க மாணவர் சமுதாயம் !
வாழ்க மாணவர் ஒற்றுமை !!
ஜயது பாரதம் !! !!
ஜயது மனுக்குலம் !! !! !!

சத்யன்                       30-01-2017                       


No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!