சத்யன் சத்திய பூ பூ 03 இதழ் 01 25-01-2017
கட்சிகளுக்கு பணம் ???
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்க்கவும் . புள்ளி விவரங்களுடன் கட்சிகள் பெரும்
நன்கொடையை (?) அம்பலப்படுத்தியுள்ளன.
சில புள்ளி விவரங்கள் ....
*** கடந்த 11 வருடங்களில் அணைத்து கட்சிகளும் 11,367 கோடி ரூபாய் நிதியை
பெற்றுள்ளன. (அம்மாடியோவ் !)
*** இதில் 7,833 கோடி ரூபாய் விவரம் இல்லாத நபர்களிடம் பெற்றது .(?) இது
எந்த கணக்கிலும் வரவில்லை. (?)
*** 1,835 கோடி ரூபாய் தெரிந்த நபர்களிடம் இருந்து வந்தது. (கணக்கில் உள்ளது.)
*** காங்கிரஸ் கட்சி 3,323.39 கோடி ரூபாயை கணக்கில் வராமல் பெற்றுஉள்ளது.
*** பிஜேபி 2,125.91 கோடி ரூபாயை அனாமத்தாக கணக்கில் வராமல் பெற்றுஉள்ளது.
***பிராந்திய கட்சிகளின் வரவு 652% (அனாமத்து ,கணக்கில் வராமல்) உயர்ந்து உள்ளது.
***தேசிய கட்சிகளின் வரவு 313% (கணக்கில் வராதது) உயர்ந்து உள்ளது.
நிற்க.
எல்லா கட்சிகளின் கணக்கும் செமையாக உள்ளது. எல்லாம் கோடி கணக்கில் தான்.
இவர்களுக்கு பெயர் தெரியாமல் பணம் கொடுப்பது யார் ?
சந்தேகம் இல்லை. பெரும் பணமுதலைகள் தான்.
இப்படி இருக்கையில் பணமுதலைகளுக்கு சாதகமாகவே இவர்கள் சட்டம் போடுவார்கள்.
மக்களுக்கு பட்டை நாமம் தான்.
இது ...இந்த கட்சிகள் மக்களுக்கு ஆனதல்ல !
பணக்கார முதலைகளின் கைக்கூலியே !!
மக்கள் விழித்து எழ வேண்டும் !!!
சரியான அம்பலப்படுத்தல் சத்தி.
ReplyDeleteThanks Comrade...!
ReplyDelete